தீரனின் தென்றல் – 35
Thank you for reading this post, don't forget to subscribe!“உன்னை மாதிரி ஒருத்தன் என் குழந்தைக்கு அப்பா னு சொல்லறதுக்கு என் பொண்ணு அப்பன் பெயர் தெரியாதவளாவே இருந்திட்டு போகட்டும்…” அலட்சியமாக தென்றல் கூறி இருக்க அந்த வார்த்தை தந்த கோபத்தை அடக்க வழியின்றி ஆக்ரோஷமாக
“தென்றல்…” என்று கத்திய ஆதீரன் அவளை அடிக்க கை ஓங்கி இருந்தான்…. முதல் முறை ஆதீரனின் கோபத்தை பார்த்து பயந்த அபூர்வா “அம்மா…” என்று அழத் துவக்க ஓங்கிய கையை அப்படியே கீழே இறக்கி முஷ்டியை மடக்கி தன் தொடையில் குத்தி கோபத்தை அடக்கினான் ஆதீரன்.
“இதோ பாரு தென்றல்.. அபூர்வா என் பொண்ணு… இவ்வளவு நாள் உன்னை கஷ்டப்படுத்திட கூடாது உன் மனசை நோகடிக்க கூடாது நானும் என் பொண்ணை விட்டு விலகி இருந்தேன். ஆனா… இனி அப்படி முடியாது தென்றல்.
என்னையும் என் குழந்தையையும் இனி பிரிச்சு வைக்க உன்னால முடியாது… இதோ பாரு தென்றல் நான் உடனே நான் பண்ண தப்பை மறந்து என்னை ஏத்துக்கோ என்னோட வாழு னு நான் மட்டும் இல்ல… இங்க யாருமே சொல்லப்போறது இல்ல… ஆனா… ஆனா.. அபூர்வா என் பொண்ணு… அவகிட்ட நான் உரிமை எடுத்துக்கிறதோ இல்ல அவளோட நல்லதுக்கு நான் பண்றதை தடுக்கவோ உனக்கு கூட உரிமை இல்லை.. நல்லா புரிஞ்சுக்கோ…” இழுத்துப் பிடித்த பொறுமையோடு ஆதீரன் பேச அதையெல்லாம் தூசி தட்டுவது போல ஒற்றை அலட்சிய பார்வை சிந்தினாள் தென்றல்.
“ஏய் தென்றல் அந்தப் பிள்ளை தான் இவ்வளவு பேசுதே.. எதாவது பேசு டி…” பொன்னி சொல்ல அவரை முறைத்து பார்த்த தென்றல்
“இதோ பாரு… அன்னைக்கு உன்னையே உலகமா மனசுல சுமந்து உன் குழந்தையை என் வயித்துல சுமந்துட்டு உன்னை தேடி வந்தப்போ நீ பேசுனியே… அதுலயே இந்த தென்றல் செத்துப் போய்ட்டா… இப்போ இருக்கிறது என் பொண்ணுக்காக வாழ்ந்திட்டு இருக்கிற நடை பிணம் தான்…
என்கிட்ட இருந்து எல்லாத்தையும் எடுத்துக்கிட்ட… என் அப்பாவை கூட இழக்க நீ தான் காரணம்… இப்போ எனக்கு இத்தனை வருஷம் உறுதுணையா இருந்த எல்லாரும் நான் ஏதோ தப்பு பண்ற மாதிரி பேசுறாங்க… சரி… எனக்கு யாரும் வேண்டாம்… ஆனா அபூர்வா தான் என் உயிர் எனக்கு எல்லாமே..
என்கிட்ட இருந்து அவளை மட்டும் பிரிச்சிடாதே…” என்று கையெடுத்து கும்பிட தீரன் வேதனை கொள்ள ரூபிணி பொன்னிக்கு ‘என்ன இவள் இப்படி பேசிட்டு இருக்கா?’ என்று கோபம் வர மதன் குமார் சித்ரா தென்றல் விபரீத முடிவு எடுத்து விடக் கூடாது என்று மனதில் பதைபதைத்துக் கொண்டு இருந்தனர்.
“இந்தாடி… அண்ணே என்ன சொல்லுது.. நீ என்ன பேசுற?” என்று அடக்கமாட்டாது கேட்டு விட
“நான் ஒன்னும் சம்பந்தம் இல்லாம பேசலை.. எனக்கு இனி யாரும் தேவையே இல்லை… என் பொண்ணை தயவு செஞ்சு யாரும் எங்கிட்ட இருந்து பிரிச்சிடாதீங்க… நான் இப்போவே என் பொண்ணை கூட்டிட்டு எங்கயாவது கிளம்பறேன்…” என்று அபூர்வா கையை பிடித்து கொண்டு வாசலை நோக்கி செல்லப்போக அனைவருமே ஓடி வந்து பதறி தடுத்தனர்.
“தென்றல் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் கொஞ்சம் அமைதியா இரு மா…” மதன் சொல்ல
“ஆமா தென்றல் ப்ளீஸ் காம் டவுன்… அமைதியா இரு இந்த நைட் டைம் ல ஏன் இப்படி பண்ற?” சித்ரா சொல்ல
“உங்களை கூட நான் எவ்வளவு நம்பினேன்… கடைசில இப்படி நீங்களும் இவனுக்கு சப்போர்ட் தான் இல்ல? அது சரி.. இத்தனை வருஷம் என் கூடவே இருந்து என்னோட கஷ்டம் எல்லாம் தெரிஞ்ச இவங்களே எனக்கு துரோகம் பண்ணிருக்கப்போ உங்களை கேட்கவா வேணும்?” என்று தென்றல் மிகுந்த வேதனையோடு சொல்ல சித்ரா மதன் இருவருக்கும் மிகவும் வருத்தமாக போனது.
குழந்தைகள் இருவரும் நடப்பது எதுவும் புரியாமல் பயத்தில் அழுத படி நிற்க அபூர்வா கையை பிடித்து மீண்டும் வாசலை நோக்கி செல்லப்போக
“தென்றல்… தென்றல் நாங்க என்னடா பண்ணோம் துரோகம் அது இதுன்னு சொல்ற? இதோ பாரு மா… இத்தனை வருஷம் உன் கூடவே இருந்ததால தான் உன்னோட குழந்தையோட நல்லதுக்கு யோசிச்சு தான் தென்றல் சொல்றோம்… இதோ பாரு ஏற்கனவே நீ வேலை பார்த்த இடத்துல அங்க உன்கிட்ட தப்பா நடந்துக்க வந்தாங்க னு தானே நீ இவனோட கம்பெனிக்கு வேலை தேடி போன..
உன்னோட பாதுகாப்பு மட்டும் இல்ல டா அபூர்வா குட்டியோட பாதுகாப்பும் ரொம்ப முக்கியம். இந்த சமூகத்துல குடும்பம் ங்கற அமைப்பை விட பெரிய பாதுகாப்பு என்ன இருக்கு சொல்லு… குடும்பம் னா என்ன தென்றல்? அம்மா அப்பா குழந்தை னு சேர்ந்தது தானே குடும்பம்… அதனால தான் நாங்க ஆதீரனை உன்னோட சேர்த்து வைக்க நினைச்சோம்.
தங்கச்சி மா… அவன் மேல தப்பு எதுவும் இல்ல டா.. ஏற்கனவே அவனோட அம்மா சாகுற வரைக்கும் அவனோட பேசவே இல்லை… ரங்கநாதன் அப்பாவோட சாவுக்கும் தான் தான் காரணம் னு இத்தனை நாள் உன்னை மாதிரி அவனும் குற்ற உணர்ச்சி ல தான் தவிச்சிட்டு இருந்தான் தென்றல்.. பாவம் அவன் அவனை நீ உடனே ஏத்துக்க வேண்டாம்…
ஆனா அபூர்வா குட்டிக்கு அப்பா பாசம் னா என்னனு தெரியாம அவ வளரனுமா? நானும் சக்தியும் சேர்ந்து விளையாடும் போது குழந்தை எவ்வளவு ஏக்கமா பார்ப்பா.. அவளுக்கு பாசத்தோட பாதுகாப்பும் ரொம்ப தேவை டா…” குழந்தையை வைத்தே அவளை அமைதி படுத்த நினைத்தான் குமாரவேலு.
அவன் நினைத்தது போல ஓரளவுக்கு சற்று அமைதியாக அந்த இடத்திலேயே நின்று அவன் பேசியதை கேட்ட தென்றல் குழந்தையை அழைத்துக் கொண்டு தனியே சென்றால் அவளுக்கு பாதுகாப்பு இருக்குமா? என்று சிந்திக்க துவங்க அதை பயன்படுத்தி
“ஆமா தென்றல்… பாஸ் சொன்ன மாதிரி அவரோட அப்பா பத்தியும் உங்க அப்பா பத்தியும் சரியா புரியாம எடுத்த முடிவு தானே எல்லாத்துக்கும் காரணம். அவரோட அப்பா கெட்டவரு னு எடுத்து சொல்லி நீங்க எல்லாரும் அன்பா இருந்திருந்தா கண்டிப்பா அவரு யாரையும் தப்பா நினைச்சிருக்க மாட்டாரே… இப்போ அதே போல தான் அபூர்வா அவளுக்கு தேவைப்படுற வயசுல அப்பாவோட அன்பு அரவணைப்பு கிடைக்காம போன அவளுக்கு பிற்காலத்துல ஆண் இனத்து மேலேயே வெறுப்பு வரும்… அவளோட மனநிலை எப்படி இருக்கும்? யோசி தென்றல்…” என்று மதன் இன்னும் எடுத்து கூற தென்றலின் யோசனை இன்னும் அதிகப்பட அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தென்றலை தன் பிஞ்சு விரல்கள் கொண்டு சுரண்டி தன்னை பார்க்க செய்த அபூர்வா
“அம்மா… எனக்கு அப்பா வேணும் மா… நீ மத்தும் உன் அப்பா நல்லரு அவரை பிக்கும் (பிடிக்கும்) சொல்லுவே ல.. சத்திக்கு கூட அப்பா ஈக்கு… எனக்கும் அப்பா வேணும் ம்மா… ப்பீலீச் ( ப்ளீஸ்) ..” என்று கூறிய அபூர்வாவை விழியகல பார்த்திருந்தாள் தென்றல்.
இனி தென்றல் எடுக்கப் போகும் முடிவு என்ன?
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Well.said appukutty. Intresting
antha kutty papa kuda sandaiya purinjitu appa venum kekura ena mudivu eduka pora thendral ipo