Skip to content
நம்முள் பூத்த காதல்...
 
Notifications
Clear all

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்க

1 Posts
1 Users
0 Reactions
150 Views
Daffodills
(@daffodills)
Member Moderator
Joined: 10 months ago
Posts: 127
Topic starter  

பெயர் சொல்லி எழுதுபவர் மிருதுளா அஸ்வின்

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே

ரம்யா பார்த்திபன் நட்பு அழகு. என்னடா இது கதையை விட இதை முதல்ல சொல்லறேன்னு யோசிக்கறிங்களா? முதலில் ஈர்த்தது. அதனால்...

 ரம்யாவுக்கு பொண்ணு பார்க்க ஹரிரஞ்சன் வர்றான்.‌ முதல்லயே ரம்யா என் தோழனோடு என் நட்பை புரிந்து செயல்படும் மனப்பக்குவம் கொண்டவராக இருந்தா மட்டுமே மணக்க சம்மதிப்பேன்னு க்ளியரா சொல்லறா. ஹரிரஞ்சனும் ஈர்க்கும் விதமாக பேசி ரம்யா மனசுல காதலை விதைக்கறான்.

 நாயகன் பார்த்திபன் சோகமாக நடமாட, தோழி காரணம் கேட்க நழுவறான்.

அவன் மனதிற்குள் சொல்லப்படாத காதல் சிவாஞ்சலி மீது. யார் அந்த சிவாஞ்சலி? மாடலிங் துறையில் பார்த்திபன் வாழ்வில்  எப்படி நுழைந்து இந்த காதலை சுமக்க வச்சிட்டு காணாம போனவள்? சிவாஞ்சலி திரும்ப வருவாளா?  அவளுக்கு திருமணமாகியிருந்தும் பார்த்திபனை ஏற்பாளா?

சர்வேஷ் இறப்பு வலித்தாலும் அவன் ஆசைகள் எண்ணங்கள் இன்னமும் இங்கே இயல்பா ஏற்க முடியாத ஒன்று. அதுக்கு அவன் தேர்ந்தெடுத்த மீடிவு விபரீதமானது.

கதை அழகா கொண்டு போனீங்க மா. வாழ்த்துகள்.‌

https://praveenathangarajnovels.com/community/mark-8-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/


   
ReplyQuote