Notifications
Clear all
என்னை சிலையாக்கி விட்டாய்?!
Praveena-காதல் கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
432
Views

நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு
தொங்கும் காதணியை காதுக்கு ஊஞ்சலாக்கி
விற்புருவத்திற்கு வாள் போல் கூர்தீட்டி
துள்ளும் விழிகளுக்கு மையிட்டு
கண்ணாடி வளையல் சப்தம் எழுப்ப
முத்துமாலையை கழுத்துக்கு அணிவித்தே
முகம் நிறைய புன்னகை பூசி நின்று
வெள்ளி கொலுசொலி சினுங்க
உன்னிடம் வந்து நின்றேன்
நீ சிலையாக
நீயோ சாதாரணமாக
கேசத்தை கலைத்து பெயருக்கு வாரியப்படி
ஒற்றை கைக்கடிகாரத்தை
உந்தன் இடது கையில் கட்டியவாறு
மொத்த கம்பீரத்தையும் அழகையும்
உனக்கே சொந்தமாக்கி
என்னை சிலையாக்கி விட்டாய்...!
-- பிரவீணா தங்கராஜ் .
Posted : 16/05/2024 4:09 pm
Leave a reply
Forum Jump:
Forum Information
- 137 Forums
- 2,174 Topics
- 2,472 Posts
- 4 Online
- 1,479 Members
Our newest member: Mahalakshmi Chandrasekar
Latest Post: தீரனின் தென்றல் - 47
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed