Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய்-84

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-84

அத்தியாயம் – 84

Thank you for reading this post, don't forget to subscribe!

நிதினுக்கு ஒரு பக்கம் கோவமாக வந்தது அவள்மேல்.
ஆனால் அதில் அடுத்ததாக அவள் குறிப்பிட்டு இருந்தது இந்த ப்ராஜெக்ட் தேஜுவின் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும்.
அவளுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்.
இன்னும் எவ்ளோ நாள்தான் அவளை நாமளே பொத்தி பொத்தி பாதுகாக்கிறது அவளை அவளே பாதுகாக்க பழகனும்.
என்று அவள் குறிப்பிட்டு இருந்தது தான் அவனை யோசிக்க வைத்தது.
மெயிலில் மட்டும் தேஜுவின் கணவரை பற்றி அவன் மேதாவிற்கு சொல்லி இருந்தான். ஆனால் அவரை தானும் பார்க்கவில்லை என்று கூற அவளோ உடனே கணித்து விட்டாள்.
ஆனால் அதை தெரியாதது போலவே காட்டிக்கொண்டவள்.
இருவருக்குள்ளும் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் நாமளாக யாரிடமும் பேசி அட்வைஸ் செய்திய வேண்டாம் என்றுவிட்டாள்.
அதன்படி நிதினும் அமைதியாக இருக்க இதற்கு தகுந்த ஆளாக அவள் தேர்வ செய்தது ஷ்ரத்தா.
அவளுக்கு ஃபோன் செய்து உதவி கேட்க அவளும் உதவுவதாக சொல்ல அதுதான் ஷ்ரத்தா தேஜுவை லெப்ட் ரைட் வாங்கியது.

அதன்பின் தான் நிதின் ஆராஷிக்கு ஃபோன் செய்து
புராஜெக்ட் க்கு ஓகே சொல்லவும் தேஜுவை மேனேஜ்மெண்ட் பொறுப்பை பார்க்க நியமித்ததாகவும் கூற சரி என்றவன் இன்னும் ஆறு மாதங்களில் அவன் இந்தியா வருவதாக கூற அதன்படி அவன் அங்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிதினும் ஒருவேளை இருவரும் சந்தித்தால் அவளுக்கு வாழ்க்கை சரியாகும் என்று எண்ணினான் ஆனால் அதையே கோவப்பட்டு இருவரும் பிரிய முற்ப்பட்டால் அது இன்னும் சிக்கலை தேடி தருமே என எண்ண அதற்குள் தான் ஷ்ரத்தா வருவதை பற்றி மேதா மெயில் செய்ய அதனால் ஷ்ரத்தா பேச பேச அவனும் அமைதியாகி நின்றான்.
தன் தங்கை வளர்ந்து விட்டாள் என்பது அப்போது தான் அவனுக்கு விளங்கியதே.
அதிலும் ஷ்ரத்தா பேசியது அனைத்தும் மேதா எழுதி கொடுத்தவை என்று அறிந்த பின் அவனுக்கு தான் பார்த்த சிறு குழந்தையா மேதா என்பதுதான் எண்ணமாக இருந்தது.

நிதினிடம் பேசிவிட்டு போனை வைத்த ஆராஷி நேராக சென்று நின்றது தன் அண்ணனிடம்தான்.
நிதினிடமிருந்து ஃபோன் வராமல் அண்ணனுக்கு எந்தவித நம்பிக்கையும் வளர்த்துவிட வேண்டாம் என சொல்லாமலே இருந்தான்.
அதனால் தான் இப்போது அவன் முன் வந்து நின்றான்.
“அண்ணா அண்ணா சீக்கிரம் வாங்க உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் இருக்கு” என்றவன் அவனை தரதரவென இழுத்துக்கொண்டு தனது அலுவலக அறைக்கு சென்றான்.
“என்ன என்ன ஆச்சு ஆரா என்ன விஷயம்?” என்று அவன் கேட்க கேட்க எதையும் சொல்லாமல் அவனை இழுத்து சென்று புரொஜெக்டரின் முன் அமரவைத்தவன் அதை உயிர்பித்து வலது பக்கம் ரியோட்டோவின் புகைபடத்தை கண் மற்றும் அவனது கன்னத்தையும் உதட்டின் கீழே அவனது மச்சத்தையும் மார்க் செய்தபடி திரையிட்டான்.
அதை பார்த்த ரியோட்டோ ஒன்றும் புரியாமல்
தனது முகத்தை தொட்டு தொட்டு பார்த்தவன்

“சரியாதானே இருக்கு ஆரா என்ன ஆச்சு எதுக்கு அங்க மார்க் பண்ணி இருக்க?” என்று புரியாமல் கேட்டான் அவனை பார்த்து.

மீண்டும் தனது கம்ப்யூட்டரை தட்டியவன் திரையை பார்க்கும்படி சைகை செய்தான் அவனுக்கு.
ரியோட்டோ திரும்பி பார்க்க அதிர்ந்தான்.
அதில் தேஜு அவளது குழந்தையோடும் ஆராஷியோடும் எடுத்த புகைப்படம் அதுலயும் அவன் அப்படியே அதே இடங்களை மார்க் செய்து இருந்தான்.
புரியாமல் அவனை பார்த்த ரியோட்டோ ஏதோ தோன்ற அந்த புகைப்படத்தை மீண்டும் பார்த்தான் அவனது அதே கண்கள் அதே கன்னக்குழி அதே உதட்டின் கீழ் மச்சம் என்று அந்த குழந்தை இருக்க அதை பார்த்தவனுக்கு கண்கள் கலங்கியது அதிர்ந்தவன் ஆராஷியை பார்த்து
“அ..அப்போ இ…இது என் பேபியா?” என்று அவன் கேட்க
ஆமென்று தலையை ஆட்டினான் ஆராஷி.

“எப்போ? எவ்ளோ கஷ்டப்பட்டா? எ..எனக்கு குழந்தை இருக்குறதையே மறைக்குற அளவுக்கு நான் பாவியா ஆகிட்டேனா? அவளை நம்பாம நானே என் வாழ்க்கையை நாசம் செஞ்சுட்டேனே?” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதான்.

“அழாதீங்க அண்ணா அப்போ அவங்களோட நிலைமையும் யோசிக்கனும்ல” என்று ஆறுதல் சொன்னான் ஆரா.

“ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அவளை என்னைவிட்டு பிரியவே விட்டு இருக்கமாட்டேனே ஆரா பிள்ளையை வெச்சுட்டு எங்கலாம் போய் என்ன கஷ்டப்பட்டாளோ? காலம்பூரா இப்படியே அலைனு குழந்தையை பத்தி கூட சொல்லாம போய்ட்டாளே? நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பே இல்ல ஆரா” என்று அவன் வருந்த

“அவங்களுக்கே அவங்க கன்சீவ்வா இருக்கிறது
அவங்களுக்கே உங்கள விட்டு போன அப்புறம்தான் தெரியுமாம் அதனால தான் உங்கள தேடி வந்தா நீங்க அப்போ இருந்த நிலையில அந்த குழந்தையை வெச்சு உங்களை ப்ளாக்மெயில் பன்ற மாதிரி ஆகிடுமோனு அவங்க போய்ட்டாங்களாம் அவங்க வீட்டுக்கு கூட தெரியாது அவங்கள எட்டாவது மாசத்தில தான் அவங்க ஃபேமிலியே அவங்களை கண்டு பிடிச்சாங்களாம்.
ஒரு..ஒரு ஹோட்டல்ல வெயிட்டரா வேலை செய்திட்டு இருந்தாங்களாம்”
என்று ஆரா தயங்கியபடி கூற.
அதிர்ந்து அவனை பார்த்தான் ரியோட்டோ.

“அவ பணக்கார வீட்டு பொண்ணுனு தெரியும் ஆரா ஆனா அவ ஃபேமிலி பத்தி அவ எதுவும் சொல்லல அப்பா அண்ட் தங்கச்சி இவ்வளவுதான் எனக்கு தெரிஞ்ச தகவல் அதனால அவ வீட்டுக்கு போய் இருப்பானு நினைச்சேனே ஆனா அவ அவ” என்று அதற்குமேல் பேச முடியாமல் அவன் முகத்தை மூடி அழ அவனை அரவணைத்துக்கொண்டான் ஆரா.
“இப்போ பேசி எதுவும் பயனில்ல அண்ணா இனி நடக்கப்போவது பத்தி யோசிங்க.
அண்ணி கிட்ட மன்னிப்பு கேட்டு அவங்ககூட வாழுறதை பாருங்க” என்று கூற

“எப்படி ஆரா? எப்படி அவள பார்ப்பேன்? எந்த முகத்தை வெச்சு அவ மூஞ்சில முழிப்பேன் அவ மன்னிக்கவே முடியாத பாவத்தை பண்ணி இருக்கேனே எப்படி ஆரா? எனக்கு குழந்தை இருக்குறது கூட தெரியாத பாவியா இருந்து இருக்கேனே? நான்லாம் என்ன தகப்பன்? அம்மாவையும் மகளையும் எவ்ளோ கஷ்டப்பட விட்டு இருக்கேன் இந்த பாவத்தை எப்படி சரிசெய்வேன்? அவ என்னை மன்னிக்கவே மாட்டா” என்று அவன் கதற

“தப்பு செஞ்சீங்கள்ள அப்போ தண்டனையும் ஏற்க வேண்டியது உங்க பொறுப்பு.
உங்க கையை விட்டு போன பொக்கிஷம் உங்களுக்கு தேடாமலே திரும்ப கிடைச்சு இருக்கு அதை திரும்ப குற்ற உணர்ச்சில தொலைச்சுடாதீங்க.
போங்க போய் அண்ணி காலுல விழுங்க மன்னிக்குற வரைக்கும் அவங்கள விடாம அவங்ககூடவே இருங்க அவங்க என்ன பேசினாலும் திட்டினாலும் ஏன் அடிச்சாலும் வாங்கிக்கோங்க ஆனா அவங்கள விட்டு போகாதீங்க.
அவங்களுக்கு உங்க பாசத்தை புரிய வைங்க.
அவங்க நீங்க வேற யாரையோ கல்யாணம் செஞ்சுட்டு சந்தோஷமா இருக்கீங்கனு நினைச்சுட்டு இருக்காங்க.
நீங்கதான் அதை பொய்யினு அவங்களுக்கு நிரூபிக்கனும் அவங்கள தவிர உங்களுக்கு வேற யாரும் இல்லனு நீங்கதான் காட்டணும்.
உடனேலாம் அவங்க மனசு மாற மாட்டாங்க ஆனா கண்டிப்பா உங்க லவ் அவங்கள மாத்தும் அதுவரை என்ன நடந்தாலும் நீங்க அவங்கள விட்டு நகரக்கூடாது” என்று பேசிமுடித்தான் ஆரா.

“அவ கால்ல என்ன அவ குடும்பத்துல எல்லோர் கால்லயும் நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்க தயாரா இருக்கேன் ஆரா.
ஆனா அவ என்னை மன்னிக்காம போய்ட்டா? அவங்க ஃபேமிலி என்னை ஏத்துக்கலைனா?” என்று அவன் கேட்க.
நிதின் அவனிடம் நடந்துக்கொண்டதை நியாபகம் செய்தவன்
“கண்டிப்பா ஏத்துப்பாங்க ஆனா அதுக்கு டைம் எடுக்கும் நீங்க அதுக்கு வெயிட் பண்ணனும் உண்மையை சொல்லி அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டு அண்ணிக்கிட்டயும் மன்னிப்பு கேளுங்க நிச்சயமா அவங்க உங்களை ஏத்துப்பாங்க” என்று நம்பிக்கை ஊட்டினான்.
ஆனால் அவனுக்கு நம்பிக்கை அளிப்பது யார்?
அப்படி இப்படி அவனை ஒரு வழியாக சமாதானம் செய்தவன் நிதினிடம் பேசியதையும் இந்தியாவில் தொழில் துவங்க பேசியதையும் கூற அவனை ஆச்சர்யமாய் பார்த்தான் ரியோட்டோ.

“நிஜமாவே அவர் என்னை ஏத்துப்பாருனு நீ நினைக்கிறியா ஆரா? நீ சொல்றதுலாம் சரிடா ஆரா ஆனா இதை அவர் ஏத்துக்கலைனா என்ன செய்ய?” என்று கேட்க
“அதெல்லாம் அவர் உங்களை மன்னிப்பாரு நிச்சயமா எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்றவன்
“இன்னும் ஆறு மாசம்ல நீங்க இந்தியால இருக்கனும் இப்போவே அடி வாங்க உடம்பை நல்லா எக்சர்சைஸ் பண்ணி தேத்தி வெச்சுக்கோங்க ப்ரதர்” என்றுவிட்டு அவன் நகரப்போக அவனது கையை பிடித்தவன்.

“அப்போ உன் லவ்? நீ மீராவ ஈஸியா கிவ் அப் பன்றியா?” என்று அவன் கேட்க
லேசாக புன்னகைத்தவன்.

“இந்த புது பிஸினஸ் ப்ளான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க மட்டும் இல்ல அண்ணா என் அஷ்ஷுவ பத்தி நான் தெரிஞ்சுக்கவும்தான்.
அவ ஃபேமிலியோட நானும் ஒருத்தனா ஆகுறதுக்கு ட்ரை பண்ணத்தான் இதை ஒரு சான்ஸ்ஸா யூஸ் பண்ணிக்க பார்க்கிறேன் அண்ணா.
மேதா ஏதோ ஒரு ரீசன்காக என்னை தள்ளி வெச்சு எங்கேயோ ஒளிஞ்சு இருக்கா அவளையும் பத்தி நான் தெரிஞ்சுக்கனும் அண்ணா முழுசா புரிஞ்சுக்காம அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இனி அவளை பத்தி முழுசா புரிஞ்சுக்கனும் அப்போதான் அவளை நான் சமாதானம் செய்ய முடியும்” என்றான்.

“ஒருவேளை அவ உன்னை ஏத்துக்கலைனா? என்ன செய்வ ஆரா?” என்று அவன் கேட்க
“என்னையே நினைச்சுட்டு அவ இத்தனை வருஷம் வாழ்ந்து இருக்கா அவளை நினைச்சுட்டு என்னால வாழ முடியாதா? ஆனா எந்த சூழ்நிலையிலும் அவளை விட்டுட மாட்டேன் நீங்க உங்க வாழ்க்கையை சரி செய்ய பாருங்க நான் என் லவ்வ சரிசெய்ய பார்க்கிறேன்” என்றான் உறுதியாக.
கூறிவிட்டு தனது அறைக்கு வந்தவனுக்கு தகவல் வந்தது மேதா வேறு ஊருக்கு சென்றதாக.

“எவ்ளோ தூரம் போனாலும் என்கிட்ட வந்துடு அஷ்ஷு” என்றுவிட்டு தன் இதயத்தை நீவி விட்டுக்கொண்டான்.
அதன்பிறகு ஆறு மாதத்தில் அவர்களது ஷெட்டியூல்ஸ்ஸ ஃப்ரீ செய்து கொண்டு இப்போது இங்கு வந்ததாக கூறினான்.

இதையெல்லாம் ஆராஷி கூறி முடிக்க
“சோ இதுக்கு மாஸ்டர் ப்ளான் எல்லாம் நம்ம அண்ணாத்த தானா?” என்று அருந்ததி கூற

அனைவரது பார்வையும் நிதின்மேல்தான் திரும்பியது.

“இப்படி கோர்த்துவிட்டுட்டானே நம்மள” என்று தன்னோடு பேசியவன் அனைவரின் பார்வையையும் பார்த்து
“என்னை ஏன்டா அப்படி பார்க்கறீங்க? இவ ஈகோல இவ இப்படியேதான் இருப்பேங்கிறா
அவரு இவ வேற யாரையோ கல்யாணம் செஞ்சுட்டு இருக்கிறதா சொன்னாரு ஆனா எனக்கு அப்படிலாம் விடமுடியாதே ஏன்னா எனக்கு கோவம் பழிவாங்கும் படலம் இதையெல்லாம் விட அவங்க சந்தோஷமான வாழ்க்கை ரொம்ப முக்கியம். அதுக்காக தான் நான் இவர் இங்க வர்றதுக்கு ஓகே சொன்னேன் ஆனா இதை ப்ராஸஸ் பன்னது மேதா தான் அவதான் இவங்கள ப்ராஜெக்ட் மேனேஜரா பண்ணது அப்போதான் இவங்க சேர முடியும்னு. பணம் காசு எது போனாலும் திரும்ப சம்பாதிக்கலாம் ஆனா வாழ்க்கை அதை திரும்ப வாழ முடியாதே. எப்படியோ போகட்டும்னு நான் விடமுடியாது ஏன்னா எனக்கு இவங்க ரெண்டு பேர் வாழ்க்கைதான் முக்கியமா பட்டுச்சு அதான் செஞ்சேன் ” என்றான் அவன்.

“ம்ம் அண்ணா சொல்றது சரியா இருக்குறதால ஏத்துக்குறோம் ஆனா நீங்க? மிஸ்டர் ஆராஷி
எப்பவுமே தப்பா தெரிஞ்ச எங்க மேதாவும் அவளோட லவ்வும் எப்போ உங்களுக்கு எப்போ உண்மைனு தெரிஞ்சது? அவளை தேடி எது உங்கள இங்கே எல்லா வேலையும் விட்டுட்டு வர வெச்சது?
சப்போஸ் எங்க மேதா உங்கள ஏத்துக்கலைனா என்ன செய்வீங்க?” என்றாள் அருந்ததி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *