காதலென்றால்..
Praveena-காதல் கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
370
Views
விழிகளில் தொலைத்து இதயத்தில் அடைத்து
நேச முகம் மலர்ந்து
இருவருக்கும் ஒற்றை ரசனை பகிர்ந்து
நெடு நேர பிதற்றல் பேச்சில்
ஒன்றுமில்லை என்றாலும்
சுவாரஸ்யத்துக்கு பச்சனையின்றி
கணநேர சந்திப்புக்கு கால் கடுக்க
காத்திருந்து காதல் என்றே பெயரிட
நேரமில்லை எனக்கு
மணத்தில் இணைந்து இறுகிய முகத்தோடு
உனக்கும் எனக்கும் ரசனைகள் வேறுப்பட்டு
பிடித்த பிடிக்காத எல்லாம் ஏற்று
கொஞ்சம் கொஞ்சம் கெஞ்சல் கொஞ்சலோடு
பஞ்சணையில் முகம் சிவந்து
வருடங்கள் பல கடந்து வாழம் சமயம்
சிறு சிறு சண்டை முகதூக்கம்
நீண்ட நேர ஊடலுக்கு பின்
ஒரு வித கை அழைப்பில்நீ அழைக்க
உன் நெஞ்சில் அடைக்கலமாகும் என் மனம்
இதற்கு பெயரும் காதலென்றால்.... மறுப்பாயா?
- வீணா ராஜ்.
ReplyQuote
Leave a reply
Forum Jump:
Forum Information
- 137 Forums
- 2,149 Topics
- 2,435 Posts
- 1 Online
- 1,470 Members
Our newest member: Ananthi praveena
Latest Post: கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-3
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed