அத்தியாயம்-12
Thank you for reading this post, don't forget to subscribe! காருண்யா வீட்டில் பேசிவிட்டு வந்த சிவராமனிடம், “என்னப்பா சட்டுனு எனக்கு காருண்யாவை கல்யாணம் பண்ணி வைக்க பேசிட்டிங்க. அவ ஐயர் பொண்ணு. நாம ஐயனாரை கும்பிடறவங்க. எப்படிப்பா மேட்ச் ஆகும்?
நீங்க இந்த சாதி எல்லாம் பார்க்கலையா?” என்று கேட்டான்.
“ஏன்டா… நம்ம வீட்ல உனக்கு சாதி சான்றிதழ் வாங்கி வச்சா, விவரம் தெரிந்த வயசுல நீயா போய், ‘No Caste Certificate’ வாங்கிட்டு வந்து நீட்டினவன் நீ. நீ சாதி பத்தி பேசறியா?” என்று கேட்டார் சிவராமன்.
ஆம் நினைவு தெரிந்த நாளில் இவ்வாறான சான்றிதழ் பெறலாமென்ற செய்தி அறிந்ததில், முதல் ஆளாக சென்று மாற்றி கொண்டான் ராவணன்.
“சரிப்பா நான் அப்படி செய்ததால் நீங்க சாதி பார்க்க மாட்டிங்க. ஓகே… பட் காருண்யா வீட்ல என்னை ஏற்றுக்காம நோ சொன்னா அங்க என் ஈகோ முளைக்காதா?” என்று பேசினான்.
“டேய்… உன்னால தான் பிரச்சனையே ஆரம்பம்னு பேசிக்கறாங்க. கொஞ்சம் யோசித்து நல்லதா முடிவெடுப்பாங்க” என்று ரோகிணி பதில் தந்தார்.
“நீங்க ஏதாவது சொல்லுங்க. காருண்யா எல்லாம் என்னை முதல் முறை ஆபிஸில் பார்த்தப்ப பேயை பார்த்த மாதிரி பின்னடைஞ்சா. இதுல அவளுக்கு என்னையே கட்டி வைக்க கேட்டா அவ எஸ் சொல்லவே மாட்டா.” என்றான் ராவணன்.
“அவங்க சொல்றதை விடு. அப்பா அங்க பேசிட்டு வந்துட்டார். தாலிகட்ட சொன்னா செய்வியா மாட்டியா?” என்றார் ரோகிணி.
ராவணன் அன்னை அருகே அமர்ந்து, “எனக்கு என்ன சொல்லறதே தெரியலைம்மா. இப்பவும் காருண்யாவை என் நெய்பரா ரொம்ப பிடிக்கும். என் சைல்வுட் பிரெண்டா ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா அவ மேல லவ் எல்லாம் வந்ததில்லை. இப்ப அவ லைப்ல என்னால குழப்பம்னு நினைக்கும் போது, என்னாலயே தீர்வும் கொடுக்க முடியும்னா தாலி கட்டுவேன்.
அந்த அரை மண்டையன் ஹரனுக்கும் அவன் கூட வந்த மாமனுக்கும் பாடம் புகட்டுவேன். ஆனா….” என்று தன் மனதில் தோன்றியதை உரைத்தான்.
“நீயும் காதலிக்கலை. அவளும் காதலிக்கலை. ஆனா பாரு விதி உங்களை வச்சி விளையாடுது. இதுல வாயிருக்குன்னு இஷ்டத்துக்கு பேசியிருக்காங்க. காருண்யா சம்மதிச்சா, வேற எதுவும் யோசிக்காத” என்று ரோகிணி கூற, சிவராமனோ, “ராவணன் சப்போஸ் சீனிவாசன் கல்யாணத்துக்கு மறுத்துட்டா, நான் வேற வரனை உடனே பார்ப்பேன். உனக்கும் இந்த வயசுல கல்யாண பண்ணிட்டா நல்லது.” என்றார் கறாராக.
“ஆக மொத்தம் என் பேட்சுலர் லைப்புக்கு எண்ட் கார்ட் போட போறதை என்னிடமே சொல்லறிங்க. சூப்பர் அப்பா.” என்றான்.
வீட்டில் வீடு நிறைய ஆட்கள் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சி தாண்டவமாடும் என்று எந்த விதிமுறையும் இல்லை. மூன்று பேர் கொண்ட சிறு குடும்பத்திலும் வாழும் மக்கள் நினைத்தால் மகிழ்ச்சியாக வாழலாம். அப்படி தான் இந்த மூவர். அவர்களுக்கு மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டுமென்ற அடிப்படை அறிவு நிறையவே இருந்தது.
அடுத்த நாள் காலை வரை சீனிவாசன் எதுவும் சிவராமனிடம் விவரமாய் பேசவில்லை. கோவிலுக்கு சென்று பெருமாள் சந்நிதியில் மனதார பெண்ணின் வாழ்க்கைக்கு அவர் எடுக்கப்படும் முடிவை பகவானிடம் சொல்லிவிட்டு பிறகு சிவராமனிடம் சொல்லவே மாலை வந்தார்.
ஆனால் வீட்டில் ராவணன் இல்லை. “நீங்க பேசியது போல காருண்யாவுக்கு ராவணனை விவாஹம் செய்து வைக்கலாம்.” என்று கூறினார்.
“ரொம்ப சந்தோஷம் அண்ணா” என்றார் ரோகிணி.
சிவராமன் வீட்டில் அங்கும் இங்கும் பார்வை பதித்தார் சீனிவாசன். “ராவணன்?” என்று கேட்க, “அவன் ஈவினிங் பஸ் ஏறிட்டான் சீனிவாசன் சார். நாளைக்கு வேலைக்கு போகணும்னு கிளம்பிட்டான்” என்று கூறினார்.
“அப்படியா? காருண்யாவை மணக்க விருப்பம் சொன்னாரா?” என்று கேட்டார். நேற்று கடைசியாக சிவராமனும் ரோகிணியும் தானே காருண்யாவை தங்கள் மாட்டு பொண்ணாக கேட்டனர். ராவணன் நெற்றி சுருங்க, ஏதோ யோசித்தானே?!
“இதுவரை காருண்யாவை காதலிக்கவோ கல்யாணம் செய்யுற நோக்கத்திலோ பார்த்ததில்லை. என்னால விழுந்த பழியை நானே களைவதாக இருந்தா, உங்க விருப்பம் போல செய்யுங்கன்னு சொல்லிட்டான்” என்றதும் சீனிவாசன் அகமகிழ்ந்தார்.
“அப்பறம் கல்யாணம் எல்லாம் எப்படி?” என்று கேட்டார்.
“உங்களுக்கு எப்படி செய்யணும்னு தோண்றுதோ அப்படியே செய்யலாம் சீனிவாசன்.” என்றார் சிவராமன்.
“முதல்ல சிம்பிளா கல்யாணம் செய்ய நினைச்சேன். ஆனா எங்காத்துலயும் காருண்யா ஒரே பொண்ணு. உங்காத்துலயும் ராவணன் ஒரே பையன். சிம்பிளா எதுக்குன்னு தோன்றுச்சு. இரண்டு பேரையுமா தப்பும் தவறுமா பேசவச்சி சின்னசிறு பசங்களோட மனசை வதைச்சாங்க. அதுக்காகவே விவாஹத்தை நல்லா சிறப்பா செய்யணும்.
எங்காத்து பக்கம் நிறைய சடங்கும் சம்பிரதாயமும் இருக்கு. அதெல்லாம் எதையும் ஸ்கிப் செய்யாம மத்தவா அசரடிக்கற லெவலுக்கும், உங்க முறைப்படியும் சேர்த்தே செய்வோம். தப்பா பேசினவா எல்லாம் வாயடைச்சி நிற்கணும்.” என்றார்.
“நீங்க சொன்னது எல்லாம் சரி சீனிவாசன். ஆனா கடைசியா சொன்னிங்க பாருங்க. மத்தவங்க பார்க்க செய்யணும்னு. அது வேண்டாம். நாம நம்ம ஆசைக்கும், நம்ம பசங்க நன்மைக்கும் எப்பவும் போல செய்யலாம். அப்ப தான் உணர்வுப் பூர்வமா இருக்கும். மத்தவங்க பேசவோ, பார்க்கவோ நாம எதையும் ஆரம்பிக்கலை.” என்று சிவராமன் உரைக்க, சீனிவாசனுக்கு கண்ணீர் மழையே வந்தது.
ஹரிஹரனின் வீட்டாளுக்கும் ராவணன் தந்தை சிவராமனுக்கும் எத்தனை எத்தனை வித்தியாசம். மனிதர்கள் தான். ஆனால் எத்தனை விதமானவர்கள் இந்த லோகத்திலா ஜனித்து உள்ளார்கள்?! என்ற ஆச்சரியம்.
“சரிங்க அப்ப வர்றோம். காருண்யாவுக்கு கல்யாண தேதியை குறிச்ச அதே தேதியில் ராவணனோடு விவாஹம் நடக்கும்.” என்று எழுந்தார்.
ரோகிணியோ, “காருண்யா வேலைக்கு போகலையா அண்ணா” என்று கேட்க, “இல்லைம்மா.. இங்க இரண்டு மூன்று நாள் இருப்பதா சொல்லறா. நாங்களும் இருக்கட்டும்னு விட்டாச்சு” என்றார்.
அதன்பின் வீட்டுக்கு வந்தவர் அமிர்தத்திடம் உரைத்தார். பக்கத்தில் தான் காருண்யா அமர்ந்திருந்தாள். எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். மகிழ்ச்சியோ, ஆராவாரமோ, வெட்கமோ, நாணி கோணி என்று எதுவும் இம்முறை இல்லை.
எல்லாம் மணமானால் நன்றாக இருப்பாளென்று பெரியவர்கள் நினைத்தார்.
ராவணன் சென்னை சேரும் முன்னரே ரோகிணியால் காருண்யா வீட்டில் கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டார்கள் என்ற செய்தியை உரைத்திட, தன் கல்யாண சேதியை அறிந்துக்கொண்டான். அவனுக்குமே, தன் பால்ய சிநேகிதி, தன் பள்ளி தோழி, தன் பக்கத்து வீட்டு பெண், அவளே மனைவியாக வருவதில் பெரிதாக எவ்வித உவகை உணர்வையும் மனதிற்கு கடத்தவில்லை.
அப்படியே அடுத்த நாள் அலுவலகம் வந்து சேர, காருண்யா இடத்தில் வெற்றிடமாக வரவேற்க, அவள் இரண்டு நாள் இருந்துவிட்டு வருவதாக, தாய் சொன்ன தகவல் நினைவுக்கு வந்தது.
எப்படியும் ஜவஹரிடம் செய்து காட்டிய வேலையால் அடுத்து நாலு நாட்கள் வரை வேலை குறைவாக இருக்கும். அதற்குள் வருவாள். இல்லையேல் அலுவலக மெயில் மூலம் அவளை குடைந்திடுவார்கள் என்று புரிந்தது.
அவன் நினைத்தது போல மூன்றாவது நாள் தான் வேலைக்கு வந்தாள்.
முன்புயிருந்ததை விட, கூடுதல் மௌனம். ராவணனும் அதற்கேற்றது போல இருந்தான்.
ஒரே இடத்தில் வேலை, திருமண ஏற்பாடு வேறு பெற்றவர்கள் அடுத்தடுத்த வேலையில் ஆரம்பிக்க, இங்கே இவர்களோ பேசிக்காமல் கடந்தார்கள்.
ஒரே இடத்தில் சாப்பிட கேன்டீனில் அமர, அங்கும் ரோஸ்லின் தான் அதிகம் பேசுவாள்.
காருண்யா திடமாய் நடமாடினாள். ரோஸ்லின் கூட “ஹரன் விஷயம் என்னாச்சு” என்று கேட்க, “மேரேஜ் நின்றுடுச்சு” என்று சர்வ சாதாரணமாய் உரைத்துவிட்டு வேலை பார்த்தாள்.
ரோஸ்லின் தான் கூடவே வந்து, “எப்படிடி தாங்கின?” என்று உச்சுக்கொட்ட, “மாப்பிள்ளை தான் கேன்சல். ஆனா கல்யாணம் அதே முகூர்த்தத்தில் நடக்கும். அப்பா வேற மாப்பிள்ளை பார்த்துட்டார்.” என்றாள்.
இது மேலும் அதிர்ச்சியை தந்தது.
“நீ எப்படி மூவ் ஆன?” என்று மயக்கம் வராத குறையாக கேட்டாள்.
“நேக்கு அப்பா பாட்டி தான் எல்லாம். அவாளை கஸ்டப்படுத்தி பார்க்க மாட்டேன்” என்று நியாயம் பேசினாள்.
இதுவே தான் ராகவியிடமும் உரைத்தது. ராகவியோ “சரி.. மாப்பிள்ளை பேரு என்ன?” என்று கேட்க, “ம்ம் ராவணன்” என்று கூற, பச் கேலி பண்ணாத” என்று சிரித்து நடந்தாள்.
ராவணன் காருண்யா மணமக்களாக மாற போவது தெரியாமல் அவர்களை பற்றி பேச்சும் எழுந்தது.
ஹரனோடு பேசப்பட்ட திருமணம், ராவணனால் தடையானது என்று பரவியது.
ராவணனோ ‘ராமன் ஆண்டா எனக்கென்ன ராவணன் ஆண்டா எனக்கென்ன? பேசறவங்க பேசிட்டே இருங்கடா’ என்று சலிப்படைந்து வேலையை காதலித்தான்.
அவனுக்கு இருக்கும் பொறுப்பு. அதற்காக தானே பெங்களூரில் இருந்து இங்க வந்து பணிப்புரிவது. அதனால் செய்வதை சரியாக செய்ய மெனக்கெடுத்தான்.
நாட்களும் காருண்யா திருமணத்தை காண வெகுவாய் பறந்தது.
காஞ்சிபுரத்தில் தெரிந்தவர் தெரியாதவர் என்று எல்லோரிடமும் ராவணன் காருண்யா திருமணம் பேசப்பட இவர்களாகவே வாய்ப்பை தந்தனர்.பத்திரிக்கை அடித்து, ஊரில் பாதி பேருக்கு மேலாக அலைச்சல் பாராமல் கொடுத்தனர்.
ராவணனும் காருண்யாவும் தங்களுக்கு தாங்களாக தனி கார்ட் அடித்து கொடுத்துக்கொள்வதாக சொல்லி விட்டார்கள். அதற்காக ஒருமுறை ராவணன் காருண்யாவுக்கு போனில் அழைத்தான். அவளோ ‘உங்களுக்கு எது பிடிக்குதோ அந்த கார்டை செலக்ட் பண்ணுங்கோ. நேக்கு எதுனாலும் சம்பந்தம்.” என்று பதில் தந்தாள்.
ராவணன் அவனாக கார்டை அடித்து, வந்து பக்கத்தில் கொடுக்க, “இதென்ன என்னிடம் நீட்டறேள். நீங்களே சொல்லி போர்ட்ல மாட்டிடுங்க” என்றாள்.
வெட்கமா சங்கடமா ஏதோவொன்று அவளை கஷ்டப்படுத்தும் என்று ராவணன் நோட்டீஸ் போர்டில் பின் செய்து குத்திவிட முடிவெடுத்து முதலில் தலைமை அதிகாரியை கண்டார்.
ஜவஹருக்கு மட்டும் நேரில் தனியாக சந்தித்து நிலவரத்தை கூறி பத்திரிக்கை நீட்டினான்.
ஜவஹரோ ”மாஸா அல்லா. உன்னையும் காருண்யாவையும் இணைத்து வாழ வைக்க விதி என்ன அழகா விளையாடி இருக்கு பார்றேன்.
பெங்களுரில் வேலை செய்த பையன். இங்க வந்து பிராஜெக்ட் முடிக்க உதவியது.
இப்ப நீயா உன் பிரெண்டை நிக்காஹ் செய்ய போறியா?” என்று சந்தோஷமாய் கேட்டார்.
“என்னால அவ மேரேஜ் டிராப் ஆகியிருக்கு. அதோட எங்க வீட்லையும் அவங்க வீட்லையும் இந்த தீர்வை ஏத்துக்கிட்டாங்க. அதனால பிரெண்டை மேரேஜ் பண்ணியாக வேண்டிய கட்டாயத்துல வந்துட்டேன்” என்று ஒருவிதமாக மழுப்பி புன்னகைக்க முயன்று பத்திரிக்கையை நீட்டினான்.
“சேர்ந்து வைக்கலையா? போ… காருண்யாவை அழைச்சிட்டு வந்து கொடு.” என்று உந்த, ராவணன் நகருவதாக தெரியாமல் சிந்திக்க, ஜவஹரே காருண்யாவை அழைத்தார்.
“என்ன சார்?” என்று வந்தவளிடம் திருமண வாழ்த்தை தெரிவித்து கை நீட்ட, ராவணனை கண்டு ”தேங்க்ஸ் சார்” என்றாள்.
“என்னம்மா டல்லாயிருக்க? என்னடா ஹரிஹரன்னு ஒருத்தனை மாப்பிள்ளையா இங்கயிருக்கறவங்களுக்கு பெயரை சொல்லிட்டு ராவணனை கைகாட்டப் போறோமேனு நினைக்கறியா? அதெல்லாம் யோசிக்காத. விதி உங்களை சரியா தான் சோர்த்து வச்சியிருக்கும்” என்றார்.
‘இங்க எங்கிருந்து விதி வந்துச்சு. எல்லாம் ஆபிஸ்ல வேலை செய்து இந்த டேட்டல முடிங்கோன்னு நீங்க கழுத்தை நெறிக்காத குறையா நின்றேள். இவாளும் வேலை தான் முதல்லன்னு என்னை நாழி கழிச்சு போக வச்சா. சனிஸ்வரன் பிடிச்சிட்டான். ராவணேஸ்வரன் மொத்தமா பிடிச்சி தொலைக்கறான்.’ என்று பொறுமுவது நிச்சயம் ஜவஹர் காதில் விழுந்திருக்காது.
காருண்யாவும் ராவணனும் வெளிவரும் போது, “மேரேஜ் அனவுன்ஸ்மெண்ட் சேர்ந்து சொன்னா தான் நல்லாயிருக்கும். கேண்டீன் வச்சி சொல்லிடலாமா?” என்று அபிப்ராயம் கேட்டான். இன்னும் பத்து நிமிடத்தில் மதிய உணவு நேரம் நெருங்குகின்றதே.
“என்னவோ பண்ணுங்கோ. என்னிடம் ஏன் கேட்கறேள்” என்று காருண்யா கொட்டிதீர்த்து அவளிடம் வந்தாள்.
ராவணனோ ‘கடவுளே… இப்ப நான் எனக்கு கல்யாணம் வேணும்னு உன்கிட்ட கோட்டானா? அதுவும் இவளோட? என்னைக்காவது மேல வருவேன்ல அன்னிக்கு ஓட ஓட விரட்டறேன் பாரு’ என்று கடவுளை மிரட்டி வேலையை கவனித்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
சைலண்ட் ரீடர்ஸ் உங்க கருத்தை தளத்திலோ அல்லது முகநூலிலோ போடலாம். Forum comments view ஆகும். நான் கதை போட்டிருந்த அதே பகுதியில் leave reply இடத்துல கருத்து போடலாம்.
வாசிக்கும் அன்பா ரீட்ஸுக்கு நன்றியீம் பேரன்பும்.
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 renduperum pidikadha kalyanatha nokki poranga parpom evangalukulla kaadhal varudha ellaiya nu🧐🤔🥰
Raavanan nu Peru vecha saamiyayum meratuviya
ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 12)
நான் சொல்லலை.. இவ அதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டா. அதுவும் ராவணனுக்கு நிச்சயமா சரி பட்டு வர மாட்டா. ராவணன் சொன்ன மாதிரி, இவளுக்கெல்லாம் முன்னாடி உருகி உருகி, பின்னாடி கேரக்டரை ஸ்பாயில் பண்ற மாதிரி பேசற அரை மண்டையன்ஸ் வாய்ச்சா தான்
இதுங்க எல்லாம் ஈன்னு இளிச்சுக்கிட்டு பின்னாடி பின்னாடி போய் நிக்கும்.
ராவணனுக்கு என்ன குறைன்னு, இப்படி யாருக்கோ வந்த விருந்தாட்டம் பட்டும் படாம நடந்துக்கிறாளாம்.
ரொம்ப ஈஸியா இவளுக்கு கிடைச்சிட்டதால அவனோட அருமை தெரியலை போல. இல்லைன்னா ராவணேஸ்வரனை போய் சனிஸ்வரனோட கம்ப்பேர் பண்ணுவாளா…? இவளோட கேரக்டரையே அந்த ஹரிஹரன் வீட்டு ஆளுங்க வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியிருக்காங்க. ஆனா, இவ என்னடான்னா, அந்த வீணாப்போனவனை நினைச்சு தானா உருகிட்டிருக்கா. போடி போடி கூறுகெட்டவளே.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Story Elam super sissy paavam nama ravanan dha karunya kita maatikitu mulikiran🤣🤣
Adiegalaa ethunga rendum vendaa veruppaa kalyanam pannikka poghuthu ….ethu theryiyaama pesittu thiriyiraanga….
Super super. Story going well. Very intresting. This childhood friends now become couples. So happy. Intresting sis.
Wow 👌👌👌👌👌 waiting for nxt epi 😍
Karunya pannathukku kadavul enna seithar Mr ravanan
Karunya pannathukku kadavul enna seithar Mr ravanan.
Enna indha karunya over ah pesura ah ravanan ah saneeswaran oda compare panra ivaluku avolo kastam na ethuku marriage ku avanga appa kita ok sollanum poi andha aramandaiyan hariharan ah convince pannanum illa ya vera yara chum aramandaiyan ah marriage pannika vendiyathu
Athu than solluvaga nallathu ku yae kalam illa nu annaiku keezha vizhundhu varatum vittu irukanum and iva vomit pannum pothu pavam parkama ennaku enna irundhu irukanum vandhu ta over ah pesa
பாவம் ராவணன்.காரு too much
Iva ena lusa pidichuruku pidikala num sola mateka olungaum pesa mateka ravanan dan pavam bt vaippu kidaikela iva pesura mathiri avanum pesanum apo dan intha lusu ku arivu varum
Paavam paya maatikittu muzhikka poran
nice!!!