Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய்-83

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-83

அத்தியாயம் – 83

Thank you for reading this post, don't forget to subscribe!

குழப்பமாய் அமர்ந்திருந்த நிதின் ஆராஷியை குழப்பமாய் பார்த்தான்.

“என்ன ஆச்சு மிஸ்டர் நிதின் ஏன் இவ்ளோ குழப்பம்? தேஜுஶ்ரீயோட ஹஸ்பண்ட் தப்பா நினைப்பாரா?” என்று கேட்டான் ஆரா.

“அவர நான் பார்த்து இருந்தாதானே அவரை பத்தி சொல்ல முடியும்?” என்று அவன் கூற இப்போது குழம்புவது ஆராஷியின் முறையாயிற்று.
“புரியலையே?” என்று கேட்டான் ஆராஷி.
“எனக்கு மேதா சொன்ன வரைக்கும் தேஜு காலேஜ்ல ஒரு பையனை லவ் பண்ணதாகவும் அவனையே கல்யாணம் செஞ்சதாகவும் சொன்னா? ஆனா அந்த லைஃப்ல இருந்து பிரிஞ்சு வந்து வேற லைஃப் வாழுறா அதனால அவகிட்ட அவ லைஃப் பத்தி எதையும் கேட்க வேணாம்னு சொன்னா அதனால நானும் அதைப்பத்தி எதையும் அவகிட்ட கேட்கல இப்போ கூட அவ வந்ததும் அவ ஹஸ்பண்ட் பத்தி நாங்க பேசவே இல்லை.
அவளா சொல்லுவானு இருந்துட்டோம் ஆனா அவரு யாரு என்னானுலாம் அவ சொல்லலை பாப்பாவோட பர்த் சர்டிபிகேட் பார்த்து தான் அவ அப்பா பேரையே நான் தெரிஞ்சுக்கிட்டேன். அதும் அப்பாவோட டெத் டைம்ல தான் பார்த்தேன் அதனால அதை பத்தி அவகிட்ட பேச முடியாம போய்டுச்சு அநேகமா அவர் லண்டன்ல தான் இருக்கனும் அவ வரும்போது கூட அவரை கூட்டிட்டு வரலையே” என்று கூற
“அவர் பேர் சொல்லுங்க எனக்கு லண்டன்ல ஒரு போலீஸ் கமிஷனர் தெரியும் அவர்கிட்ட சொல்லி ஈஸியா கண்டுபிடிச்சுடலாம் அவர் மூலமாவே அண்ணனனை மன்னிக்க வெச்சுடலாம்” என்று ஆரா கேட்க
‘மேதாவும் அப்பாவும் ஏன் தேஜுவோட ஹஸ்பண்ட் டீடெய்ல்ஸ் ஏதும கேட்ககூடாதுனு சொன்னாங்க அப்படினா தேஜு அவரோட இல்லையா? மீட்டிங் கூட தேஜு பிள்ளைய மட்டும் தானே கூட்டிட்டு வந்தா அவர பத்தி எதுவும் பேசலையே ஏன்? இவன் வேற ஏதோ புது கதை சொல்றானே? எது உண்மை?’ என்று எண்ணியவன்
உடனே தனது மொபைலை எடுத்தவன் யாருக்கோ ஃபோன் செய்தான் உடனே அவனது மெயில்க்கு தேஜுவின் குழந்தையின் பர்த் சர்டிபிகேட் கிடைத்தது.
அதில் குழந்தையின் பெயருடன் ரியோட்டோ எனவும் தந்தையின் பெயரும் ரியோட்டோ என இருக்க அதை படித்தவனுக்கு ஷாக் அதே அதிர்ச்சியுடன் அதை ஆராஷியிடம் நீட்ட பார்த்தவனுக்கும் அதிர்ச்சி
‘அப்படியானால் அண்ணா அவங்கள பிரிஞ்சு வரும்போதே அவங்க கர்ப்பமா இருந்து இருக்காங்களா? இது அண்ணனுக்கு தெரியாம இருந்ததா?’ என்று யோசித்தவன்.
“இதுக்கு பதில் தேஜு அவங்க தான் சொல்லனும் மிஸ்டர் நிதின்.
அவங்க சொல்லாம நமக்கு உண்மையும் தெரியாது” என்று அவன் கூற

‘அவன் சொல்வதும் உண்மைதான் இப்போதைக்கு தேஜுவின் கணவனை கண்டுபிடித்து அவளை அவளது கணவனோடு பிஸினஸ் உலகிற்கு அறிமுகம் செய்துவிட்டால் அவளது எதிர்கால வாழ்க்கைக்கும் பாட்னர்ஷிப் ஷேர் பிரிக்கவும் கஷ்டம் இருக்காது அதும் இவங்க அண்ணன் தம்பினா நாம இன்னும் ஈஸியா ரெண்டு பேருக்கும் ஷேர் பிரிச்சு கொடுத்துடலாம்’ என்று எண்ணியவன் தனது மொபைலை எடுத்து தேஜுவிற்கு டயல் செய்தான் அதை ஸ்பீக்கரில் போட சொல்லி ஆரா சைகை செய்ய அதையும் செய்தான்
“சொல்லுங்க அண்ணா மேதா பத்தி ஏதும் தகவல் கிடைச்சதா? அவளை தேடிதானே போனீங்க” என்று தேஜு எடுத்ததும் கேட்க ஆராவைதான் முறைத்தான் நிதின் இருந்தும் எதுவும் பேசக்கூடாது என்றுவிட்டாளே ஒருத்தி அதனால் அமைதியாக
“இன்னும் எதுவும் தகவல் கிடைக்கலடா. கிடைச்சதும் சொல்றேன். நான் பேச வந்த விஷயமே வேறடா நேத்து ஆஸ்திரேலியா இன்னைக்கு ஜப்பான் நாளைக்கு லண்டன்னு போகவேண்டி இருக்கு இவ்ளோ நாள் இதெல்லாம் மேதா ஹாண்டில் செஞ்சதால எனக்கு ஃபாரின் டிரிப்ஸ் கம்மி ஆச்சு ஆனா அதை பத்தி முழு விவரம் தெரியாதுல அதான் அந்த ஊர்ல நல்லா தெரிஞ்ச ஆளை இதுக்குலாம் பொறுப்பா போடலாம்னு யோசிக்கிறேன் தஎனக்கு இங்க அங்கனுலாம் லேங்குவேஜ் பேச அலைய ரொம்ப சிரமமா இருக்குடா அதான் உன் புருஷன் லண்டன்ல தானே இருக்காரு அவரோட நம்பரும் அடர்ஸ்ஸும் கொடுத்தினா நான் பேசி உங்களை பிஸினஸ் வேர்ல்ட்க்கு இன்ட்ரோ செஞ்சுட்டு லண்டன் சைட் பிஸினஸ்லாம் அவர்கிட்ட ஒப்படைச்சுடுவேன் அவரோட டீடெய்ல்ஸ் கொடுக்கிறியா? நீங்க ஏதோ ரீசன்காக பிரிஞ்சு இருக்கீங்க சீக்கிரமே சேர்ந்துடுவீங்கனு மேதா சொல்லி இருந்தா ஆனா இப்போ அவளும் இல்லாம நான் ரொம்ப சிரமப்படுறேன் அதான் அவரை பார்த்து பேசி உன்கூட சேர்த்து வெச்சுட்டா எனக்கு கொஞ்சம் அப்பாவோட கடமையை நிறைவேத்தின சந்தோஷம் கிடைக்கும்” என்று கூற முதலில் அமைதியாக இருந்த தேஜு

“இல்ல அண்ணா அவரை காணோம் நான் பிரிஞ்சு வந்த அப்புறம் அவர்வேற எங்கேயோ போய்ட்டார் இப்போ அவரைலாம் கான்டாக்ட் பண்ண முடியாது அவர் வேற யாரையாவது கல்யாணம் செஞ்சு இருப்பாரு இன்னேரம்” என்று கூற நிதினுக்கோ அதிர்ச்சி ஆனால் ஆராஷிக்கு ஏதோ புரிவது போல தோன்றியது.
அமைதியாக இருவரும் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தான்.

அதிர்ந்த நிதின் “என்ன சொல்ற நீ இல்ல எனக்கு புரியல தெளிவா சொல்லு?” என்று அவன் கேட்க தன் வாழ்க்கையை பற்றி அவள் கூறவும் தான் இருவருக்கும் ரியோட்டோ தான் அது என்று விளங்கியது.
ஆனால் ரியோட்டோவும் பேமஸ் டான்சர்தானே அவளுக்கு எப்படி அவனை பற்றி தெரியாமல் போனது என்று யோசித்தவர்கள் அதை பற்றி அப்புறம் பேசலாம் என ஆரா சைகை செய்ய அமைதியானவன்.
“அப்போ அவரை நீ அதுக்கு அப்புறம் பார்க்கவே இல்லையா? குழந்தையை கூட பார்க்க வரலையா?” என்று அவன் கேட்க.
“அவர் சம்பந்த பட்ட எதையும் நான் தெரிஞ்சுக்கவே கூடாதுனு தான் எந்த விதமான வசதியும் இல்லாத ஒரு ஊருக்கு போய்ட்டேன் அண்ணா. எனக்கு மேதா அப்பானு எல்லாரையும் ஃபேஸ் பண்ணவும் தெம்பு இல்ல அங்கே ஹாஸ்பிடல் போக வர வசதி இல்லைனு மேதா என்னை பார்க்க வர ஒரு வாரம் முன்னதான் அங்க இடம் மாறினேன். அவரை விட்டு பிரிஞ்சு வந்து ஒரு மாசம் கழிச்சுதான் எனக்கே நான் கர்ப்பமா இருக்குறது தெரியும் திரும்ப அவர்கிட்ட போய் அவர் லைஃப்ப கெடுக்க எனக்கு விருப்பமும் இல்ல இன்னோரு கொலைகாரி பட்டம் வாங்க என் மனசுலயும் தெம்பு இல்ல அதனால் எனக்கு என் பிள்ளை மட்டும் போதும்னு வந்துட்டேன்” என்று அவள் கண்ணீரோடு கூற கண்கள் கலங்கி போனது நிதினுக்கு.

“அப்பாவைதான் பேஸ் பண்ண விரும்பல அண்ணனனை கூட மறந்துட்டல? ஒரு ஃபோன் பண்ண மாட்டியானு எவ்ளோ நாள் ஏங்கி இருக்கேன் பிள்ளைய வெச்சுட்டு தெரியாத ஊர்ல எவ்ளோ கஷ்டப்பட்ட?” என்று அவன் கலங்கியபடி கேட்க.
அவளுக்கும் வருத்தம்தான் அழுதபடி “விடுங்க அண்ணா என் லைஃப் இப்படிதான்னு ஆகிடுச்சு மேதா லைஃபாபாவது நல்லா அமையனும் எனக்கு அது போதும்னா” என்றவளிடம் ஏதோ தோன்றியவனாக

தேஜு ஒருவேளை அவர் தப்பை உணர்ந்து உன்னை தேடிட்டு இருந்தா?”

“அவரை பொறுத்தவரை நான் அவரோட ப்ரண்ட்ட கொன்ன பாவி அதனால அவர் எப்பவும் என்னை புரிஞ்சுக்க மாட்டார் என்னை தேடவும் மாட்டார். நான் வேற யாரையாவது கல்யாணம் செஞ்சு இருப்பேன்னு தான் அவரும் அவருக்கான லைஃப்ப தேர்ந்தெடுத்து இருப்பாரு.
இப்போ பார்த்தா ஏதோ குழந்தைக்காக என்னை ஏத்துக்கிற மாதிரி ஆகிடும் லவ்ல வாழ்க்கை அமையாது அண்ணா அதுக்கு நான் இப்படியே என் பிள்ளையோட இருந்துக்கிறேன் ப்ளீஸ் நீங்க இதை பத்தி எதுவும் பேசாதீங்க. உங்களுக்கு நானும் என் பொண்ணும் பாரமா இருந்தா சொல்லுங்க நாங்க வேணாம்னா?” என்று அவள் பேச
“அடிச்சு பல்ல பேத்திடுவேன் ராஸ்கல் என்ன பேசுற நீ? நீயும் என் மருமகளும் எங்களுக்கு பாரமா? எனக்கு என் தங்கச்சிங்க வாழ்க்கை நல்லபடியா அமையனும்னு நான் ஆசைப்படகூடாதா? அப்பா இருந்தாலாவது பரவாயில்லை அவரால ஹாண்டில் பண்ண முடியும் அவரும் இல்லாததால நான்தானே ஹாண்டில் பண்ணனும்? வேற கல்யாணம் செய்ய பார்க்கவாடா?” என்று கேட்க
“சாரி அண்ணா உங்கள கஷ்டப்படுத்தி இருந்தா மன்னிச்சிடுங்க.
ஆனா என்னை தயவுசெய்து இப்படியே விட்டுடுங்க.
அவருக்கு வேணா பொண்டாட்டிய விட மத்தது முக்கியமா ஆகி இருக்கலாம் அதை நான் தப்பு சொல்ல மாட்டேன் ஏன்னா அவரோட கல்ச்சர் அப்படி. ஆனா நான் அப்படி இல்ல நான் சரத்ஶ்ரீயோட பொண்ணு மேதாவோட அக்கா என் வாழ்க்கையில எப்பவுமே ஒருத்தர் மட்டும்தான் அதுக்காக அவர் தேடி வந்தா நான் வாழ்வேன்னு அர்த்தம் இல்ல. அவரை என்னால மன்னிக்க முடியும்னு தோணலை ப்ளீஸ் அண்ணா விட்டுடுங்க” என்றுவிட்டு அவள் ஃபோனை வைத்துவிட நிதினோ தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

ஆராஷிக்கும் என்ன சொல்வது என்றே புரியாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான்.
திடீரென அவனது சட்டையை பிடித்த நிதின்
“ஏன்டா உங்க குடும்பத்துக்கு வேற வேலையே இல்லையாடா? ஒருத்தன் என்னடானா என் தங்கச்சியை கொலைகாரி பட்டம் கட்டி வெளியே துரத்தி விட்டான் நீ என்னடானா என் இன்னொரு தங்கச்சிய ஏமாத்துக்காரி பட்டம் கட்டி கண்காணாத இடத்துக்கு துரத்தி விட்ட.
பொண்ணா பொறந்து உங்கள லவ் பண்ணத தவிர வேற என்னடா தப்பு பண்ணாங்க என் தங்கச்சிங்க? ஏன்டா தேடி தேடி அண்ணனும் தம்பியுமா எங்க வீட்டு பொண்ணுங்க வாழ்க்கையையே கெடுத்து வெச்சு இருக்கீங்க?
எங்க அப்பா ஆத்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காதுடா ஒருத்தி வாழ்க்கையாவது நல்லா அமைச்சு கொடுக்க முடியாத பாவியா என்னை விட்டு வெச்சு இருக்காரே.
படிச்சு படிச்சு சொன்னேன் சினிமாகாரன் வேணாம் அதும் வேற நாட்டுக்காரன் வேணாம் நீதான் பின்னால கஷ்டப்படுவனு அவளும் கேட்கலை.
இப்போ இவளும் இன்னொருத்தனை கல்யாணம் பண்ணி வாழாம பிள்ளையோட நிக்கிறாளே? இவ்வளவு வசதி இருந்தும் என் பிள்ளைங்க ரெண்டும் எவ்ளோ கஷ்டத்தை அனுபவிக்கிறாங்க இந்த பாவம்லாம் உங்கள சும்மா விடாதுடா” என்று கத்தியவன் பட்டென அவனது காலரை விட அதுவரை அமைதியாக அவனது கோவத்தை தாங்கியவன் அவன் உதறியதும் நிலைதடுமாறி விழப்போனவனை பார்த்து பதறியவன் சட்டென தாங்கி அவனை சேரில் நிலையாக அமரவைத்தான் நிதின்.
அவனை ஆச்சர்யமான பார்வை பார்த்தான் ஆராஷி.

“என்ன பார்க்கறீங்க? எனக்கு உங்கமேல கொலைவெறியே இருக்கு ஆனா என்ன செய்ய? என் தங்கச்சிதான் உங்கள எதுவும் பேசக்கூடாதுனு சத்தியம் செஞ்சு வெச்சுட்டாளே கூட நாங்க எல்லாம் எங்க அப்பாவை பார்த்து வளர்ந்தவங்க விரோதியாவே இருந்தாலும் அவங்களுக்கு நல்லதே நினைக்கனும்னு நீங்க விரோதிகூட இல்ல என் தங்கச்சி லவ் பண்ண ஆள் உங்களை எப்படியாவது போங்கனு விட முடியுமா?” என்று அவன் விளக்கம் கொடுக்க அவர்களின் வளர்ந்த விதம் அவனுக்கு மிகவும் ஆச்சர்யம் அளித்தது அவனை ஆவென பார்த்தவன் இன்னும் இன்னும் இவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் எந்த சூழ்நிலையிலும் தன்னவளை நான் விட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் அவனுக்கு வலுப்பெற்றது.

“எனக்கு உங்க கோவமும் புரியுது உங்க சிஸ்டர்ஸ்மேல இருக்குற பாசமும் புரியுது. ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க
அவங்க லைஃப் நல்லா அமையும் கண்டிப்பா.
நான் எப்படியாவது அஷ்ஷுவ கண்டுபிடிச்சு அவகிட்ட மன்னிப்பு கேட்பேன்.
என் காதல் அவதான் ஆனா அதுக்காக அவளை வற்புறுத்திலாம் கல்யாணமோ லவ்வோ பண்ண வைக்க விரும்பல.
ஆனா முதல்ல உங்க பர்ஸ்ட் சிஸ்டர் லைஃப்ப சரி செய்யனும். உங்க சிஸ்டர்காக மட்டும் இல்ல என் அண்ணனுக்காகவும்தான் சொல்றேன் அவங்க பேபிக்காகவும் தான் சொல்றேன் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்பவே
விரும்புறாங்க இன்னும் ஏன் சொல்றேன்னா அவங்க அவங்க லைஃப்ல வேற யாரையும் அண்ணனோட ப்ளேஸ்ல வெச்சு பார்க்க விரும்பல அதேசமயம் அவங்களுக்கு அண்ணன்மேல கோவமும் இருக்கு.
என் அண்ணன் செஞ்சதும் தப்புதான் நான் இல்லனு சொல்லல அவரும் அதை உணர்ந்து திருந்திதான் அப்போல இருந்து உங்க சிஸ்டரை தேடிட்டு இருக்காரு அவருக்கு உங்க சிஸ்டரோட ஃபேமிலி பேக்கிரவுண்ட் தெரியாது அதனால அவர் வேற எங்கேயோ இருக்காங்கனு தேடிட்டு இருந்து இருக்காரு.
நேத்து ஃபோட்டோல அவங்கள குழந்தையோட பார்த்துட்டு அவங்க வேற ஒரு லைஃப் அமைச்சுக்கிட்டாங்க போலனு நினைச்சுட்டு இருக்காரு.
அவங்க சந்தோஷமா இருக்கனும்னு சொல்லிட்டு இருந்தாரு ஆனா அவங்கள பார்த்து மன்னிப்பு மட்டும் கேட்கனும்னு சொல்லிட்டு இருந்தாரு.
இப்படி ரெண்டு பேரும் வேற வேற விதமா யோசிச்சுட்டு இருக்காங்க ரெண்டு பேரை பத்தியும்.
அவங்க ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கலைனா இதுக்கு ஒரு சொலியூஷனே கிடைக்காது.
கொஞ்சம் யோசிங்க” என்று பேசியவன்

“அண்ட் இன்னொரு விஷயம் சரத் சர் போட்ட கான்ட்ராக்ட் படி நான் உங்க கம்பெனிகூட டைஅப் பண்ணி பிஸினஸ் ஸ்டார்ட் பண்ண போறேன்” என்று கூற நிதினுக்கு கோவமாய் வந்தது.

“எந்த தைரியத்துல உங்ககூட நாங்க பிஸினஸ் செய்வோம்னு இருக்கீங்க சர் அந்த கான்ட்ராக்ட்ட நான் இப்போவே கேன்சல் பன்றேன்” என்று கூற லேசாக சிரித்தவன்.

“சாரி மிஸ்டர் நிதின் அதை உங்களால கேன்சல் பண்ண முடியாது ஏன்னா அதை கேன்சல் பன்ற உரிமையும் அதுல முடிவு எடுக்குற உரிமையும் உங்க பவுண்டர் சரத்ஶ்ரீ சர்க்கு மட்டும் தான் இருக்கு அவர் இல்லைனா பவுண்டரா இருக்குறவங்க கேன்சல் பண்ணலாம் வேணும்னா உங்க பவுண்டர்கிட்ட மெயில் பண்ணி டிஸ்கஸ் செஞ்சுட்டு சொல்லுங்க அவங்க கேன்சல் செஞ்சா அதை நான் ஏத்துக்கிறேன்
பட் ஒன்திங்க் இந்த பிஸினஸ்ல நான் இன்வால்வ் பண்ணபோற ஷேர் ஹோல்டர் என் அண்ணன்தான் அவரைதான் மேனேஜ்மெண்ட்க்கும் போட போறேன் அப்புறம் உங்க இஷ்டம்” என்றுவிட்டு அமைதியாக நிதினை பார்த்தான்.
அவனை முறைத்தபடி தனது லேப்டாப்பை எடுத்தவன் உடனடியாக பவுண்டர்க்கு மெயிலை டைப் செய்து அனுப்பினான்.
“ஓகே மிஸ்டர் நிதின் உங்க பவுண்டர் ரிப்ளை பண்ணதும் எனக்கு என்னோட பர்சனல் நம்பருக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க ஏன்னா நீங்க சொன்னாதான் நான் என்னோட ஷெட்டியூல்ஸ்ஸ ரீஷெட்டியூல்
பன்ன முடியும் இப்போ நான் கிளம்பறேன் நல்லா யோசிச்சு முடிவு எடுங்க உங்க பெரிய சிஸ்டர் லைஃப்பும் யோசிச்சு. இப்போ நான் கிளம்புறேன்” என்றுவிட்டு எழுந்தவன் தமிழ் முறைப்படி கைகூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு கிளம்பினான்.

“ஒரு நிமிஷம் சர்” என்ற நிதினை நின்று திரும்பி பார்த்தவன்.
“சொல்லுங்க சர்” என்று கேட்க
“சாப்பிட்டு கிளம்புங்க வந்தவங்கள சாப்பிடாம அனுப்பி எங்களுக்கு பழக்கம் இல்ல அது பெரிய பாவம்” என்று கூற சிரித்தவன்
“தேங்க்ஸ் ஃபார் யுவர் டின்னர்” என்றபடி உண்ண அமர்ந்தான் அவர்களது பழக்கத்தை மதித்து.
உண்டபின் அவனை வழியனுப்பி வைத்தான் நிதின் அவன் தன்னை காயப்படுத்தியதால் இந்த பிஸினஸ் கான்ட்ராக்ட்டை கேன்சல் செய்வாள் மேதா என நிதின் நினைக்க அதற்கு மாறாக பிசினஸ்க்கு ஒப்புதல் அளித்து இன்னும் ஆறு மாதத்திற்குள் அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படியும் இந்த ப்ராஜெக்ட்டில் தேஜுவை நமது சைடு மேனேஜ்மெண்ட்டாக நியமிப்பதாகவும் சொல்லி மெயில் அனுப்பி விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *