அத்தியாயம்-10
Thank you for reading this post, don't forget to subscribe!அதிகாலை மிருதுளா தான் முதலில் விழித்தது.
வலது கையால் கண்ணை கசக்கி எழுந்தவளுக்கு இடது கை யாரோ பிடித்து வைத்திருக்க, தன் கையை கோர்த்திருப்பது அம்ரிஷ் என்றதும் இதயப்பகுதியில் கைவைத்து சுற்றி நோட்டமிட்டாள்.
தொண்டையில் எச்சிலை விழுங்கி அம்ரிஷ் கையிலிருந்து தன் கையை விடுவித்துக்கொள்ள போராடினாள்.
“இஷா” என்ற முனங்கலோடு கைப்பிடிமானம் கூடுதலானது.
மிருதுளாவிற்கு என்ன செய்வதென்று விளங்காமல், பொறுமையாக ஒவ்வொரு விரலாக நீக்கி கையை நழுவியெடுத்தாள்.
சோஷியல் மீடியா, டிவி பேட்டியில் அம்ரிஷை இஷா எப்படி பேசி வைத்திருக்கின்றாள். அவள் பெயரை உறக்கத்திலும் உளறுபவனை கண்டு வியந்தாள்.
மெதுவாக “சாக்ஷி… சஹானா… மென்பனி” என்று ஒவ்வொருத்தியாய் எழுப்பினாள்.
எவளும் அசைந்தப்பாடில்லை. மென்பனியை இரண்டு ‘கிள்கிள்ளவும் எழுந்தவள் கொட்டாவி விடுத்து “என்னடி… சன்டே தானே தூங்கவிடேன்” என்று படுக்க சென்றவளை, தோளை தட்டி “மென்பனி எழுந்து சுத்தியிருக்கற இடத்தை பாரு. டான்ஸ் பண்ணிட்டு அப்படியே தூங்கியிருக்கோம்.” என்றதும் ஆண்கள் இருப்பதை கண்டு “சோ வாட்.” என்று உறங்க சென்றாள்.
“சாக்ஷிக்கு பெர்த்டே இப்படியே தூங்கி வழியுங்க டி” என்று கூறியதும் மென்பனி விசுக்கென எழுந்தாள்.
சஹானாவை எழுப்பி குளிக்க சென்றார்கள்.
சாக்ஷி எழுந்து கண்ணை கசக்கும் போது ஆதேஷ் மட்டும் காபியை கையில் வைத்து “குட் மார்னிங் ஹாப்பி பெர்த்டே” என்றான்.
ஆதேஷ் கையோடு பெட்காபியை வேறு நீட்டவும் “தேங்க்யூ சோ மச். விஷ் பண்ணியது விட, காபி கொடுத்திங்க பாருங்க தேங்க்ஸ் எ லாட்” என்று பருக எடுக்கும் நேரம், வேதாந்தோ காபியை பிடுங்கிவைத்து, “பெர்த்டே அதுவுமா பிரஷ் பண்ணாம. முதல்ல போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க” என்று அதட்டவும் சாக்ஷி உதடு பிதுங்கி, குளிக்க சென்றாள்.
“பத்மாவை விட மோசமானாவரா இருக்கிங்க” என்று உதிர்த்தவளை கண்டு புருவம் சுருக்கி யாரது என்பது போல பார்த்தான்.
“எங்கம்மா பத்மா அப்பா குருபிரசாத்” என்றதும் “ஓ ஓகே நல்லது” என்று கூறவும் சாக்ஷியோ நமுட்டு சிரிப்போடு தங்கள் அறைக்கு சென்றாள்.
அவளும் குளித்து முடித்து கொண்டு வந்த டிரஸை அணிந்து, அவளது போனை எடுத்தாள்.
“மம்மி டேடி விஷ் பண்ண ஆசையா இருப்பாங்க, பச் பேசணும் போல இருக்கு” என்று போனையே கையில் வைத்து கூறினாள்.
மென்பனியோ திடுக்கென பிடுங்கி வைத்து, அதெல்லாம் ஆன்ட்டி அங்கிள் எல்லாம் காலையிலேயே கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணி உன்னை வாழ்த்திட்டு இருப்பாங்க. அதோட சேர்த்து மிருதுளாவோட சித்தி வேற அர்ச்சித்துட்டு இருப்பாங்க மூடிட்டு உட்காரு.” என்றதும் தமிழ் வரவும் “கொஞ்ச நாள் போன் இல்லாம வாழறாளா?” என்று மேதாவியாய் பேச முயன்றாள். என்ன முயன்றும் ‘மூடிட்டு உட்காரு’ என்ற வார்த்தையை தமிழ் கேட்டுவிட்டானே.
“ரைட்டர் இப்படிலாம் பேசுவாங்களா?” என்று கேட்டு அவள் பதிலை எதிர்நோக்க, “ரைட்டரும் மனுஷங்க தான்பா. பிரெண்ட்ஸ் இருக்கறப்ப டீசன்ஸி மெயின்டெயின் பண்ணணும்னு அவசியமா? நீங்க ஏன் அநியாயத்துக்கு பயங்கற ரூல்ஸோட, ஒரு மாதிரி இருக்கிங்க?” என்று வந்ததிலிருந்து அதிகப்படியான முதிர்ச்சியை கொண்டிருக்க கேட்டாள்.
அதிகப்படியான அமைதியை தான் முதிர்வு என்கின்றாளென்று புரிந்த தமிழோ, “தனியா பனிப்பிரதேசத்துல இருந்ததால பேச்சு ஆட்டோமெடிக்கா குறைந்திடுச்சு” என்று அம்ரிஷை தேடிச் சென்றான்.
அம்ரிஷோ தனியாக வேதாந்த் அக்கவுண்ட் மூலமாக முகநூலில் சோஷியல் மீடியாவில் ட்விட்டர் இன்ஸ்டாவில் இஷா தன்னை பற்றி பேசியதும், அதற்கு கீழ் வந்த இழிவான கமெண்ட்ஸ், தன்னை கேலியாக சித்தரித்த மீம்ஸ், என்று வரிசையாக பார்த்தபடியிருந்தான்.
அனைத்து கமெண்ட்ஸும் அவனை இழிவாக போடவில்லை. சிலது இஷா மீது வன்மத்தோடும் வந்திருந்தது.
‘உனக்கு எங்க அம்ரிஷ் அதிகப்படி.’,
‘எங்க அம்ரிஷ் விட்டு போனதுக்கு தேங்க்ஸ் இனி நாங்க ஹாப்பியா லவ்ஸ் விடுவோம்’
‘உன்னை தாலி கட்டறப்பவே அம்ரிஷ் ஓடிப்போயிருக்கணும்.’
‘கங்கிராஜிலேஷன் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்.’
‘இந்த சினிமாக்காரங்க எல்லாம் நீ கல்யாணம் பண்ணிருக்க கூடாது’ அப்படியிப்படி வந்திருந்தது.
சில ஆண்கள் ‘நீ அவனுக்கு எத்தனாவதோ அதனால் கழட்டி விட்டிருப்பான்.’
‘அவன் எத்தனை பேரோட ஜல்சால இருப்பானோ’
‘நீ வா செல்லம் நான் இருக்கேன்’ என்று இன்னமும் தகாத வார்த்தைகள் எல்லாம் வந்திருந்தது.
தமிழ் அவன் போனை பிடுங்கி வைத்து, “என்னடா முடிவெடுக்காம இருக்க? ஏதாவது மறுப்பு பேட்டி கொடுத்தா பெட்டரா இருக்கும்னு பீல் பண்ணினா அதையாவது செய். இப்படி இருந்தா என்ன அர்த்தம். வர்ற கமெண்ட்ஸை பார்த்து பல்லு கடிச்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்க,
அந்த கேங்கல ஒரு பொண்ணுக்கு பிறந்த நாள். சாகப்போனவ மிருதுளா சாக்ஷியோட ஆட்டம் பாடி சேஞ்ச் ஆக ட்ரை பண்ணறா. உனக்கென்னடா?” என்றான் கோபத்தோடு.
ஆதேஷும் அருகே வந்தவன் “இஷா அவ லவ்வர் கூட சேர்ந்த பிக் உன்னிடம் இருக்கு தானே? அதை மீடியாவுக்கு கொடுத்திருக்கலாம்.” என்று திட்டம் வகுத்து தந்தான்.
அம்ரிஷோ “ஏன்டா அவ தான் பொய்யும் புரட்டுமா பேட்டி தர்றா, அதை மீடியாவும், சினிமா ஆட்களும் மாறி மாறி ரீல்ஸ் போட்டு சாகடிக்கறாங்க. நாமளுமா?
முதல்ல வீட்டு விஷயம் இப்படி தான் சோஷியல் மீடியால அம்பலப்படுத்தி சண்டையை உலகத்துக்கு சொல்லணுமா? நீ சொல்வியா? பிறகு நான் ஏன்டா சொல்லணும். இத்தனை நாள் வீட்டுக்குள்ள போட்ட சண்டையை, பதிலுக்கு பதில் என்று சோஷியல் மீடியாவோட போடணுமா? அதுக்கு ஆயிரம் பேர் லைக், ஷேர், கமெண்ட்ஸ் தட்டுவான்.
இதுல தங்கள் கருத்துனு ஆளாளுக்கு ஒரு பதிவு போடுவாங்க. சிலர் அவ பக்கம், சிலர் என் பக்கம் என்று பாஸிடிவ்-நெகட்டிவ் என்று சில அரைவேக்காடு கருத்து சொல்லறேன்னு போஸ்ட் போடுங்க அது வேற நாலா பக்கம் பறக்கணும். கொஞ்ச காலம் நான் தான் ஹாட்-டாபிக்கா மாறுவேன்.
என்னை மாதிரி ஒர் இளிச்சவாயனோ இளிச்சவாயோ அவங்க பெர்சனல் மீடியால அம்பலம் ஆகறப்ப, ஆளாளுக்கு வேற வேற சேனலும், யூடூயுப்னு அதையே பேசி தள்ளறது. இதே பொழப்பா இருக்கு.
ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க பெர்ஸனல், பத்தி நியூடா வந்தா ரசிப்பாங்களா? அடுத்தவங்களையே நோண்டறது.” எரிச்சலாய் மொழிந்துவிட்டு, ”சாரிடா இப்பவே எதையும் மனசுல போட்டு என்னால பெரிசுப்படுத்த முடியாது. ஆனா இங்கிருந்து போகறப்ப நிச்சயம் பதில் சொல்லிடுவேன்.” என்று முடிவை தெளிவாக உணர்த்தினான்.
சாக்ஷி பிறந்த நாள் கொண்டாட்டம் என்று ஆளாளுக்கு புத்தாடையோடு கண்ணுக்கு குளிர்ச்சியாக திரிந்தனர். “வெளியே தான் போகமுடியாது வீட்லயே ஏதாவது செய்யணும். நாங்களா குக்கிங் பண்ணட்டுமா?? அதுவும் அவுட் டோர்ல?” என்று அம்ரிஷிடம் மென்பனியும், சஹானாவும் முன்னே வந்து அம்ரிஷிடம் அனுமதி கேட்டார்கள்.
சாக்ஷி பிறந்தநாள் என்பதால் அவள் மறுத்து அடக்கி வேண்டாமென்றாள்.
அம்ரிஷ் மிருதுளாவை காண, அவளோ சாக்ஷியோடு ஒன்றினாள். அவளுக்கு ஆண்களோடு பழக இன்னமும் தயக்கமுண்டு. அதுவும் அம்ரிஷ் இன்று காலை அவனறியது அவள் கையை பிடித்திருக்க சற்று ஒளிந்தபடியிருந்தாள்.
இந்த பொண்ணும் என்ன மாதிரி வேறொரு கஷ்டத்துல தான் இருக்கு. அவளுக்காவது ஏதாவது ஃபன் மோட்ல நேரம் போனா நல்லதென்று மனதில் எண்ணியவன் ”என்னவோ பண்ணுங்க. எங்களுக்கு ஃபுட் தருவிங்களா? சாப்பிடற மாதிரி செய்யணும்?” என்று சொன்னான்.
தமிழும் ஆதேஷும் அம்ரிஷை கண்டு கண்களால் ஏதோ பேசினார்கள்.
ஆதேஷ் ஆர்வம் தாளாமல் தமிழை அழைத்து கொண்டு தனித்து சென்றான்.
“என்னடா அவன் இந்த பொண்ணுங்களுக்காக ஓவரா தான் ஃப்ரீடம் தர்றான். அவன் பிரச்சனையை கூட மறந்துடறான். நம்மிடம் இரண்டு செகண்ட் முன்ன பீல் பண்ணிட்டு இருந்தான். அந்த கேர்ள்ஸ் வந்ததும் அப்படியே மெல்ட் ஆகிட்டான்.” என்று தமிழிடம் கேட்டான்.
வேதாந்தோ மறுபக்கம் வந்தவன் எல்லாருக்காகவா? இல்லை அந்த பர்டிக்குலர் பொண்ணு மிருதுளாவுக்காகவானு பாருங்கடா. அவனை மாதிரியே பிரச்சனையோட அல்லாடறானு அவளுக்கு இவன் ஆறுதலா இருக்கான்.
அவன் கஷ்டத்துல இருக்கறப்ப நாம எல்லாம் அவனுக்கு ஆறுதல் என்று வந்துயிருக்கோம். ஆனா மனுஷங்கறோட சைக்காலஜி ‘கஷ்டத்துலயிருக்கறவனுக்கு, இன்னோரு கஷ்டப்படற மனஷங்களை பார்த்ததும் இவன் கஷ்டம் தேவலைனு யோசிக்கறான்.’ அதுவும் பொண்ணு எப்படி பாதிக்கப்படுவாளோனு அக்கறை வருது.
அவனோட கஷ்டம் இப்ப ஜீரணிக்க எளிதா இருக்கு. நாம நினைச்சதை விட அம்ரிஷை இங்கிருந்து போகறப்ப ரொம்ப தெளிவா இருப்பான் டா. அதுக்காக தான் அம்ரிஷிடம் அடிக்கடி அந்த பொண்ணை உதாரணம் காட்டி பேசறேன். அவனும் அதை ரியலைஸ் பண்ணறான்.
நிஜாமாவே இந்த பொண்ணுங்க நம்ம லைப்ல வந்தது, ஒரு மிராக்கல் தான்.” என்றவன் பார்வை சாக்ஷியை வட்டமிட்டது.
தமிழ் நான்கு பெண்களை பார்வையிடும் நேரம் மென்பனி இதழ் பிரித்து சிநேகமாய் புன்னகைத்தாள்.
ஆதேஷோ ‘மிராக்கல்லா? மெடிக்கல் மிராக்கல் தானேடா கேள்விப்பட்டிருக்கேன். ரோட்ல வந்து மோதி, விடாது கருப்பா பிடிச்சி ஆடுதுங்க… இல்லை குதிக்குதுங்க இதுங்க மிராக்கல்லா’ என்று முனங்க வேதாந்த், தமிழ் இருவரும் ஒருசேர ஆதேஷை துளைக்கவும், “மிராக்கல் தான்டா ஏன் முறைக்கறிங்க?” என்று கமுக்கமாய் அங்கிருந்து கழண்டான்.
இங்கு சாக்ஷியை பெற்றவர்களோ, மகளுக்கு போனை போட்டு அது சுவிட்ஆப் என்றதிலேயே பதில் தர சோர்வாய் அமர்ந்தனர். மென்பனி நினைத்தது போல கோவிலுக்கு சென்று, சாக்ஷி பெயரில் அர்ச்சனை செய்தார்கள்.
போலீஸா கட்சி ஆட்களா என்று தான் தெரியவில்லை. மிருதுளாவின் சித்தி திலகா வந்து மகளை பற்றி கேட்க, ”எனக்கு தெரியாதுங்க அவ்ளோ சொல்லியும் திருட்டுத்தனமா பணம் நகைனு எடுத்துட்டு ஓடியிருக்கா” என்று தான் போலீஸிடமே உரைத்தார்கள் பத்மா-குருபிரசாத்.
போலீஸோ “எதுக்கு நகையை திருடினாங்க?” என்று குறுக்கு விசாரணை நடத்த, “என் மகளுக்கு இன்னிக்கு பிறந்த நாள் சார். ஆசையா கிப்ட் கொடுக்க, வாங்கி வச்சது. அதையும் எடுத்துட்டு போயிட்டா” என்று அழுவாத குறையாக பத்மா பேசினார். கோவிலிலிருந்து அப்படியே ஸ்டேஷனுக்கு அழைத்து வந்ததால் அதிருப்தியடைந்தனர் குருபிரசாத்தும்.
இதில் மென்பனி அண்ணன் அண்ணியோ “என் காரை திருடிட்டு போயிருக்கா சார். முதல்ல அதை மீட்டு கொடுங்க. என் சம்பளத்துல சேர்த்து வச்சி வாங்கியது.” என்று புலம்பினார்.
சஹானாவின் பெற்றோர் சுகுமார் பவானி இருவருமே, “என் பெரிய பொண்ணு அமெரிக்கால இருக்கா. இந்த வாரம் போகணும்னு டிக்கெட் எல்லாம் எடுத்து வச்சிருக்கேன். இந்த நேரம் பார்த்து இவங்க பொண்ணு மிருதுளாவுக்காக, மொத்த பிரெண்ட்ஸ்ஸும் இப்படி மறைந்திருக்கிங்க. நியாயபடி கட்டாய கல்யாணம் பண்ணறாங்கனு நீங்க தான் அவங்க மேல ஆக்ஷன் எடுக்கணும்.
நீங்க எங்களை கூட்டிட்டு வந்து உட்காரவச்சி கேள்விக்கேட்கறிங்க. இதே மாதிரி போனா, நாங்க எங்க சங்கத்துல புகாரளிக்க வேண்டும்.
எங்களுக்குனு தனிக்குழு இருக்கு. சங்கத்துல சொன்னா ஆளாளுக்கு டிவி மீடியா, செய்தி அரசியல் கட்சினு எங்களுக்கும் ஆட்கள் இருக்காங்க.
போலீஸ் துறையிலும் ஆட்கள் உண்டு. இப்படி தேவையில்லாம மிரட்டினா நாங்க மேலிடத்துக்கும், எதிர்கட்சி ஆட்களிடமும் பேசவேண்டியதாக போயிடும். அப்பறம் கட்சி ஆட்கள், போலீஸ் என்று பின்னாடி மிரட்ட முடியாது. எங்களுக்கும் சட்டம் தெரியும்.
அந்த பொண்ணு மிருதுளா சித்தி கொடுமையால தனியா போயிட்டா. அவளுக்கும் பதினெட்டு வயசு ஆகிடுச்சு சார்” என்று சற்று குரல் உயர்த்தினார்.
சஹானாவின் தந்தை சுகுமாருக்கு எதிர்கட்சி ஆட்களில் சிலர் அறிந்திருக்க, புலியை பிடித்த வாலாக நீளுமோயென ஆளுங்கட்சி ஆட்களில் விசாரிக்க இருந்தவர்கள் பயந்தனர்.
போலீஸ் என்ன செய்ய என்று வேடிக்கை பார்த்தனர். இதில் மென்பனி அண்ணன் வண்டியை கண்டுபிடித்து தர கூறவும், சாக்ஷி பெற்றோர் நகையை எடுத்துட்டு போயிட்டா சார்’ என்றதும் கேட்டு “ஏம்மா புகார் வச்சி விசாரிக்க வந்தா நீங்க எங்களிடமே எக்ஸ்ட்ரா புகாரை நீட்டறிங்க.
உங்கப்பொண்ணுங்களில் யாராவது உங்களை கான்டெக் பண்ணினா எங்களுக்கு தகவல் கொடுங்க. அது போதும். இப்ப தயவு செய்து வீட்டுக்கு போங்க. உங்க கார் நம்பர் சொல்லுங்க சார் கொடைக்கானல் செக்போஸ்ட்ல எங்கயாவது க்ராஸ் ஆனா நோட் பண்ண உதவும் காரும் கண்டுபிடிச்சி தர்றோம்” என்று மென்பனி அண்ணன் கார்த்திக்கிடம் கேட்டு நம்பரை பெற்றுக்கொண்டு பெரிய கும்பிடு போட்டு அனுப்பினார்கள்.
மிருதுளாவின் தந்தை கேசவன் மகள் தப்பித்தது ஒருவிதத்தில் குழப்பத்திலிருந்தார்.
என்னயிருந்தாலும் மனைவி திலகா சொல்லுக்கு செவிமடுத்து பெத்தமகளை பேரம் பேசியிருக்க கூடாது. என்னதான் வாழ்வாதாரம் நிறைவுப்பெற்று நன்றாக வசதி வாய்ப்பு அமையுமென்றாலும், அவளுக்கு பிடிக்காத திருமணம் என்று உருத்தியது. இதில் திலகாவை போல இரண்டாதாரம் என்றதும் அதிருப்தி தான்.
‘இரண்டாதாரம் எல்லாம் எதுக்கு திலகா?’ என்று கூட மறுத்தார். திலகாவோ ‘ஏன் நான் உங்களை கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழலையா?’ என்று பேச்சை மாற்றி தானாக தன்னையே தலையாட்ட வைத்த பெருமை திலகாவையே சாரும். அதற்கேற்றது போல புது கார், பணம், வசதி வாய்ப்பு, ஏசி, டிவி என்று மார்க்கெட்டில் வந்த புதுமையானதை வீட்டுக்குள் நிரப்பியதும் மாயம் உண்டாகி கண்ணில் கருப்புதுணி போடப்பட்டது. மதனுக்கு ரேஸ் பைக் என்று வாங்கி தந்தனர். எல்லாமே கண்ணை மறைத்தது எனலாம்.
மதன் அவனுக்கு வந்த ஜிமெயிலை பார்த்துவிட்டு போலீஸிடம் தெரிவிக்கலாமா என்று யோசனையில் திளைத்தான்.
-தொடரும்.
-Praveena Thangaraj
Ippo yosuchu yenna pandrathu… Dai madhanu….. Pottu kuduthurathda….
Nice epi👍