அத்தியாயம்-25
Thank you for reading this post, don't forget to subscribe!தமிழ் ஏன் இப்படி பேசுகின்றானென்று மென்பனிக்கு புரியவில்லை.
வேதாந்த் அதன் காரணத்தை உடைத்தான்.
“மென்பனி தமிழ் ஒரு மாசம் முன்னவே இங்க வந்துட்டான். எங்க வீட்ல தான் இருந்தான்.” என்று உரைத்தான்.
“ஒரு மாசம் முன்னவேயா? அப்ப ஏன் என்னிடம் சொல்லலை. கொஞ்ச நேரம் முன்ன கூட கேட்டேன். அவன் போன் கூட பண்ணலைனு சொன்னிங்க?” என்று கேட்டவளிடம், சாக்ஷி “காரணமாக தான் மென்பனி” என்று கூறவும் தன் தோழிக்கும் தமிழ் பற்றி தெரிந்திருக்கின்றதே, ஏன் தன்னிடம் உரைக்கவில்லையென்ற அழுகை கோபமென உடைப்பெடுத்தது.
“மணமகன் ரூம்ல போய் பேசலாம். ஸ்டேஜ்ல வேண்டாம்” என்று அம்ரிஷ் கூற, “யா அம்ரிஷ் சொல்லறது சரி உள்ள போய் பேசலாம்” என்றதும் சாக்ஷி மென்பனியை அழைத்து செல்ல, குழப்பமாய் நடந்தாள்.
சஹானாவை மிருதுளா அழைத்து செல்ல, அம்ரிஷோ பின்னங்கழுத்தை தடவியபடி மிருதுளாவை நோக்கி பார்வையை செலுத்த, மிருதுளா ரயில்வண்டி ஓட்டமாக தோழியோடு ஓடிட துடித்தாள்.
மணமகன் அறைக்குள் வந்ததும், ஆதேஷ் கதவடைக்கும் நேரம், அவன் மாமனார் சுகுமாரோ “மாப்பிள்ளை பைனாப்பிள் ஜூஸ் ஐஸ்கட்டி போட்டுயிருக்கு” என்று கொடுக்க, அதை பெற்றுக் கொண்டவனாய் “தேங்க்ஸ் மாமா” என்று கதவை மூடினான்.
ஜூஸ் தட்டை மேஜையில் வைத்தான்.
“தமிழ் உங்களுக்கு என்னாச்சு?” என்று மென்பனி கேட்க, அங்கேயிருந்த மெத்தையில் அமர்ந்தவன் நிதானமாக இடது காலிலிருந்த, ‘பிளாஸ்டிக் ஆர்டிபிஷியல் லெக் சப்போர்ட்’ எடுத்தான்.
மென்பனி இதயம் துடிப்பதை நிறுத்தியது போன்றதாக தவித்தாள்.
கால் முட்டிக்கு கீழ் பகுதி துண்டாகியிருந்தது. ஆர்டிபிஷியல் காலை வைத்திருப்பதை அறியவும் மென்பனி பேச்சற்று நின்றாள்.
தமிழ் அதற்கு மேல் பாவப்பட்ட ஜீவனாக இல்லாமல், தன் செயற்கை காலை மாட்டிக்கொண்டான். வேதாந்த் மருத்துவன் என்பதால் மடமடவென இந்த இடைப்பட்ட ஒரு மாதத்தில் செயற்கை காலுக்கு உண்டான சிகிச்சை எடுத்து முடித்திருந்தான்.
அங்கிருந்தவர்களில் யாருமே அதிர்ச்சியாகவில்லை. ஏற்கனவே தமிழ் நிலையை அறிந்திருப்பார்கள் போல.
இங்கு மென்பனிக்கு மட்டும் தான் தற்போது தமிழ் நிலவரம் அறிவதாக மற்றவர்களின் முகபாவணையில் புரிந்தது.
மென்பனி பின்னாடியே சென்று சுவரோடு சுவராக தட்டிநின்று, அப்படியே கீழே அமர்ந்து குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
தமிழுக்கு அவள் அழுவதை காணும் சக்தியில்லை.
“டேய் வேதாந்த் அவங்களை தயவுசெய்து அழவேண்டாம்னு சொல்லுடா.” என்று கூற, “அழட்டும்டா” என்று வேதாந்த் கையை கட்டிக் கூறினான்.
“ஏங்கே பிரெண்டை அழவச்சி வேடிக்கை பார்க்கறிங்க. நீங்களாவது அழவேண்டாம்னு சொல்லுங்க” என்று சாக்ஷி மிருதுளா சஹானாவிடம் கூற, அவர்களுமே “அழட்டும் தமிழ் விடுங்க. மனசு ரிலாக்ஸ் ஆகும்.” என்று முடித்து கொண்டார்கள்.
தமிழுக்கே மனம் தாளாமல், “மென்பனி அழாதிங்க. உயிரோட தானே இருக்கேன். அதுக்கு சந்தோஷப்படலாமே. ஆர்டிபிஷியல் லெக் இருக்கு. ஐ மேனேஜ் இட்.” என்று கூற, அவளோ குலுங்கி அழுதாள்.
ஒரு கட்டத்தில் மனம் கேட்காமல், அவன் என்ன கூறினால் அவள் நிறுத்துவாளென்று அறிந்து “மென்பனி உங்க கதையை வாசித்தேன். கதையை கதையா பார்க்கறப்ப முடிவு நல்லாயிருக்கு.
ஆனா நிஜத்துல வேண்டுமின்னா அந்த நாயகியை வேறயாராவது கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கட்டும். அந்த நாயகன் தேடி அலைய வேண்டாம். கதை முடிவை மாத்தி எழுதிடுங்க” என்று கருத்து தெரிவிக்க, மென்பனி விளுக்கென்று நிமிர்ந்தாள்.
“யாரை கேட்டு என் கதைக்கு மாற்று முடிவு கொடுக்கறிங்க. அது என் கதை. அதுக்கு நான் தான் முடிவு எழுதுவேன். நீங்க கிடையாது.
ஒரு வாசகனா நீங்க எப்படி வேண்டுமென்றாலும் உங்க கற்பனையை வச்சிக்கோங்க. ஆனா என் கதையில ஒன்னு நாயகனோட சேருவா. இல்லைனா தனியா வாழ்ந்துப்பா. இன்னொரு சப்டூயூட் நாயகனாவோ, இன்ஸ்டண்ட் நாயகனையோ கொண்டு வரமாட்டேன்.
அந்த ஆர்மிமேனை தான் ரைட்டருக்கு கட்டிவைப்பேன். அந்த ஆர்மிமேனுக்கு ரைட்டரை பிடிக்கலைனா போகட்டும்.” என்று பேசவும் தோழிகள் மென்பனியை கட்டிபிடித்து கொண்டார்கள்.
லேசான கண்ணீர் எட்டிபார்க்க, தோழிகள் மென்பனியை ஆரத்தழுவினார்கள்.
வேதாந்த், ஆதேஷ், அம்ரிஷ், மூவரும் தமிழை பார்த்து முறுவலிட்டார்கள்.
வேதாந்தோ “நாங்க தான் சொன்னோமே, மென்பனி உன் காதலை ஏத்துப்பாடானு.” என்று தோளைத்தட்டினான்.
ஆதேஷோ, “நான் கூட முன்னவே சொன்னேன். டேய் அந்த ரைட்டரம்மா உன்னை ட்ரூவா லவ்ஸ் விடுது. நீ தான் பயப்படறனு” என்று கூற அம்ரிஷ் ஆதேஷ் தோளில் ஒரு அடிப்போட, “உண்மைடா. கமெண்ட்ஸ் செக்ஷன்ல ஒரு மெஸேஜ்ல இருபது முப்பது மெஸேஜ் பேசியிருந்தாங்க. ஒரு ஜோள்ளு ரீடர் கூட ‘மேம் தமிழிடம் மட்டும் பேசறிங்க. ரிப்ளை பண்ணறிங்க. எங்களுக்கு ரிப்ளை பண்ண மாட்டேங்கறிங்க. இன்பாக்ஸில வந்தா (பிளாக்)கருப்பிவிட்டுட்டிங்க. புதுபுது ஐடில வரவேண்டியதா இருக்கு’னு எவனோ ஒருத்தன் கேட்டிருந்தான்.” என்று பேச பேச, மென்பனியோ எழுந்தவள் கண்ணை துடைத்தாள்.
“இந்த வீக்கெண்ட் காதல் வாழ்க்கைக்கு எண்ட் போடுங்க. புதுசா கல்யாண வாழ்க்கையை தொடருவோம்.” என்று கூற தமிழோ “நான் காதலிக்கவேயில்லையே. அப்பறம் கல்யாணம் பண்ணறதாவும் சொல்லவேயில்லையே” என்று விளையாடினான்.
“ஆங்.. காதலிக்காம தான் மனசுல ஆசைவளர்த்திங்களா? என்னை பார்க்க முடியாம சங்கடப்பட்டிங்களா?
கொஞ்ச நேரம் முன்ன ‘டேய் அவளை அழவேண்டாம்னு சொல்லுடா’னு மாறி மாறி கெஞ்சிட்டு இருந்திங்க. எனக்கு அதெல்லாம் தெரியாது. எங்கண்ணா அண்ணியை நானே கன்வின்ஸ் பண்ணிடறேன்.
என் மேரேஜிக்கான வேலை நீங்க மூன்று ஜோடியும் தான் நடத்தணும்” என்று கட்டளையிட்டாள்.
மிருதுளாவோ இடைப்புகுந்து “மூன்று ஜோடிலாம் இல்லை. இரண்டு தான். சும்மா என்னை மாட்டிவிடாதிங்க” என்று கூறி கதவுப்பக்கம் ஓடப்பார்க்க, “பிடிடா அவளை” என்று அம்ரிஷ் கதவுப்பக்கம் வந்து நின்றான்.
ஆதேஷ் அம்ரிஷிடம் “ஓகே மச்சி நாங்க மணமகள் ரூம்ல இருக்கோம். நாளைக்கு எனக்கு கல்யாணம் அதுக்குள்ள மணமகன் அறையை காலி பண்ணி தா. எங்க மாமானார் போட்ட ஜூஸ் வேஸ்டாக கூடாது. பிரெண்ட்ஸ் ஆளுக்கு ஒன்னு எடுத்துட்டு நடையை கட்டுவோம்.
அப்பறம் மென்பனி விரும்பியது மாதிரி இந்த வீக்எண்ட் தமிழ்-மென்பனி மேரேஜை ஜமாய்க்கிறோம். இல்லைனா இவன் அடிக்கடி யோசித்து எனக்கு கல்யாணம் வேண்டாம்டானு நம்ம உசுரை வாங்குவான்.
அதோட இரண்டு மாசம் கழிச்சி நம்ம டாக்டர் வேதாந்த்-டான்ஸர் சாக்ஷி கல்யாணத்தை நடத்தறோம்.
டேய் நடிகனே, நீ இப்ப பேசி புரியவைப்பியோ, நடிச்சி சாகடிப்பியோ கல்யாண தேதி முடிவெடுத்து டூயட் முடிச்சிட்டு வாடா. டூயட் மட்டும்” என்று கண்சிமிட்டி தங்கள் நண்பர்களை அழைத்து வெளியேறினார்கள்.
“வேதாந்த் அண்ணா, ஏ சாக்ஷி, சஹானா இதுக்காக தான் உன் கல்யாணத்துக்கு வரமாட்டேன்னு சொன்னேன். ஆதேஷ் ப்ளிஸ், தமிழ் அண்ணா நீங்களாவது காப்பாத்துங்க. அடியேய் ரைட்டரம்மா ட்விஸ்ட் வச்சிட்டு ஓடறியா?” என்று ஒவ்வொருத்தராய் வெளியேற, அவரை எல்லாம் உதவிக்கு கூப்பிட்டு திட்டியபடி மிருதுளா அங்கும் இங்கும் அம்ரிஷை தாண்டி செல்ல முடிவெடுத்தாள்.
அவனோ தன்னிரு கையால் அணைப்போட்டு அவளை கைதியாக்கியிருந்தான்.
“நான் போகணும் விடுங்க. என்னை போக விடலை கத்துவேன்” என்று மூச்சுவாங்க பேசினாள்.
“நீ கத்தறது என் காதுல பாட்டு பாடி வீணை மீட்டற மாதிரி இருக்கு. கத்து நல்லா கத்து.” என்றான் நாயகன் அம்ரிஷ்.
மிருதுளாவுக்கு தாமதமாக ‘இனி அம்ரிஷிடமிருந்து தப்பிக்க இயலாதென்ற உண்மை’ புரிந்தது.
“இப்படி செய்தா நாளைக்கு நடிகர் அம்ரிஷ் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி மிரட்டறார்னு மீடியாவுக்கு நியூஸ் போகும்” என்று மிரட்டினாள்.
அம்ரிஷ் நகைத்தபடி “சினிமாவுல இருக்கறவனுக்கு மீடியா நியூஸ் சூயிங்கம் மாதிரி, என்னை வச்சி எவ்ளோ தூரம் மக்கள் மென்னு, வதந்தி பரப்பி பேசறவரை பேசிட்டு அந்த நியூஸ்ல சுவை போனதும் துப்பிடுவாங்க. இஷா மேட்டர் மாதிரி. சோ ஐ டோண்ட் கேர் அபௌவுட் மை கேரியர்.” என்றான்.
“நான் உங்களுக்கு சூட்டபிள் இல்லை” என்று அவன் நெஞ்சு பட்டனை பார்த்து கூறினாள். அவனை ஏறெடுத்து பார்த்து கூற தயங்கினாள்.
மெதுவாக அவள் தாடையை நிமிர்த்தி அவன் கருவிழியை காணவைத்து, “எனக்கு சூட்டபிள் பொண்ணா இல்லையானு நான் சொல்லணும். யூ ஆர் தி ஃபெர்பெக்ட் மேட்ச் ஃபார் மீ” என்று இருவிழியை கலந்து பேசினான்.
கண்கள் இரண்டும் கலங்கி இருவிழிக்குள் கசிந்த காதலை க்ளிசரின் இல்லாமல் வெளியே கண்ணீராய் கொண்டுவர, மிருதுளா குலுங்கி அழுதாள்.
“பயமாயிருக்கு, என்னோட எதிர்காலம் நான் எதிர்பார்க்குற அன்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஏமாற்றத்தை தாங்கிடக்கூடாது.” என்று குமறினாள்.
அம்ரிஷ் ஒரு வறட்சியான சிரிப்பை உதிர்த்து, “ஏமாற்றத்தை அனுபவிச்சவன் நான். அதே ஏமாற்றத்தை உனக்கு தரமாட்டேன். ஐ பிராமிஸ்.
நான் உங்கப்பா மாதிரி மோகத்துல லவ் பண்ணறேன்னு கண்ணை மூடிட்டு பேசலை மிருதுளா. ஐ பீல்ட்(felt) தட்.” என்று கண்கலங்கியவன் தன்னையே சமன் செய்து, அவள் கையை பற்றி அங்கிருந்த மெத்தையில் அமர வைத்தான். தந்தையை வைத்து பேசியதை தோழிகள் உரைத்திருக்க வேண்டுமென்று புரிந்தது.
“நான் இதுவரை படத்துல ஹீரோயினுக்கு பிரப்போஸ் பண்ணிருக்கேன். படத்துல நடிப்புக்காக கிஸ் பண்ணிருக்கேன்.
ரொம்ப க்ளோஸான சீன்ல இதே போல பெட்ரூம், பாத்டப் சீன்ல கூட கட்டிபிடிச்சி புரண்டுயிருக்கேன்.” என்றதும் மிருதுளா அம்ரிஷ் முகம் காண தயங்கி குனிய, அவள் தாடையை நிமிர்த்தி, “அதெல்லாம் நடக்கும் போது என் முன்ன கேமிரா இருக்கும்.
என்னை சுத்தி டேரக்டர், அசிஸ்டண்ட்-டேரக்டர், கேமிராமேன், அசிஸ்டன்ட்-கேமிராமேன், என்னை மாதிரியே நடிகர்-நடிகைகள், கோ-ஆர்டிஸ்ட்கள், டான்ஸர், டான்ஸர் குரூப், மேக்கப்மேன், அசிஸ்டெண்ட் மேக்கப்மேன், செட் போடுற ஒர்க்கர், அங்க வேலை செய்யறவங்களுக்கு லஞ்ச் டீ டெலிவெரி பண்ணற பாய்ஸ், சம்டைம் அவுட்டோர் சூட்டிங் என்றால் பேன்ஸ், பீப்பிள், பவுன்சர் இன்னும் யார் யாரோ இருப்பாங்க.
இவங்க யாரும் இல்லாத நேரமா இஷா என்னோட நடிச்சிட்டு போயிட்டா. அவ்ளோ தான்.
நான் அவ எழுதின திரைக்கதையில, நான் ஒரு ஏமாளினு தெரியாமலே நடிச்சி வாழ்ந்திருக்கேன்.
சில நேரம் ரசிகர்கள் சொல்வாங்களே. நடிப்பு மாதிரியே தெரியலை. ரியலா இருந்துச்சுனு.
ஆனா இங்க, என் ரியல் லைப், நடிப்பா போயிடுச்சு மிருதுளா.
அதை மறந்துட்டேன் உன்னை விரும்ப ஆரம்பிச்சதுலயிருந்து. அந்த கேரக்டர் எனக்கு பிடிக்கலை. எனக்கு உன் கணவனா இருக்க தான் பிடிக்குது.
இப்ப உன்னோட வாழ்க்கை முழுக்க நடிக்காம வாழணும்னு ஆசைப்படறேன்.
ஏமாற்றத்தை உள்வாங்கியதால உனக்கு நிச்சயமா ஏமாற்றம் தரமாட்டேன் மிருது. என்னை ஏத்துக்கோ.” என்று வலியோடு உரைத்தான்.
மிருதுளாவோ, அவன் விழிநீரை கண்டு நெஞ்சு விம்ம அழுதவள், அம்ரிஷை இறுக அணைத்து கொண்டாள்.
அம்ரிஷும் கட்டிக்கொண்டு சத்தமின்றி கண்ணீர் மடையை விடுவித்து இதயத்தில் அழுத்தம் கொண்ட பாரத்தை கரைத்தான்.
“மிருதுளா ராஜபாண்டியன் உன்னை செகண்ட் மேரேஜ் பண்ண தான் கேட்டார். நானும் செகண்ட் மேரேஜ் பண்ணறேன். உனக்கு அது கஷ்டமாயிருக்கா? நம்ம வாழ்க்கை இரண்டாதாரமா தான் அமையுமானு?” என்று கேட்டான்.
“ராஜபாண்டியனுக்கு வயசு என்னனு தெரியுமா? அவருக்கு பதினேழு வயசுல ஒரு பொண்ணு இருக்கா.” என்று முகத்தை ஏறிட்டு ‘உற்’றென்று உரைத்தாள்.
“என்னோட பி.ஏ சம்பத் வயசையோ பொண்ணு இருப்பதையோ சொல்லலையே.” என்று அதிர்ந்தான் அம்ரிஷ்.
“ராஜபாண்டியனுக்கு இரண்டு குழந்தை இருக்காங்க. கல்யாணம் பண்ணிக்கறேன் என்றது எல்லாம் சும்மா. எங்க அப்பா, சித்தி முன்ன மட்டும் தாலி கட்டுவதா சொன்னது. பொதுயிடத்துல பார்த்தா நீயாருனு கேட்பான்.
எங்க சித்தியை பொறுத்தவரை அவங்க எதிர்ல தாலிகட்ட ஒத்துக்கிட்டதே கல்யாணமாம். என்ன செய்யறாங்கனு தெரியலை. நான் எதையும் கேட்டுக்கலை. மதன் கூட இங்க ஏன் வந்தான்னு தெரியலை. அந்த வீட்டை விற்று தொலைக்கவும் மாட்டேங்கறாங்க. ராஜபாண்டியனும் சும்மா விடுவானா அரசியல்வாதி வேற” என்று எரிச்சலாய் மாறி பேசியவள் சோகமானாள்.
“யூ டோண்ட்வொர்ரி மிருது. ராஜபாண்டியன் உன் தம்பிக்கு எழுதின வீட்டை நான் விலைக்கு வாங்கியாச்சு. அதாவது அதற்குண்டான பணத்துக்கு மேல ராஜபாண்டியனுக்கு அனுப்பிட்டேன்.
சோ அதை வச்சி உன்னை கேட்டு, உங்க அப்பாவுக்கும் சித்திக்கும் இம்சை கூட்ட மாட்டான். எல்லாமே செட்டில் பண்ணிட்டேன். உங்க அப்பா சித்தியிடம் கூட, நான் உன்னை விரும்பறது சொல்லிட்டேன். அவங்களுக்கு சினி ஆக்டர் மிருதுளாவை கட்டிக்கறான் என்றதும் பயங்கர ஹாப்பி.
மதன் அதனால தான் ஆதேஷ் மேரேஜிக்கு வந்தான். நீ என்ன ரியாக்ட் பண்ணறனு அங்க உன் சித்தியிடம் கன்வே செய்வான்” என்று நாயகன் தன் செயலை விவரித்தான்.
மிருதுளாவோ, “ஏன் ராஜபாண்டியனுக்கு பதில், நீங்க வீடு வாங்கி கொடுத்து, பொண்ணை மணக்க கேட்கறிங்க.
ஒரு பொண்ணை கட்டிக்க அப்பா சித்தியிடம் பேரம் நடத்தறதே வேலையா போச்சு.
ஒரு வேளை நான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லலைனா?” என்று குறும்போடு கேட்டாள். அரசியல்வாதி ராஜபாண்டியன் பிரச்சனை தீர்ந்த நிம்மதியில்.
அதற்கு அம்ரிஷோ தாடையை தேய்த்து “இந்தமுறையும் கல்யாணம் வேண்டாம்னு பிரெண்ட்ஸ்கிட்ட சொல்லு, கிட்னாப் நடக்கும். ஆனா கிட்னாப் பண்ணறது உன் பிரெண்ட்ஸா இருக்காது. இந்த ஹீரோ அம்ரிஷா இருப்பான்.
உன்னை கிட்னாப் பண்ணி திரும்ப கொடைக்கானலுக்கு தூக்கிட்டு போய்….” என்று மிருதுளா செவியருகே சென்று கிசுகிசுக்க, மிருதுளாவோ “சீ அது வில்லன் பண்ணற வேலை” என்று நெருங்கி வந்தவனை நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டாள்.
அம்ரிஷ் மனமெல்லாம் மகிழ்ச்சியை சுமந்து, “சரி வில்லன் செய்யற வேலை வேண்டாம். ஹீரோ ரூட்டே போதும்.
அம்மா அப்பா வந்திருக்காங்க. ஆல்ரெடி அறிமுகமாகியிருப்ப. பட் என் மனைவியாக போறவளா, அவங்க மருமகளா நானே அறிமுகப்படுத்தறேன்.” என்று கையை நீட்டினான்.
அவனை கண்டு தலைகுனிந்து சிலவினாடி யோசித்து, மெதுவாக தலைநிமிர்ந்து அவன் வன்கரங்களுக்குள் தன் மென்கரத்தை பதிய வைத்து காதலை ஏற்று திருமணத்திற்கும் சம்மதம் தந்தாள்.
அதன் பின் மூச்சுபிடிக்க பேசியதால், அங்கிருந்த பழச்சாறை குடிக்க வைத்து, அம்ரிஷ் கதவை திறந்து வெளிவர, அதற்கு காத்திருந்தது போல வண்ண காகிதவெடியை வெடித்து தோழிகளும் நண்பர்களும் ரகளை செய்தனர்.
மிருதுளாவை அம்ரிஷ் அன்னை சௌந்தர்யாவிடம் நிறுத்தினான். அவர்களோ “அதெல்லாம் அப்பதிலருந்து மருமகளை தான் பார்த்துட்டு இருக்கோம். இப்ப என்ன பண்ணற? நீயும் அவளும் போட்டோ எடுக்கறிங்க. அதை உன்னோட பெர்சனல், அண்ட் அபிசியல் அக்கவுண்ட்ல, பிக்சர் அப்டேட் செய்து மேரேஜ் அனவுன்ஸ் பண்ணற. ம்ம் குயிக் குயிக் அதோட டிவி சேனலுக்கு சம்பத் மூலமா நியூஸ் கொடுக்கற” என்று சௌந்தர்யா கூறினார்
“மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணலையே? எந்த டேட் போடணும் மாம்” என்று அம்ரிஷ் விழித்தான்.
“டேய் ‘அதெல்லாம் வேண்டாம் அம்மா’ அப்படி சொல்வனு பார்த்தா எந்த டேட்னு கேட்கற?” என்று வேதாந்த் கிண்டல் செய்தான்.
ஆதேஷோ, “சௌந்தர்யாஅம்மா சொல்லறது மாதிரி அப்டேட் பண்ணுடா. அந்த இஷா அப்படியே அதை பார்த்து உன்னோட வாழமுடியலையே, கையில கிடைச்ச புதையலை மிஸ் பண்ணட்டோமேனு துடிக்கணும்” என்று கூற, அம்ரிஷ் உதடு விரிந்து “டேட் சொல்லுங்க?” என்று அம்ரிஷ் அவசரப்படுத்தினான்.
“அம்ரிஷ் என் கல்யாணம் நாளைக்கு காலையில நடக்கும். அதோட ஐந்து நாள் கழிச்சி தமிழ் மேரேஜ்.
சோ… வேதாந்த் கல்யாணம் முடிஞ்சு ஐந்து நாள் கழிச்சும் ஒரு முகூர்த்த நாள் வருது. அது எந்த டேட் என்னனு பாரு” என்று ஆதேஷே திட்டத்தை எடுத்துக் கொடுத்தான்.
“ஏன்டா வேதாந்த் மேரேஜ் இரண்டு மாசமிருக்கே. அதுக்கு முன்னாடி முகூர்த்தம் இல்லையா?” என்று அம்ரிஷ் கேட்க, அங்கிருந்தவர்கள் சிரிப்பொலி அம்ரிஷ்-மிருதுளாவை வெட்கம் கொள்ள வைத்தது.
ஆதேஷ் கூறியது போலவே வேதாந்த் திருமணம் முடிந்து வரும் முகூர்த்த தேதியில் திருமண தேதியாக அறிவித்து சோஷியல் மீடியாவில் அனவுன்ஸ் போட்டிருந்தான் அம்ரிஷ்.
நாளை காலை ஆதேஷ்-சஹானா திருமணம். அடுத்த வாரம் தமிழ்-மென்பனி திருமணம் ரிஜிஸ்டர் ஆபிசில் நடைப்பெறும்.
இரண்டு மாதம் கழித்து வேதாந்த்-சாக்ஷி திருமணம் முடித்து, இறுதியில் உறுதியாக நடிகன் அம்ரிஷ்-மிருதுளாவை கரம் பற்றுவான். தற்போது மீடியாவுக்கு தங்கள் இருவரின் புகைப்படத்தோடு செய்தியை தந்தான்.
டிவியில் நொடிக்கு ஒரு முறை “நடிகர் அம்ரிஷ் மிருதுளா என்ற பெண்ணை மணக்க உள்ளார்.
இதற்கு முன் நடிகர் அம்ரிஷிற்கு திருமணமாகி விவாகரத்து பெற்றுயிருந்தார். தற்போது மிருதுளா என்ற பெண்ணை திருமணம் செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்து பதிவு போட்டுள்ளார்”
“யார் அந்த இளம்பெண்?”
“நடிகர் அம்ரிஷ் மணக்க போகும் பெண் ஏற்கனவே நட்புவட்டத்தில் இருந்து அவர் விவாகரத்து பெற்ற போது தோள்கொடுத்து தாங்கிய தோழியா.?” என்று வெவ்வேறு டிவியில் தொகுப்பாளிகள் செய்தியை அறிவித்து வெள்ளிதிரை நாயகன் அம்ரிஷ் மற்றும் மிருதுளாவின் புகைப்படத்தையே நொடிக்கொருமுறை எங்கு திரும்பினாலும் காட்டினார்கள்.
🙏சுபம்🙏
பிரவீணா தங்கராஜ்
அனைவரும் அம்ரிஷ் திருமணத்திற்கு வருக. வாழ்த்துக.
குரூப் போட்டோவுக்கு ஸ்மைல் பண்ணுங்கயா. ஸ்மைலி சீஸ்📸📸📸
பைபை… 👋👋👋டாட்டா.
கதை பிடிச்சிருந்தா கருத்துக்கள் மூலம் பதிவு பண்ணுங்க. முகநூல் ஐ ரிவ்யு போடுங்க. லவ் யூ ரீடர்ஸ்.😘
Semma sis…. But yetho avasarama finish panna maari yennaku thonuchu… Ithuvum nalla thaan erukku…
Super😍😍 Good ending👏👏