Skip to content
Home » கடி ஜோக்ஸ்-1

கடி ஜோக்ஸ்-1

disclaimer: கடி ஜோக்ஸ் ஒவ்வொன்றும் forward message மூலமாக தொகுத்து வழங்குவது மட்டுமே. copyright கேட்டு யாரும் உள்ளே குதிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றது.

*நகைச்சுவை நகைச்சுவைக்கு மட்டுமே.*

 நெஞ்சைத் தொடும் ஒரு வார்த்தை சொல்லு

 பனியன்

***

குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கேட்டிருக்கிங்களா?

நாம கேட்டா கொடுப்பாரா?

***

ராமன் கடன் வாங்கினான். இது என்ன காலம் சொல்லு?

அது ராமனோட கஷ்டகாலம் சார்

***

நீ ஏன் பரட்டைத் தலையோட இருக்க?

எண்ணெய்” சேர்க்கக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காரு!

***

ஏண்டா மெதுவா லட்டர் எழுதுகிரா?

எங்க அம்மாவுக்கு வேகமா படிக்க வராதது தான்

***

50 ரூபா கடன் கிடைக்குமா? சுத்தமா பணம் இல்லைங்க!

அழுக்கா” இருந்தாலும் பரவாயில்லைங்க!

***

டேய் பனியில் நிக்காதடா! சளி பிடிக்கும்.

நான் பனியில நிக்கல டா! காலில் தான் நிற்கிறேன்.

***

மேலே பந்து வீசினால் அது தானாக கீழே வந்துடுதே, எப்படி?

ஏன்னா, மேல பிடிக்க ஆள் இல்ல, அதான் கீழ வந்துடுது சார்.

***

ஏன் அவன் பளுவை தூக்கி வைத்துக் கொண்டே படிக்கிறான்?

ஏன்னா! அவங்க டீச்சர் “கஷ்டப்பட்டு” படித்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று சொல்லியிருக்கிறார்களாம்.

***

எங்கே ஈ காட்டு பாக்கலாம்?

 நீங்க ‘ஈ” பார்த்ததில்லையா டாக்டர்!

***

ஏன்டா பரிட்சை எழுத வந்துட்டு தூங்குற?

கேள்விக்கு பதில் தெரியலனா சும்மா “முழிச்சு”க்கிட்டு இருக்க கூடாதுன்னு எங்க அப்பா தான் சொன்னாங்க சார்.

***

ரொம்ப நாள் உயிரோட இருக்க என்ன பண்ணனும் ?

சாகமா இருக்கணும்.

***

பசுமாடு ஏன் பால் தருகிறது

அதனால் காப்பி டீ தர முடியாது

***

கணக்கு பரிட்சையில் கணக்கு போடாமல் எதுக்குடா இப்படி டான்ஸ் ஆடிட்டு இருக்க.?

 சார் நீங்க தான் சொன்னீங்க ஸ்டெப்ஸ்க்கு மார்க் உண்டு என்று

***

ரெண்டு பேர் ஓட்டலுக்கு போறாங்க நாலு நாள் இட்லி ஆர்டர் செய்து சாப்பிடறாங்க அதை சாப்பிட்டதும் அவங்களுக்கு புட் பாய்சன் ஆயிடுச்சு ஏன்?

ஏன்னா அது நாலு நாள் இட்லி..

***

எந்த பூச்சியை தொட்டால் சாக் அடிக்கும்

மின் மினி பூச்சியை.

***

இரும்பு மனிதர் என்று யாரை அழைக்கலாம்?

மனைவியின் அடியே தாங்கிக் கொண்டு ஆழமாய் இருப்பவரே

***

முட்டையே போடாத பறவை அது என்ன பறவை?

அது ஆண் பறவை.

***

வெற்றிலையுடன் சேராத பாக்கு எது?

மைசூர் பாக்கு

***

 டாக்டர் ஊசி போட வரும்போது ஒருத்தன் தடுத்தானா ஏன்?

ஏன்னா அது தடுப்பூசியாம்.

***

பத்து யானையில் 9 யானை பேருந்தில் ஏறிவிட்டனர் ஒரு யானை மட்டும் அந்த பேருந்தில் ஏற முடியவில்லை ஏன்?

அது ஆண் யானை வந்ததோ லேடீஸ் பஸ்.

***

கல்யாண வீட்டுல ஒரு ஆல மட்டும் இலுத்து சாம்பார்ல போட்டாங்களா ஏன்?

ஏன்னா அவருதான் அந்த ஊர்லயே பெரிய பருப்பாம்.

***

அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன வித்தியாசம்?

 வயசு வித்தியாசம்.

***

எறும்பு பெருசா யானை பெருசா?

அப்படியெல்லாம் சொல்ல முடியாது மேடம் பிறந்த தேதி வேணும்.

***

டாக்டர் என்ன நாய் கடித்து விட்டது எந்த இடத்தில?

பெருமாள் கோவில் சந்துல.

***

வீட்டு சாவி தொலஞ்சி போனா யார்கிட்ட கேக்கணும்?

“கீதா” கிட்ட தா கேக்கணும்.

***

ஏன்டா நாய் படம் வரைந்து விட்டு வாய் மட்டும வரையாமல் வச்சி இருக்க?

 அது வாயில்லா பிராணி சார்.

***

பன்னுல  தண்ணீர் போனா என்னாகும்?

“பன்னீர்” ஆகும்.

***

ஓரு பாம்பு ரொம்ப நேரம் அழுதுகிட்டு இருந்துச்சாம் ஏன்?

ஏன்னா அது எடுத்த படம் FLOP ஆயிடுச்சாம்.

***

கும்பகர்ணன் மாத கணக்கில் தூங்கினான் அது என்ன காலம்?

கொசுவே இல்லாத காலம்.

***

எல்லா Letter-ம் வர மாதிரி ஒரு Word சொல்லுங்க?

Post Box.

***

ரொம்ப காஸ்ட்லியான கிழமை எது?

வெள்ளிக்கிழமை.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *