Skip to content
Home » தீரனின் தென்றல்-39

தீரனின் தென்றல்-39

தீரனின் தென்றல் – 39

Thank you for reading this post, don't forget to subscribe!

“டேய் மச்சான் என்னடா சொல்ற? கொஞ்சம் அமைதியா இரு எல்லாம் பொறுமையா பேசிக்கலாம் டா…” தீரன் எங்காவது சென்று விடுகிறேன் என்று சொல்ல அதிர்ந்து போய் குமார் கேட்க

“பின்ன என்ன டா பண்ண சொல்ற… இவ இப்படி ஏதாவது பண்ணுவா னு தான் செக்கியூரிட்டில இருந்து அவரு இவளுக்காக கூட்டிட்டு வந்த ஆட்டோ டிரைவர் வரைக்கும் எனக்கு நம்பிக்கையான ஆளை ஏற்பாடு பண்ணி வச்சும் இவளும் குழந்தையும் அவ்வளவு தூரம் போயிடலை னு மூளைக்கு தெரிஞ்சாலும் இவங்க ரெண்டு பேரையும் கண்ல பார்க்குற வரைக்கும் என் உசுரு என்கிட்ட இல்லடா குமாரு…

இத்தனை வருஷம் தென்றலும் குழந்தையும் எங்க இருந்தாங்களோ எப்படி இருக்காங்களோ னு நினைச்சு நினைச்சு மருகிட்டு கிடந்தேன்… இனியும் இவங்களை தொலைச்சிட்டு என்னால தேட முடியாது டா…” என்று ஆதீரன் தீர்க்கமாக கூற

“அண்ணே அதுக்காக நீ இப்படி போறேன் னு சொல்றது சரியா?” ரூபி கேட்க

“எனக்கும் வேற வழி இல்ல மா… இவங்க இனி எங்க எப்படி இருக்காங்க னு நினைச்சு ஒவ்வொரு நொடியும் நான் சாகுறதுக்கு தென்றல் அபூர்வாவோட இதே வீட்ல பத்திரமா பாதுகாப்பா இருக்கட்டும்… நான் இவ கண்ல படாம எங்கயாவது தூரமா போயி நிம்மதியா வாழ்ந்திடுவேன் மா..” என்று ஆதீரன் சொல்ல பொன்னிக்கு இன்னும் மகள் மீது கோபம் ஏறியது.

இன்னுமே தென்றல் ஆதீரனை நம்பாத பார்வை பார்க்க அது புரிந்தது போல “உண்மைய தான் சொல்றேன்… இனிமே கம்பெனியை மதன் பார்த்துப்பான்… நான் அதுக்கான எல்லா வேலைகளையும் பண்ணிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் கிளம்பிடுவேன்…

ஆனா அதுவரைக்கும் இந்த மாதிரி எந்த வேலையும் இவ பண்ணக்கூடாது.. அதுமட்டும் இல்ல நான் இங்க இருக்கிற வரைக்கும் என் பொண்ணு கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவேன் அதை தடுக்க எந்த தகிடுதித்தமும் பண்ணக்கூடாது…” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிய ஆதீரன் அங்கிருந்து மதன் ஃப்ளாடிற்கு சென்றுவிட்டான். அவனை தொடர்ந்து குமாரும் சென்றுவிட

“இப்போ சந்தோஷமா உனக்கு? ஏன்டி.. ஏன்டி இப்படி இருக்க? நீயும் சந்தோஷமா இல்லாம அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்திட்டு… உன்னை நான் தான் பெத்தேனா தென்றல்? உன் அப்பா உன்னை இப்படி தான் வளர்த்தாரா? உன் அப்பா சாக அந்த பையன் தான் காரணம் னு இத்தனை தடவை சொல்றியே… ஒரு வேளை அந்த மனுஷன் உயிரோட இருந்திருந்தா இப்போ தான் டி அவரு உசுரு போயிருக்கும்…

இதோ பாரு தென்றல்… உனக்கு எப்படி உன் அப்பா அன்பு கிடைச்சதோ அதேமாதிரி இந்த குழந்தைக்கும் கிடைக்கனும்ல.. உனக்கு பொண்ணா பிறந்ததை விட இந்த குழந்தை என்னடி பாவம் பண்ணுச்சு… இனியும் நீ மனசு மாறலைனா எப்படியோ போ… உன்னை பெத்த பாவத்துக்கு உயிர் இருக்குற வரைக்கும் இந்த குழந்தைக்காக உங்க கூட இருந்துட்டு போறேன்…” என்று தென்றலை திட்டிவிட்டு பொன்னி சென்றுவிட அவரை சமாதானம் செய்ய ரூபி பின்னாலேயே ஓடி விட்டாள்.

தன் தந்தையை தேடி அபூர்வா ஓடி விட இதுவரை எந்த சந்தர்ப்பத்திலும் இப்படி தன்னை பேசாத தாய் இன்று பேசியதில் மனம் உடைந்து நின்ற இடத்திலேயே பொத்தென்று அமர்ந்து விட்டாள் தென்றல். அருகில் இருந்த சித்ரா வேகமாக அவள் அருகில் குனிந்து தென்றல் “ஒன்னும் இல்லைல… இந்த தண்ணீ குடி” என்று தண்ணீரை எடுத்து கொடுக்க வாங்கி சிறிது தொண்டையை நனைத்துக் கொண்டவள்

“நான் அப்படி என்ன தப்பா செய்துட்டேன் சித்ரா… இத்தனை நாளா நான் இவங்களுக்காக தானே வாழ்ந்தேன். இன்னைக்கு வந்த அவனுக்காக பரிஞ்சு பேசி என்னை அவனோட வாழ சொன்னாங்க…

எப்படி சித்ரா என்னால முடியும்? சரி… அவங்களுக்கு நாம தான் தேவையில்லை போல னு எல்லாரோட வாழ்க்கையிலயும் இருந்து விலகி போக நினைச்சா அதுக்கு… அதுக்கு…” என்று தென்றல் வார்த்தை தடுமாற திக்க

“தென்றல் கொஞ்சம் அமைதியா யோசி தென்றல்… உன்னை யாரு இங்க வேணாம் னு சொன்னாங்க… எங்க எல்லாருக்கும் நீ வேணும் தென்றல். நீயும் ஆதீ சாரும் சேர்ந்து வாழ எங்க எல்லாருக்கும் ஆசை தான்.. அதுக்காக நாங்க யாருமே உன்னை ஃபோர்ஸ் கூட பண்ணலையே.. நீ ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்த?” சித்ரா கேட்க

“நான் என்ன பண்ணட்டும் சித்ரா… சின்ன வயசுல இருந்து நான் உயிரா நினைச்சு வாழ்ந்தவன் தான் அந்த ஆதீரன்… ஆனா என் அப்பாவை அவமான படுத்த அவன் என்னோட காதலை பயன்படுத்திக்கிட்டான் சித்ரா… உங்களுக்கு தெரியுது சித்ரா அவனுக்கு மட்டுமே சொந்தமாக வேண்டிய என்னை ஒருத்தன் தொட்டுட்டான்… நான் கலங்கமாகிட்டேன் னு நினைச்சு சாகப் போனேன் சித்ரா. ஆனா அவன் என்னை தொட்டப்போ ஏதோ அவன் உயிரோட கலந்து என் வாழ்க்கையே முழுமையாகிடுச்சு னு அவ்வளவு சந்தோஷப்பட்டேன்.

அவன் மேல இருந்த நம்பிக்கைல அவனே இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம் னு சொன்னப்போவும் அவனோட லட்சியத்தை அடைய காத்திருக்கேன் னு சொன்னேன்… ஆனா என் காதலை வச்சு என் அப்பாவை காயப்படுத்துறது தான் அவன் லட்சியம் னு தெரிஞ்சப்போ செத்துட்டேன் சித்ரா…

அப்போ அவன் மேல இருந்த கோபத்துல தான் ஊரை விட்டு வந்தேன். அப்போ அப்பா இறந்ததும் அதுக்கு அவனோட துரோகமும் என்னோட செய்கையும் தான் காரணம் னு நினைச்சு குற்றவுணர்ச்சி ல தவிச்சிட்டு இருந்தேன். அப்போ தான் அத்தையோட இறப்பு செய்தியும் கேள்வி பட்டு.. இன்னும் இன்னும் குற்றவுணர்ச்சி அதிகமாச்சு சித்ரா…

அதனால தான் அம்மா இத்தனை வருஷம் எத்தனையோ தடவை அவனோட சேர்ந்து வாழறதை பத்தி ஜாடை மாடையா பேசுனப்போ தட்டிக் கழிச்சு கோபமா பேசி னு தடுத்திட்டே இருந்தேன். இப்போ… அவனே என் கண் முன்னால அவன் வந்து இருந்தா எனக்கு இன்னும் கில்ட்னஸ் அதிகமாகுது சித்ரா… என்னால நிம்மதியா மூச்சு விடக் கூட முடியலை சித்ரா… அதான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்.” என்று தென்றல் அழ எப்படி ஆறுதல் சொல்ல என்று புரியாமல் விழித்த சித்ரா மதனுக்கு அழைத்து நடந்ததை கூறினாள்.

ஆதீரன் முடிவை கேட்டு அதிர்ந்த மதன் அவனுக்கு அழைப்பு தொடுக்க அழைப்பை ஏற்கவில்லை ஆதீரன்.

அவசரமாக வீட்டிற்கு தேடி வந்து மதன் ஆதீரனை பார்த்து “பாஸ்.. ஏன் பாஸ் நீங்க இப்படி சொன்னீங்க?” என்று ஆற்றாமையுடன் கேட்க அனைவர் முன்பும் கூறிய அதே பதிலை கூறிய ஆதீரன்

“எனக்கு இதை விட நல்ல ஆப்ஷன் தெரியலை மதன்… ஆஃபீஸ் இனிமே நீயே பார்த்துக்கோ.. தென்றலுக்கு வொர்க் எல்லாம் சொல்லிக் கொடு கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கோ…” என்று அவனுக்கு பொறுப்புகளை சொல்லிக் கொண்டே போக குருவி தலையில் பனங்காய் வைத்தது போல முழித்தான் மதன்.

“டேய் ஆதீரா..‌ அப்போ நீ எங்கடா போவ? டேய் மச்சான்… இத்தனை வருஷம் நான் கூட இல்லாம உனக்கு எப்படி தவிப்பு இருந்துச்சோ அதே போல தான் டா நானும் தவிச்சிட்டு இருந்தேன். தென்றலுக்கும் நீ தேவை… அதைவிட அப்புக்குட்டி… அவளுக்கு நீ வேணும் டா…” என்று குமார் சொல்ல

“நான் எங்கேயும் போகலை மச்சான்.. தூரம் இருந்தாலும் உங்களை விட்டு என்னைக்கும் விலகி இருக்க மாட்டேன் டா… மதன்… வர்மா நார்த் ல ஒரு ப்ராஞ்ச் ஸ்டார்ட் பண்ண போறாரு.. அதை கவனிச்சுக்க நம்பிக்கையான ஆள் வேணும் னு சொல்லிட்டு இருந்தாரு. அந்த ப்ராஞ்ச் தான் இப்போ நான் பார்த்துக்கிறேன் னு சொல்லிட்டேன்…” என்று ஆதீரன் சொல்ல

“பாஸ்… இந்த கம்பெனி.. உங்க கனவு பாஸ்..‌” என்று மதன் சொல்ல

“என் கனவை விட என் பொண்ணும் தென்றலும் பாதுகாப்பா இருக்கனும் மதன்..” என்று பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் ஆதீரன்.

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

2 thoughts on “தீரனின் தென்றல்-39”

  1. Kalidevi

    oru appava avan yosichi inga irunthu ponum ninaikiran , epo thendral purinjitu aathi kuda seruva ivlo varusham enga irukanga theriyama irunthan ipo papa va pathutu eppadi iruka poran aathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *