அத்தியாயம் – 82
இதுவரை நடந்ததை தனது தோழியிடம் கூறி முடித்தாள் மேதா.
“அப்படி இன்னா ப்ராப்ளம் மேதா? நீ எல்லாத்தையும் தூக்கி போட்டு இப்படி ஒளிஞ்சு வாழ?” என்று அவள் கேட்க.
“அதை மட்டும் கேட்காதே ப்ளீஸ்” என்றுவிட்டாள் மேதா.

“ம்ம்..ஓகே இட்ஸ் யுவர் விஷ். இவ்ளோ சொன்ன நீ அதை மறைக்கிறனா ஏதாவது இருக்கும் ஐ டிடின்ட் ஃபோர்ஸ் யூ பேபி.
பட் ஒன் திங்க் சொல்லனும்னு தோணுது சொல்றேன்” என்றபடி அவளை பார்க்க
அவளையே தான் பார்த்தாள் மேதா எதையும் பேசவில்லை.
ஆனால் அவள் பேசினாள்.
“இப்படி லவ் பன்ற அளவுக்கு அவர் உனக்கு எவ்ளோ இம்ப்பார்டண்ட்னு புரியுது. ஆனா அதுக்கு அவர் வொர்த்தானு தான் எனக்கு தெரியல. ஏன்னா சினிமாக்காரங்க எப்போ வேணாலும் எப்படி வேணாலும் மாறுவாங்க. அதும் இல்லாம உன்னோட கல்ச்சர்ல வளர்ந்த சினிமாகாரங்களே இப்படி செய்யுறாங்க ஆனா இது ஜப்பான் இங்க இருக்குற கலாச்சாரமே வேற அந்த மாதிரி ஒரு கல்ச்சர்ல வளர்ந்த ஒரு ஆள் மாறாம இருப்பாருனு என்ன நிச்சயம்? நீ ரொம்ப ஹர்ட் ஆகிடுவியோனு தோணுது மேதா ப்ராக்டிகலா கொஞ்சம் யோசி இப்படி ஒரு லைஃப் உனக்கு புடிச்சு இருக்கா என்ன?” என்று கூறினாள் மெடில்டா.
சிறிது நேரம் அமைதியாக இருந்த மேதா
“எனக்கு நீ சொல்றது புரியுது மெடில்டா. இந்த மாதிரி ஒரு லைஃப் எனக்கு புடிச்சு இருக்கானு தெரியாது ஆனா எனக்கு அவரை பிடிச்சு இருக்கு.
சினிமாகாரங்க சேஞ்ச் ஆகிடுவாங்க தான் ஆனா அவர் மாற மாட்டார் எனக்கு அந்த எண்ணம் எப்பவும் இருக்கு.
அப்படியே அவர் மாறிட்டாலும் நா நான் கவலைபடாம இருப்பேன்.
என் லவ்க்கு லைஃப்டைம் எவ்ளோ வருஷம்னுலாம் எனக்கு தெரியாது.
ஆனா அவரை லவ் பன்னப்போ தெரியும் இது சேராத காதல்னு ஆனா அந்த சேராத காதல் மேல தான் எனக்கும் தீராத காதல் வந்துட்டு இருக்கு.
அதை என்னால தடுக்கவும் முடியல. என் வாழ்க்கையை அதோட போக்குல விட்டுட்டேன்.
அவருக்குனு ஒரு லைஃப் வந்தாலும் என் காதல் தூரமா இருந்து நல்லா இருக்காரானு பார்த்துட்டு போக தான் வைக்குமே தவிர அவரை நெருங்க வைக்காது.
அவருக்கு நல்ல மனசு இருக்கு அதுக்கு ஏத்தமாதிரி நல்ல பொண்ணா அவரை பாத்துக்கிற பொண்ணா அமையனும் இதுதான் எப்பவும் நான் வேண்டிக்கிறது. அந்த பொண்ணு நானா இருக்கனும்னு நான் யோசிச்சதே இல்லை.
எனக்கும் கஷ்டமா இருக்கும் தான் அவர் வேற ஒரு பொண்ணை லவ் பண்ணா பட் ஐ நீட் ட்டூ ரெஸ்பெக்ட் ஹிஸ் விஷ்னா(அவரோட ஆசைக்கு நான் மதிப்பு கொடுத்து ஆகணும்)அவரோட லைஃப்ல யார் இருக்கனும்னு அவர்தானே தேர்ந்தெடுக்கனும் அது நானா இருக்கனும்னு நினைக்கிறது ஆசை. ஆனா அது நானா மட்டும்தான் இருக்கனும்னு நினைச்சா அது பேராசை அது உண்மையான லவ்வா இருக்காது. கண்ணனனை நினைச்சுட்டே அவரோட சந்தோஷமான குடும்பத்தை பார்த்துட்டே வாழ்ந்த மீரா மாதிரி ஆராஷியை நினைச்சுட்டு அவரோட ஹாப்பியான குடும்பத்தை பார்த்துட்டே நானும் வாழ்ந்துடுவேன்” என்று முடித்தாள் மேதா.
கவலையாக அவளை பார்த்த மெடில்டா
“உன்னோட இந்த லவ்க்காகவே அவருக்கு வேற யார் மேலயும் லவ் வந்துடகூடாதுனு வேண்டிக்கிறேன்” என்று அவளை அணைத்துக்கொண்டாள் மெடில்டா
தன்னால் கற்பனைகூட செய்ய முடியாத நிதர்சனத்தை மெடில்டா கூற அதை யோசித்தவளுக்கு விழியோரம் கண்ணீர் வந்து நின்றது உனக்கு நானே ஆறுதல் என்று.
இங்கோ..
படுத்திருந்தவன் எழுந்து அவளது ஜிம்மி தனதாகி போன தனது ஜிம்மியை எடுத்து முத்தமிட்டு
“எப்படியாவது அவளை கண்டுபிடிச்சிடனும் அண்ணா” என்று கூற.
“ம்ம் கண்டு பிடிக்கலாம் கண்டிப்பா ஆனா நீ இப்படி பொறுப்பில்லாம இருந்தா அவ இத்தனை வருஷம் பாடுபட்டு உன்னை பெரிய ஆளா ஆக ஹெல்ப் பண்ணதுலாம் வேஸ்ட்டாகிடாதா?” என்று கேட்க.
அவனை நிமிர்ந்து பார்த்தவன்
“ம்ம் ஆமா அவ எனக்கு சொன்ன அட்வைஸ்ல தானே நான் பெரிய ஆளா வெறி கொண்டு ஆனேன் கண்டிப்பா அவளை பெருமைபடுத்தும் விதமா பெரிய ஆளா அவ முன்னாடி நிப்பேன்.
சரி நீங்க எங்க போய்ட்டு வர்றீங்க?” என்று கேட்க.
சற்று தயங்கிய ரியோ
“உன்னை மாதிரி தான் நானும் தொலைச்ச பொக்கிஷத்தை தேடிட்டு இருக்கேன்” என்றான்.
“புரியலையே அண்ணா?” என்று அவன் கேள்வி கேட்க
அவனது கதையை மொத்தமாக சொன்னான் ரியோ.
“நாம் கிட்டத்தட்ட ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் நடந்து இருக்கோம்ல அதனால தான் அண்ணன் தம்பியா ஆகி இருக்கோம்போல? இப்படி ஒரு பணிஷ்மெண்ட் நம்ம ரெண்டு பேருக்கும் இன்டியன் கேர்ல்ஸ்னால தான்னு இருக்கு.
“சரி அண்ணியோட பேர் என்ன?” என்று கேட்க.
“ம்ம் ஆமா அதும் ஒரே வீட்டு பொண்ணுங்கள?” என்று அவன் பாட்டுக்கு பேச
“தேஜுஶ்ரீ” என்றான் அவன் அதிர்ச்சியாக ஆமென்று ரியோ தலையை ஆட்ட அப்போது தான் மேனேஜர் ஃபோட்டோ வந்துள்ளதாக சொல்லி சென்றது நியாமகம் வர
தன் மொபைலை உயிர்பித்து தேஜுவின் புகைப்படத்தையும் அவளது குழந்தையோடு அவள் இருக்கும் புகைப்படத்தையும் காட்ட அதை பார்த்தவனுக்கு அதிர்ச்சி.
“தேஜு தேஜுக்கு பேபி இருக்கா?” என்று அவன் கேட்க
ஆமாம் என தலையை ஆட்டியவன்
“அப்போ பேபி இருக்குறதே உங்களுக்கு தெரியாதா? என்று கேட்க
“அன்னைக்கு டிடெக்டிவ் காட்டிய ஃபோட்டோலேயே தேஜுவ அடையாளம் கண்டுட்டேன் ஆனா இங்கேதான் இருப்பானு ஏதோ ஒரு நம்பிக்கையில தேடிட்டு இருந்தேன். என்னைவிட்டு விலகி போய்ட்டானு தான் இத்தனை நாளா நினைச்சு அவள தேடிட்டு இருந்தேன் ஆனா அவ வேற ஒருத்தரை மேரேஜ் பண்ணி குழந்தையோட இருப்பானு நான் எதிர்பார்க்கலடா இப்போ அவ என்னை மறந்து வேற ஒருவரை கல்யாணம் செஞ்சு சந்தோஷமா இருக்கா இப்போ போய் நான் அவ முன்னாடி நின்னு அவ லைஃப்ல பிரச்சினையை உண்டு பன்னிட கூடாது” என்று பேசியவன் உடைந்த குரலில் கண்களில் கண்ணீர் நிரம்ப
“ஆரா நீ போ ஆரா சீக்கிரமா நீ போய் மேதாகிட்ட சாரி கேட்டு அவகூட சேர்ந்து வாழுடா லேட்டா கேட்கிற மன்னிப்புக்கு கூட மதிப்பு இல்லைனு இப்போதான் புரியுது தேஜு எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கனும் அவகிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு மட்டும் சொல்லிடு ஆனா உடனே பேசிடாதே அவளுக்கு ஏதாவது பிரச்சினை ஆகிடப்போகுது நேரம் பார்த்து பேசிக்க”
என்று அவன் உருகிபோய் பேச அவனை அணைத்துக்கொண்டான் ஆரா.
தனது துன்பத்திலும் என் நலம் பார்க்கும் அண்ணனனுக்கு நாம் எப்படி கைமாறு செய்யப்போகிறோம் என்று எண்ணியவனுக்கு நிதின் நியாபகம் தான் வந்தது அவரால் மட்டுமே தனக்கு உதவ முடியும் என்று எண்ணியவன் இதைப்பற்றி அவரிடம் பேசியே ஆகவேண்டும் என்று எண்ணியவன் தன் அண்ணனனை சமாதானம் செய்து அவனை அமைதி படுத்தி விட்டு அறையை விட்டு வெளியே சென்றவன்.
தனது மேனேஜரை தொடர்பு கொண்டு நிதினிடம் பேச வேண்டும் என கேட்க அவர் கோவமாக இருக்கிறாரே என்று கேட்க “பரவாயில்லை இது மேதாவை பத்தி இல்ல.
அவங்க சிஸ்டர் தேஜு பத்தினு சொல்லுங்க அவர் கண்டிப்பா பேச ஓகே சொல்லுவார் பட் சீக்ரெட் யாருக்கும் தெரியாம மீட் பண்ணனும்னு சொல்லுங்க” என்றுவிட்டு ஃபோனை வைத்தான்.
அவரும் நிதினுக்கு
அழைத்து தேஜுவை பற்றி பேச வேண்டும் என்று ஆராஷி கூறியதை கூற அப்படி சீக்ரெட்டா என்ன பேச போறான் அதும் தேஜுவை பத்தி என்று யோசித்தவன் தான் இன்று இரவு அவன் ஜப்பான் வருவதாகவும் மறுநாள் அவனை மீட் செய்வதாகவும் கூற
அவரும் அதை ஆராஷிக்கு சொல்ல தன் அண்ணனின் வாழ்வையாவது சரி செய்ய வேண்டும் என எண்ணியவன் இதை பற்றி எதுவும் யாருக்கும் தெரியக்கூடாது என்றுவிட்டு ஒரு முடிவோடு நிதினிடம் பேச காத்திருந்தான்.
மறுநாள் நிதினை சந்திக்க கிளம்பி கொண்டு ஆராஷியை வந்து பார்த்த ரியோட்டோ
“என்ன ஆரா இவ்ளோ வேகமா கிளம்புற இன்னைக்கு எந்த மீட்டிங்கும் இல்லையே நாளைக்குதானே ஷூட்?” என்று கேட்க.
“இல்லனா என் பர்சனல் வேலையா ஒரு இடம் போறேன் போய்ட்டு வந்து சொல்றேன்” என்றபடி அவனிடம் எதையும் கூறாமல் கிளம்பிவிட்டான்.
அன்றைய தினம் கேஷ்ஷூவல்ஸ் அணியாமல் சாதாரணமானவன் போல லேசான ஆரஞ்சும் மஞ்சளும் கலந்தது போல உடை அணிந்து கருப்பு நிற லைக்ரா பேண்ட் அணிந்து தமிழ் பையன் போல கிளம்பியவன் மாஸ்க் அணிந்து மேலே ஒரு ஓவர்கோட் அணிந்து சென்றான். காரையும் அவனே எடுத்து செல்ல அவனுக்கே தெரியாமல் கார்ட்ஸ் அவனை ஃபாலோ செய்தனர். இது எப்போதும் மேதாவின் ஏற்பாடு அவன் தனியே எங்கேயாவது வெளியே சென்றாலும் அவனுக்கே தெரியாமல் அவனை பாதுகாக்க வேண்டும் இது மேதாவின் இரகசிய ஏற்பாடு.
இத்தனை வருடமாக இதையெல்லாம் கவனியாமல் இருந்தவன் கண்ணில் இன்றுதான் இதெல்லாம் பட்டது.
கருத்தில் பதியாதது கவனத்திலும் பதியாது என்பது எவ்வளவு உண்மையானது என்று அவனுக்கு அப்போது தான் புரிந்தது.
நிதின் சொன்ன ஓட்டலை அடைந்தவன் வாலட் பார்க்கிங்கில் அவனது வாகனத்தை ஒப்படைத்து விட்டு உள்ளே சென்றான் மாடியில் ஏறியவன் நிதினுக்கு அழைக்க அவன் எங்கே இருக்கிறான் என்று கூற ஓகே என்றபடி அந்த இடத்தை அடைந்தவன் தனது ஓவர்கோட்டை கழட்டியபடி நுழைந்தான் அவனது உடையையும் நடையையும் அவனது கழுகு போன்ற பார்வையையும் மேலே இருந்த ஓபன் விண்டோ பால்கனி பார்த்த நிதினுக்கு
‘நான் பொண்ணா பொறந்து இருந்தா கண்டிப்பா இவனை லவ் பண்ணி இருப்பேன் போல பார்வையிலேயே மயக்கிடுறான் சினிமாவில தான் மேக்கப்ல அழகா தெரியுறானு நினைச்சேனே இவன் என்ன மேக்கப் இல்லாமலே இப்படி அழகா வந்து நிக்கிறான். இப்படிப்பட்டவனுக்கு விழுந்து விழுந்து லவ் பன்றா அதான் இவனுக்கு அவ அருமை புரியல’
என்று எண்ணியபடி அவனையே பார்த்தான்.
அவனது பார்வையை உணர்ந்த ஆராவிற்கு சிரிப்புதான் வந்தது மாஸ்க் அணிந்து இருந்ததால் அவனது சிரிப்பு நிதினுக்கு அறியாமலே போனது.
மாஸ்க்கை கழட்டியவன் அவனது ஓவர்கோட்டில் அதை வைத்துவிட்டு அருகில் இருந்த டேபிளில் ஒவர்கோட்டை வைத்தவன் ஹலோ சொல்லி கைகுலுக்காமல் கைகூப்பி நிதினுக்கு வணக்கம் வைத்தான்.
அதை ஆச்சர்யமாக பார்த்தான் நிதின்.
மீண்டும் அவன் வணக்கம் வைக்க அதில் சுயம் வந்த நிதின் அவனும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தான்.
அவன்மேல் கோவம் இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் பேச வந்திருக்கும் நிதினின் குணம் அவனுக்கு மிகவும் பிடித்தது அதை அப்படியே அவனிடம் கூறவும் செய்தான்.
வரும்போதே இருவருக்கும் டிரான்ஸ்லேட்டரை சொல்லி இருந்ததால் அதுவும் அங்கு இருக்க எடுத்து அணிந்தவன் நிதினுக்கு அவனது லேங்குவேஜ்ஜை செட் செய்து அணிய சொன்னான் அதன்படி அணிந்த நிதின்.
அங்கு நின்றிருந்த வேலையாளிடம் அவனுக்கு காபியும் ஆராஷிக்கு க்ரீன் டீ சொன்னான் அதை வைத்துவிட்டு அவர் நிற்க அவரை போக சொன்னான் அவர் விடைபெற்று செல்ல அதுவரை அமைதியாக இருந்தவன்
“தேஜுவை பத்தி பேச என்ன இருக்கு?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
அண்ணன் தங்கச்சியின் சுற்றி வளைத்து பேசாத குணம் அவனுக்கு பிடித்தது.
“பர்ஸ்ட் ஐயம் சாரி மிஸ்டர் நிதின்.
என்னோட லேங்குவேஜ் பேரியர்னால நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணி இருக்கேன்னு எனக்கே நல்லா தெரியும்” என்று மன்னிப்பு கேட்க அவனை தடுத்தவன்.
“நீங்க தேஜுவை பத்தி தான் பேசனும்னு வரச்சொல்லி இருந்தீங்க? மேதாவை பத்தினா நான் போறேன்” என எழ முயன்றவனை தடுத்த ஆரா ஒரு பெருமூச்சு விட்டு
ரியோட்டோவை பற்றி பேசினான். அவன் தனது அண்ணன் என்றும் தேஜுவோடு நடந்த திருமணமும் அதன்பின் நடந்த பிரச்சினையையும் தவறை உணர்ந்த ரியோ அவளை தேடி அலைந்ததையும் கூறி முடித்தவன்
“இப்போ அவங்களுக்கு பேபி இருக்கு அவங்க வேற யாரையாவது கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்களா?” என்று கேட்க டிரான்ஸ்லேட்டர் வழியாக அவன் சொன்னதை கேட்ட நிதினுக்கு அவ்வளவு கோவம்
அதே கோவத்தோடு அவனை பார்த்தவன்.
“ஏங்க அண்ணனுக்கும் தம்பிக்கும் அப்படி என்ன வஞ்சம் எங்க வீட்டு பொண்ணுங்க மேல இப்படி சுத்தி சுத்தி எங்க குடும்பத்தையே நிலைகுலைய வெச்சு இருக்கீங்க? உங்கள உண்மையா லவ் பன்னத தவிர எங்க வீட்டு பொண்ணுங்க என்ன தப்பு பண்ணாங்க உங்களுக்கு தேடி வந்து பழி வாங்கி இருக்கீங்களா என்ன? என்னதான் உங்க திட்டம்?” என்று அவன் பாட்டுக்கு கத்த ஆரம்பித்து விட்டான்.
திரும்ப திரும்ப இவங்களோட குடும்பத்திலேயே தங்கள் பெண்களின் வாழ்க்கை சிக்கி தவிக்கிறதே என்ற ஆதங்கம் அவனுக்கு.
அவனது கோவம் நியாயமானது என்று உணர்ந்தவன்
“உங்க கோவம் புரியுது மிஸ்டர் நிதின் ஆனா அதை கொஞ்சம் தள்ளிவெச்சுட்டு பேசலாமா?இது உங்க சிஸ்டர் லைஃப் சம்பந்தப்பட்ட விஷயம் அதான்.
நடந்ததை யாராலும் மாத்தமுடியாது ஆனா நடக்கபோறதை பத்தி பேசுவோமா?” என்று அவன் கேட்க சற்று ஆசுவாசமான நிதின் யோசித்தபின் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
“எங்க அண்ணா அவங்கள விட்டு பிரிஞ்சு வந த அப்புறம்தான் அவரோட தப்பை உணர்ந்து அவங்களை தேட ஆரம்பிச்சு இருக்காரு ஆனா அவங்க அதை தப்பா புரிஞ்சுட்டு வேற மேரேஜ் செஞ்சு இருக்காங்க ஆனா அண்ணா அவங்க லைஃப்ல குறுக்க வர விரும்பலை. பட் அவங்க அண்ணாவை மன்னிச்சுட்டாங்களா இல்லையானு மட்டும் அவருக்கு தெரிஞ்சா தான் அண்ணாவால நிம்மதியா இருக்கமுடியும். நீங்க என்னை என்னவேணா திட்டுங்க ஏன் அடிக்க கூட அடிங்க நான் ஏத்துக்கிறேன் ஆனா அண்ணாவ அவங்ககிட்ட ஓரே ஓருமுறை பேச வைங்க. அவங்ககிட்ட மன்னிப்பு கிடைச்சாதான் அவருக்குனு ஒரு லைஃப்ப ஏற்படுத்தி கொடுக்க முடியும் அவர் குற்ற உணர்ச்சியிலேயே இருக்காரு.
அண்ட் அவர் என் அண்ணாவா மாறும் முன்னமே இது நடந்து இருக்கு” என்று அவன் கூற மிகவும் குழம்பி போனான் நிதின்.
🧡🧡🧡🧡🧡🧡🧡
Interesting😍