Post Views: 30
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
- அகல உழுகிறதை விட ஆழ உழு.
- அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்.
- அடக்கமே பெண்ணுக்கு அழகு.
- அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
- அடி நாக்கிலே நஞ்சும், நுனி நாக்கில் அமுதமும்.
- அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
- அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
- அடியாத மாடு பாடியது.
- அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
- அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
- அரசன் இல்லாத நாடு அச்சில்லாத நாடு.
- அருமையற்ற வீட்டில் எருமையும் குடி இருக்காது.
- அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன? கழுதை மேய்ந்தாலென்ன?
- அழுகின்ற ஆணையும், சிரிக்கின்ற பெண்ணையும் நம்பக்கூடாது.
- அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
- அறச் செட்டு முழு நட்டம்.
- அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
- அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பயில்லை.
- அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.
- அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
- அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
- அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
- அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
- ஆடையிலாதவன் அரை மனிதன்.
- ஆனை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.
- ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
- ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
- ஆலும், வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறிதி.
- ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
- ஆழமறியாமல் காலை இடத்தே.
- ஆற்றில் ஒரு கால் சேற்றி ஒரு கால்.
- ஆனைக்கும் அடி சறுக்கும்.
- ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
- ஆனை கருத்தால் ஆயிரம் பொன்.
- ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
- தேன் ஒழுக பேசி , தெருவழியே விடுகிறது.
- முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
- சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்.
- தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும்.
- நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.
- அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
- சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.
- ஆடு கொழுக்கிறதெல்லாம், இடையனுக்கு லாபம்.
- கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
- நாவு அசைய , நாடு அசையும்.
- உண்பான் தின்பான் பைராகி, குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி.
- கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
- இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
- தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
- எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
- கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
- காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
- ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
- கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
- களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
- அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப்பெண்ணும் சமைக்கும்.
- நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
- எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
- உடல் ஒருவனுக்கு பிறந்தது, நாக்கு பலருக்கு பிறந்தது.
- கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
- கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
- அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
- கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக.
- இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
- கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.
- கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
- நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
- சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
- நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
- நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்.
- குரங்கின் கைப் பூமாலை.
- நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
- ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
- பூனை கொன்ற பாவம் உன்னோடு, வெல்லம் தின்ற பாவம் என்னோடு.
- கொல்லைக்குப் பல்லி , குடிக்குச் சகுனி ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
- இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
- நாய் விற்ற காசு குரைக்குமா?
- மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
- நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
- பல துளி பெருவெள்ளம்.
- பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
- குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
- கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
- சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
- குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
- சாரத்தை உட்கொண்டு சக்கையை உமிழ்ந்துவிடுவதுபோல்.
- வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
- தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?
- எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
- அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
- கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
- வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.
- அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
- மாரடித்த கூலி மடி மேலே.வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
- சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
- தனி மரம் தோப்பாகாது.
- வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
- கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
- செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
- வளவனாயினும் அளவறிந் தளித்துண்.
- ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?
- எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
- தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
- மவுனம் கலக நாசம்.
- பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
- ஓடுகிற கழுதை வாலைப் பிடித்தால், உடனே கொடுக்கும் பலன் (உதய்).
- பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.
- இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
- கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
- பசியுள்ளவன் ருசி அறியான்.
- ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
- கீர்த்தியால் பசி தீருமா?
- ஆரால் கேடு, வாயால் கேடு.
- அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
- இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
- கீறி ஆற்றினால் புண் ஆறும்.
- எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஓர் உழவு.
- எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
- நித்திய கண்டம் பூரண ஆயிசு.
- மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
- எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
- சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
- நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
- முளையில் கிள்ளாதது முற்றினால், கோடாலிகொண்டு வெட்ட வேண்டும்.
- கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?
- சொல்வல்லவனை வெல்லல் அரிது.
- எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
- இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!
- நுணலும் தன் வாயால் கெடும்.
- கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
- கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
- உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன்?
- கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
- கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
- காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
- மத்தளத்திற்கு இரு புறமும் இடி.
- அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
- கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
- அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
- காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
- சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
- உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
- பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
- கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
- வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
- வானம் சுரக்க , தானம் சிறக்கும்.
- குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
- ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
- புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
- கல்லாதவரே கண்ணில்லாதவர்.
- கைய பிடித்து கள்ளை வார்த்து, மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?
- காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
- உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
- நோய்க்கு இடம் கொடேல்.
- உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
- கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
- கடல் திடலாகும், திடல் கடலாகும்.
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
- உளை (அல்லது சேறு) வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய்
- அலைகிறதுபோல்.
- அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
- எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
- ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
- இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
- நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.
- அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி .
- கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
- அறமுறுக்கினால் அற்றும் போகும்.
- வெளவாலுக்கு யார் தாம்பூலம் வைத்தார்கள் ? வீட்டுக்கு செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை.
- இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
- கனிந்த பழம் தானே விழும்.
- கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
- தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
- கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
- பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
- தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
- சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
- சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது.
- நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
- அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
- மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
- பக்கச் சொல் பதினாயிரம்.
- ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
- ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
- சர்க்கரை என்றால் தித்திக்குமா?
- நன்மை கடைப்பிடி.
- எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
- முருங்கை பருத்தால் தூணாகுமா?
- கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
- கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
- அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா? மீதூண் விரும்பேல்.
- நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
- நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை.
- தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
- கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
- தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
- ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
- கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
- மன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி.
- எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
- மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?
- தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
- குலத்துக்கு ஈனம் கோடாலிக்காம்பு.
- மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
- மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
- புண்ணியத்துக்கு உழுத குண்டையை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல.
- நாலாறு கூடினால் பாலாறு.
- தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
- கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
- நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
- ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
- பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
- இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே.
- ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
- கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
- காற்றில்லாமல் தூசி பறக்குமா?
- ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
- ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
- இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.
- அறிய அறியக் கெடுவார் உண்டா?
- ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வேறு நாளாச்சுது
- பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்
- ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்
- அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
- பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு
- தடி எடுத்தவன் தண்டல்காரனா
- போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா
- போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
- எலி வளையானாலும் தனி வலை வேண்டும்
- சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி