Skip to content
Home » ருத்ரமாதேவி-2

ருத்ரமாதேவி-2

செமஸ்டர் விடுமுறை முடிந்து இன்று கல்லூரி முதல் நாள். படிப்பு நினைத்தாலே ருத்ராவுக்கு வெறுப்பு தான்.

Thank you for reading this post, don't forget to subscribe!

     அவளின் தாய், பள்ளி படிப்பை மட்டும் முடித்தவர். அவளின் தந்தை அவர் குடும்பத்தில் முதல் பட்டதாரி. படிப்பின் அவசியத்தை உணர்ந்தவர்.

     ஆகையால் திருமணத்திற்கு பிறகு தன் மனைவியை தபால் வழியாக படிக்க வைத்து பட்டதாரி ஆக்கினார்.

     அருகில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியை.
தாயும் தந்தையும் கூறியதால் ஒரு டிகிரி ஆவது வேண்டும் என்று,
வேண்டா வெறுப்பா பிள்ளையை பெத்து காண்டாமிருகம்னு பேயர் வைத்த கதையாக, பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் எடுத்து கடமைக்காக படித்து வருகிறாள்.

     கல்லூரிக்குள் அவளின் கார் நுழைவதை தூரத்தில் இருந்தே பார்த்த நண்பர்கள் அவர்களின் அருகே விரைந்து வந்தார்கள்.

     இளம் ரோஜா வண்ண அனார்கலி உடையில் தேவதை போல் இறங்கும் ருத்ராவை தள்ளி நிறுத்தி விட்டு, அவளின் தந்தையிடம் அப்பா, அங்கிள் என்று அவரிடம் நலம் விசாரித்தார்கள்.

அவரும் அனைவரையும் சாயங்காலம் வீட்டிற்கு வருமாறு அழைத்து, ருத்ராவிடம் “சரி பாப்பா, நான் கிளம்புறேன். என்ஜாய் யுவர் டே. ஈவினிங் கூப்பிட வாறேன்” என்று விட்டு அலுவலகம் கிளம்பினார். 

அவர் கிளம்பவும் உணவு பையை பத்திரமாக எடுத்து நடக்க ஆரம்பித்தார்கள்.  “ஏய்” என்ற ருத்ராவின் குரலில் அனைவரும் திரும்ப, இடுப்பில் கை வைத்து புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டு அவர்களை முறைத்துக் கொண்டு நின்றாள் ருத்ரா.
என்னங்கடா நடக்குது இங்க என்று முறைத்தாள்.

“நாங்க தான் நடக்குறோம். க்ளாஸ்க்கு போனும் இல்ல. ஏன் நீ நடக்கல? க்ளாஸ்க்கு   வரலையா?” என்றான் ப்ரணித்.

அவர்களின் சிரிப்பில் அவர்கள் தன்னிடம் விளையாடுகிறார்கள் என்று உணர்ந்து, “நான் எங்கேயும் வரலை” என்று கோபித்துக் கொள்வது போல் அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்தாள்.

அவள் கோபித்துக் கொண்டாள் என்று நினைத்து அவளை சுற்றி நின்று கொண்டு ஐவரும் ஒருசேர
“ஹேப்பி பர்த்டே டூ யூ
ஹேப்பி பர்த்டே டூ யூ
ஹேப்பி பர்த்டே டியர் ருத்ரா
ஹேப்பி பர்த்டே டூ யூ”
என்று பாடி வாழ்த்தி தங்கள் பரிசை அவளுக்கு கொடுத்து, “சும்மா விளையாட்டுக்கு உன் பிறந்த நாளை மறந்தது போல் நடித்தோம் ஆனால் நீ கோபித்துக் கொண்டாய்” என்றனர்.

அதற்கு  “ருத்ராவும் நானும் உங்களிடம் சும்மா தான் நடித்தேன்” என்று சிரித்துக் கொண்டாள். அதன் பிறகு அந்த ஆறு பேரும் சேர்ந்து செய்த கூத்து சிறிதும் அளவில்லாமல் செல்ல, வகுப்பு மணி அடிக்க அனைவரும் வகுப்பை நோக்கிச் சென்றனர்.

ருத்ரா, ஐஸ்வர்யா, கலைச்செல்வி, ப்ரணவ், ப்ரணித் இந்த ஐவரும் செய்யும் கலாட்டாவினால் கல்லூரியில் இவர்களை தெரியாதவர் இல்லை.

அன்பரசு ஃபைனல் இயர். கலைச்செல்வியின் மாமன் மகன். அவளின் படிப்பு முடிந்ததும் திருமணம் என்று பெரியவர்கள் நிச்சயித்து உள்ளார்கள்.

இவன்  இவர்களுக்கு காவல். சீனியர் மாணவர்களிடம் இருந்து இவர்களை காப்பாற்றுவது இவனின் கடமை. ருத்ரா ஐஸ்வர்யா இருவரின் பாசமிகு அண்ணன். ப்ரணித் ப்ரணவ் இருவரும் மாம்ஸ் என்பர்.

ஐஸ்வர்யா பாலர் பள்ளியில் இருந்து ஒன்றாக படிக்கிறார்கள். எதிர் எதிர் வீடு.

ப்ரணவ் ப்ரணித் இருவரும் இரட்டையர்கள். +1 இல் இருந்து ஒன்றாக படிக்கிறார்கள். ப்ரணித் வேறு பிரிவு.

ஒரு வழியாக வகுப்பு ஆரம்பித்து இவர்களும் கவனத்தை படிப்பில் செலுத்தினார்.

மதிய உணவுக்கு முன் உள்ள கடைசி வகுப்பு. கம்யூட்டர் சயின்ஸ் வகுப்பு. புது வாத்தியார் வருவதாக தகவல். ஒரு நாற்பது வயதுக்கு மேல் உள்ள வாத்தி வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர் அனைவரும்.

ஆனால் வந்தவர் இருபத்தைந்து வயது தான் இருக்கும். ஸ்டைலாகவும் அதே சமயம் வேகமாகவும் உள்ளே வந்தவன், “குட் மார்னிங் எவ்ரி ஒன்” என்க, அப்போது தான் எல்லோரும் எழுந்து நின்றார்கள் ( அவ்வளவு ஸ்பீடு)

“குட் மார்னிங் சார்” என்று கோர்ஸ் ஆக கத்த
“குட் மார்னிங் குட் மார்னிங் சிட் சிட்” என்று விட்டு, “ஐ அம் தமிழ் வேந்தன்” என்று தன்னை பற்றி அறிமுக படுத்தி விட்டு, “லெட்ஸ் இன்ரடூஸ் யுவேர்ஸ்” என்றான்.

அனைவரும் தங்களை அறிமுகப்படுத்தி விட்டு அமர்ந்ததும் அன்றைய பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டான் தமிழ் வேந்தன்.

அனைவரும் பாடத்தை கவனிக்க ருத்ராவோ அவனை கவனிக்க ஆரம்பித்தாள். ஆறடிக்கு சற்று உயரம். தமிழ் நாட்டிற்கே உரிய மா நிறம். நெற்றியில் வந்து விழும் முடியை விரல்களையே சீப்பாக பயன் படுத்தி ஒதுக்கி விடும் ஸ்டைல். வசீகரமான முகம்.

நிக்கோடின் கறை படியாத, புன்னகைத்த உதடு, உடல் பயிற்சி செய்து கட்டுடன் வைத்திருக்கும் உடல் வாகு,   என்று அங்குலம்  அங்குலமாக ரசித்துக் கொண்டு இருந்தாள்.

சென்ற வருடம் தான் படிப்பை முடித்து இருந்தும் உடனே வேலையில் சேர்ந்து விட்டான். கொஞ்சம் கூட லைஃபை என்ஜாய் பண்ண தெரியவில்லை என்று நினைத்த படியே அவனை வைத்த கண் மாறாது பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வகுப்பு முடிந்து அனைவரும் கிளம்பிய பின்னரும் அவள் அப்படியே கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்க, அவளை உலுக்கிய ஐஸ்வர்யா, “ஏய் ருத்ரா என்ன உட்கார்ந்துகிட்டே தூங்குறியா?  வா சாப்பிட போலாம்” என்றாள்.

ஏதோ கனவு கண்டு விழிப்பது போல் எழுந்தாள் ருத்ரா. இவர்கள் வழக்கமாக சாப்பிடும் இடத்துக்கு நால்வரும் செல்ல அங்கு அன்பரசு ப்ரணித் இருவரும் உட்கார்ந்து காத்திருந்தனர்.

அதன் பிறகு ஆறு பேரும் ருத்ராவின் அம்மாவின் சமையலை ருசிக்க ஆரம்பித்தனர். பேசிக்கொண்டும் கலாட்டா செய்து கொண்டும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களை நோக்கி வந்தான் தமிழ் வேந்தன்.

அவனை அருகில் கண்டதும் ஐஸ்வர்யா அதிர்ந்து எழுத்து நின்றாள். அவளின் திடீர் அமைதி கண்டு அனைவரும் அவளை காண அவளின் அதிர்ந்த பார்வை நிலைத்த இடத்தை பார்த்து அதிர,

தமிழ் வேந்தன் புன்னகைத்துக் கொண்டே ருத்ராவின் தட்டில் இருந்து சப்பாத்தியை பிய்த்து பன்னீர் பட்டர் மசாலாவை எடுத்து  சுவைத்தான்.

ருத்ரா அதிர்ச்சியில் வாய் பிளந்து உறைந்து அமர்ந்திருந்தாள். அவளின் கன்னத்தை தட்டி, “ஹேப்பி பர்த்டே டியர்” என கூறி ஒற்றை கண் அடித்து புன்னகைத்தான்.

அவனின் செயலில் அதிர்ந்து மொத்த பேரும் எழ, “என்ன டியர் இப்படி முழிக்கிற. க்ளாஸ்ல அப்படி சைட் அடிச்ச, இப்ப என்ன?” என்றான்.

‘என்னது சைட்டா’ என்று அவளை நோக்கினர் அனைவரும்.

‘அச்சோ நாம பார்த்ததை அவர் பார்த்து விட்டார் போலயே’ என்று அவள் அதிர்ந்து, “இல்லை சார்.!  அது…  சும்மா…” என்று உலற,

அவன் சிரித்துக் கொண்டே, “நம்ம லவ் மேட்டர் உன் ஃப்ரண்ட்ஸ்க்கு தெரிந்து விட்டது என்று அதிர்ச்சியா?” என்றான்.

அவன் கூறியதில் அவள் கண்கள் இரண்டும் வெளியே குதித்து விடுவது போல விரிய, அவளின் நண்பர்களோ அதிர்ந்து வாயில் கை வைத்து அவளை பார்த்தனர்.

தொடரும்…

  • அருள்மொழி மணவாளன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *