அத்தியாயம்-17
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை.
வீட்டில் சர்ச் செல்வதற்காக,
சாரா வெள்ளை நிற சால்வார் அணிந்து கண்ணாடி முன்னால் நின்றாள். முகத்தில் மெதுவான நிம்மதி இருந்தாலும்… உள்ளுக்குள் இன்னும் ஒரு சிறிய பதட்டம்.
நேற்று சார்லஸ் சோர்வாக வந்தவன், ஜோசப்பை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி நர்ஸ் டாக்டர்னு கூடவே இருந்து இனி பார்த்துக்க சொல்லிட்டு வந்தேன். வில்லியமஸ் தலையாட்டியிருக்கார்.’ என்று குளிக்க சென்றவன், திரும்பி வந்து, ‘டயர்டா இருக்கு சாரா’ என்றவன் சாப்பிட்டு ஜெபித்துவிட்டு படுத்துவிட்டான்.
நிர்மலா வந்து எட்டி பார்த்திட, உறங்கிய சார்லஸை கண்டு, சாராவை ‘ஒரே ரூம்ல இருந்ததுக்கே இத்தனை அக்கப்போரு’ என்று சலித்து சென்றார். பாத்திரம் கழுவி வந்த சாராவுக்கு ஏர்பானை கழட்டிவிட்டு கதவை தாழிட்டு உறங்கினாள்.
சார்லஸ் பின்னால் வந்து நின்றான்.
“ஹாய்… சர்ச் போக ரெடியா?” என்று அவன் மெதுவாக கேட்டான்.
சாரா கண்ணாடியில் அவனை பார்த்து புன்னகைத்தாள்.
“ம்ம்…”
அவளது தோளில் அவன் கையை வைத்தான். பிறகு சிகையை ஒதுக்கி, கைப்பிடித்து போட்டில் பயணமானார்கள்.
சர்ச் வந்ததும் அங்கே ஜெபம் நடந்து கொண்டிருந்தது. கர்த்தரை பற்றி அவரது பெருமைகளும் ஸ்தோத்திரமும் கூறியபடி பாதர் உரையாற்றி ஜெபிக்க, கூட்டத்தில் ஆமென்’ என்ற கோஷங்களும் உச்சரித்தனர். இதெல்லாம் மனதிற்குள் கேட்டாலும், ஏதோ எங்கோ கேட்பது போன்ற மாயை.
ஒருசிலர் கர்த்தருக்கு நன்றி கூறும் விதமாக, அவர்கள் வேண்டியது நடந்தேறியதும், கர்த்தருக்கு சபையறிய நன்றி கூறி பேசுவது நிகழ்ந்தது. அதை பார்த்து சாரா புன்னகைத்தாள். ஒரு குழந்தை பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று அங்குவந்தவருக்கு சாக்லேட் தரவும், ஆசிர்வதித்து அவ்விடம் மகிழ்ச்சி கடலில் சூழ்ந்தது.
இனிப்பை சுவைத்து வெளியே வர, “சாரா… ஜோசப்போட பேரண்ட்ஸிடம் பேசிட்டு வர்றேன்.” என்றதும் வில்லியம் தபித்தாளை கவனித்தாள்.
அவர்கள் சார்லஸை ஏதோ தேவதூதனாக கண்ணீர் மல்க வேண்டி கைப்பிடித்து பேசவும், சாராவுக்கு ஒரு காலத்தில் தாய் மரியம், தந்தை அந்தோனி இப்படி தான் டாக்டர் ரிச்சர்டிடம் தனக்காக கண்ணீருடன் வேண்டியதை நினைவுக்கூர்ந்தாள்.
அப்போது… நிர்மலாவின் குரல். “ஸ்டெல்லா சிஸ்டர்” என்றதும் சாரா திரும்பினாள்.
ஸ்டெல்லா ஜெபம் முடிந்ததும், மக்கள் வெளியே நகர ஆரம்பித்தனர். நிர்மலாவை கண்டதும், “நிர்மலா… உங்களை கவனிக்கவில்லையே. எப்படி இருக்கிங்க? சார்லஸ் வந்திருக்கானா? ரிச்சர்ட் இங்க வந்ததும் சார்லஸை தேடினார்.” என்று விசாரித்தார்.
“நான் நல்லா இருக்கேன். சார்லஸ் அதோ அவன் பேஷண்டோட அப்பா அம்மாவை பார்த்து பேசிட்டு வர்றேன்னு போனான். ” என்று சுட்டிக் காட்டினார்.
அந்த நேரம், “இது… சாரா இல்ல?” என்று கேட்க, சாரா “ஆமா ஆன்ட்டி” என்றாள்.
“ஹாய் மா.. நான் டாக்டர் ரிச்சர்ட்டோட ஓய்ப். நிர்மலா சொல்லியிருப்பாங்களே.. உனக்கும் நினைவிருக்கும். அவரிடம் தானே நீ பலமுறை பேஷண்டா ட்ரீட்மென்ட்கு வந்த.
இப்ப எப்படியிருக்க? நல்லாயிடுச்சா?” என்று கேட்டார்.
“நினைவிலுண்டு” என்றாள்.
“இப்பவும் ஏதாவது பிரச்சனை இருக்கா? ஓ மை காட் இனி உனக்கு டாக்டர் ரிச்சர்ட் தேவைப்படமாட்டார். சார்லஸே உனக்கான ட்ரீட்மென்ட் பார்த்திடுவான்.” என்று கேலியாக சிரிக்க நிர்மலா கடுகடுவென நின்றார். ஸ்டெல்லா புன்னகையுடன் இருந்தாலும்… அந்த புன்னகை சாராவுக்கு ஓட்டவில்லை
“இப்போ எப்படி இருக்க? மருந்து எல்லாம் ரெகுலரா எடுத்துக்கறியா?” என்றதும்,
சாராவின் முகம் உடனே மாறியது.
“நான் மெடிசன் விட்டு டூ இயர்ஸ் கம்பிளிட் ஆகுது ஆன்ட்டி. ஐ அம் கம்பிளிட்டிலி ஆல்ரைட்” என்று கூறினாள்.
“ஓ..” என்று கூற, சாரா சற்று நகர்ந்துவிட்டாள். நிர்மலாவோ “என்னத்த கம்பிளிட்லி ஆல்ரைட்டோ? நம்ம தலையில விழுந்துடுச்சு.” என்று நிர்மலா சலித்திடுவது கேட்டது.
“நிர்மலா சிஸ்டர்.. அந்த துகிரா எப்படியிருக்கா?” என்று விசாரித்தார்.
“அட… அவளுக்கென்ன? இப்போ அவ அக்கா புருஷனோட நல்லா செட்டில் ஆகிட்டா. அக்கா குழந்தைக்கு அம்மாவா இருந்தவ, இப்ப பிரகனெண்டா வேற இருக்கா. எல்லாம் மெர்ஸி கல்யாணத்துக்கு வந்துட்டு போனா.
ரொம்ப பிடிவாதம் பண்ணாம இருந்திருந்தா, சார்லஸ் துகிராவை மணந்திருப்பான். அவ அக்கா புருஷன் வந்து அவன் குழந்தையை கூட்டிட்டு போயிருப்பான். இந்நேரம் சார்லஸ் குழந்தை துகிரா வயிற்றில வளர்ந்திருக்கும். அப்ப தாமதிச்சு மறுத்ததுக்கு இப்ப இவளை சார்லஸ் கட்டிட்டு அல்லாடுறேன்.
மெர்ஸி மேத்யூ எல்லாம் ஹனிமூனுக்கு குலுமனாலி போயிருக்காங்க. இந்த சார்லஸ் துகிராவை நினைச்சிட்டு இவளை விவாகம் செய்துட்டு படாத பாடுபட்டு, அவனோட இரக்க சுபாவத்தால இந்த பைத்தியத்தை இப்ப மனைவின்னு சொல்லிட்டு பாவம் பார்க்கறான்.” என்று பேசவும் சாராவுக்கு முள்ளை மிதித்த உணர்வு.
சாரா கண்களை மெதுவாக மூடி கலக்கத்தை மறைத்தாள்.
நிர்மலா பக்கத்தில் இருந்த ஸ்டெல்லாவோ “அவள மாதிரி பொண்ணு இனி கிடைக்காது. எவ்வளோ அழகு. அறிவு, நல்ல தெளிவு.” என்ற வார்த்தை சாராவின் நெஞ்சை நேராக குத்தியது.
நல்ல தெளிவு என்றால்? நான் புத்தி தெளிவற்றவளென கூற வருகின்றனரா?’ என்று தான் சாராவுக்கு தோன்றியது.
சார்லஸ் வில்லியமுடன் பேசி அவர் சென்றதும் டாக்டர் ரிச்சர்ட் பிடித்துக் கொண்டார். அவரோடு பேசிக்கொண்டே அன்னை நிர்மலா ஸ்டெல்லா, மனைவி சாரா இருக்குமிடம் நடந்தான்.
“ஓகே மை பாய்… ஒரு நாள் விருந்துக்கு வாங்க.” என்று கூறி, “ஹாய் மா சாரா. ஹௌ ஆர் யூ” என்றார்.
“பைன் சார்.” என்றவள், சார்லஸை கண்டு பேசும் சக்தி இழந்தவளாக நின்றாள்.
“மெடிசன் எல்லாம் இப்ப எடுத்துக்கலைனு சார்லஸ் சொன்னான். உன்னோட கேஸ் சம்மரி போன்ல இருக்கு என்றதும் பார்த்தேன். மேரேஜிக்கு பிட்னு இருந்தது ஏதாவதுன்னா சார்லஸிடம் மனசு விட்டு பேசும்மா” என்றார்.
சாராவுக்கு சுற்றி இருந்த எல்லா மனிதர்களும் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் போல தோன்றியது. அதனால் சரியென்று தலையாட்டின்ள்.
அவள் கையை மெதுவாக பிடித்தான் சார்லஸ்.
“ஷீ இஸ் பைன் சார். அதுல டவுட் வேண்டாம்” என்றான் ஆணித்தரமாக. சார்லஸ் குரல் இந்த முறை உறுதியானது.
ஸ்டெல்லா ஏளனமாய் சிரித்தார்.
“ஓ..ஓகே.. குட் குட். டேக் கேர் சார்லஸ். நிர்மலா நான் அப்ப வர்றேன்.” என்றார்.
ஸ்டெல்லா அவர்கள் சென்றதும், அவர் விட்டுச் சென்ற காயம் அங்கேயே இருந்தது.
வீட்டிற்கு வரும் வழியில், “லண்டன்ல இருந்து வந்துட்டாங்க. தூரத்து முறையில பேமிலி ரிலேட்டிவ். சர்ச்ல அடிக்கடி பார்ப்பேன். நல்ல பிரெண்ட்லி. அவரோட ஸ்டூடண்ட் ரோல் மாடல். ஆக்சுவலி நான் இந்த துறையில வர்றப்ப அம்மா தடுத்துட்டாங்க. இவர் தான் அம்மாவிடம் ஊக்கம் தந்து சப்போர்ட் செய்து படிக்க ஆரம்பிச்சேன். விருந்துக்கு கூப்பிட்டுருக்காங்க சாரா. பட் நேரம் இருக்காது. ஜோசப் கேஸால எப்படியும் எங்கயும் போகமுடியாது.
பச்… எனக்கு நம்ம ஹனிமூன் வேற கேன்சலாகுது. அதான் கவலையே.” என்று கூற, படகில் அமைதியாக கேட்டாள்.
சாரா இயற்கை சூழலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நேரம் மனதில் சாத்தான் புகுந்து ஆட்சி செய்யும். கர்த்தர் என்ன தான் தன் அருகே அமர்ந்திருந்தாலும், மனதில் குரங்கு வித்தை காட்டுமாம் இந்த சாத்தான் எண்ணங்கள். அப்படி தான் தேவதூதனாக சார்லஸ் இருந்தும், இவருக்கு நிஜமாகவே துகிரா சேச்சி நல்ல பொருத்தம். அவங்களையே விவாகம் செய்திருந்தால் இந்நேரம் சார்லஸுக்கு ஒரு குழந்தை உருவாகியிருக்கும்.
துகிரா சேச்சியை மறக்க இயலாது, என்னை போல ஒரு பைத்தியத்தை வேற மணந்து கர்த்தர் முன்னே கைப்பிடித்த காரணத்தால், விவாகத்திற்கு விசுவாசமாக இருக்க முயற்சி செய்கின்றாரா?’ என்று தான் சார்லஸை கவனித்தாள்.
சார்லஸோ கண்ணை சுருக்கி, புருவம் உயர்த்தி, என்ன என்று கேட்டான். ஒன்னுமில்லா’ என்று உலறியவளை கண்டு கண்சிமிட்டி விளையாடினான்.
சாராவுக்கு அவனது குறும்பு இதயத்தை குளிர வைக்க, முறுவலிட்டாள்.
மனதில் ஆயிரம் எண்ணங்கள் குறுக்கும் மறுக்கும் தேவையற்ற ஆணியாக மனதில் சுமந்தவளுக்கு, பூமழையாக சார்லஸின் குறும்புத்தனம்.
படகு கரைக்கு வந்ததும் மற்றவரும் நிர்மலா மோஸஸ் இறங்கினார்கள். சார்லஸ் சாரா மெதுவாக தான் நடந்தனர்.
“சாரா.. நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்.”
சாரா அவனை என்னவென பார்த்தாள்.
“ஜோசப் நிலைமை… கிரிடிக்கல்னு சொன்னேன்ல.. வில்லியம்ஸும் தபித்தாள் ஆன்ட்டியும் நான் அவனோட ரெகுலரா இருக்கணும்னு நினைக்கறாங்க. உனக்கு சம்மதம்னா டெய்லி அவனோட கூடயிருந்து வழிநடத்தற விதமா போக வேண்டியதா இருக்கும்” என்றான்.
அவள் கண்கள் மெதுவாக மங்கியது. தொண்டை அடைத்தது.
சார்லஸ் வேறு தொடர்ந்தான்.
“நான் கிளினிக்கை வேற இடத்துக்கு ஷிப்ட் பண்ண நினைக்கிறேன்.” சாரா அமைதியாக கேட்டாள்.
இந்த நேரம் சாரா மனதில் போட்டு குழப்பிய விஷயத்தை சார்லஸிடம் உரைத்தால் அது வேறுவிதமாக செல்லும். என் மனைவி குணமாகி இருக்கின்றாளென கேஸ் சம்மரியால் திடப்படுத்திக் கொண்டு, என் மீது கருணையோ அன்போ சொலுத்தும் சார்லஸிற்கு, மேலும் குழப்பத்தை விதைக்க கூடாது.
க்ளினிக்கிலும் பேஷண்ட், வீட்டிலும் என்னை போன்றவள் என்று சார்லஸ் சலித்திட வாய்ப்புண்டு. இதில் நிர்மலா அத்தை வேறு ஏதாவது ஏற்றி விடுவாரென அச்சத்தில் மிரண்டாள்.
முகம் தெரியாத ஜோசப்பின் நலத்திற்காக, மனதால் பேசி அந்த ஜோசப்பிற்கு தன்னம்பிக்கை வரவழைத்து காப்பாற்ற நினைத்து போராடும் திடத்திற்கு சார்லஸிற்கு தடையின்றி சிகிச்சை வழங்க கூறுவதே சிறந்தது. ஹனிமூன் செல்லாமல் தடைப்படுவதாக எண்ணினாலும், இது எங்கள் இருவரின் சந்தோஷத்திற்கானது மட்டுமே.
அதை சார்லஸ் சாக்ரிபைஸ் செய்யும் பொழுது அவருக்காக நான் காத்திருக்க மாட்டேனா?’ இப்படி தான் சாரா மனதில் எண்ணம் உருவானது.
“ஹே சாரா… நான் பேசியதை கவனிச்சியா இல்லையா?” என்று உலுக்க, “ஆஹ்.. ம்ம்” என்றாள்.
“உன்னை மிஸ் பண்ணுவேனோனு நினைச்சேன். பட்… நீயே சம்மதிக்கும் போது தான் ரியலி ஹாப்பி. அப்பறம் க்ளினிக் பார்த்து மாத்தற வரை நான் ரொம்ப பிஸி. ஏய்… அம்மாவிடம் எதுவும் ஷேர் பண்ண வேண்டாம். ஆக்சுவலி… நீ பேசறது சந்தேகம் தான். இருந்தாலும் சொல்லி வைக்கிறேன். ஏதாவது யார் மூலமாவது கேட்டா தெரியலைனு சொல்லு.” என்று கூற, நிர்மலா சாராவை எரிப்பது போல பார்ழவையிட்டார்.
மோஸஸோ “நிர்மலா.. அவ வரலைன்னா விடு. பையனும் அவளும் பேசட்டும். நீ எப்பவும் லஞ்ச் செய்யறது தானே. இதென்ன அவ வந்து செய்யட்டும்னு வம்பு பண்ணற” என்றார்.
“வீட்டுக்கு வந்ததிலருந்து ஆயா இருக்கா. ஏதாவது செய்யட்டுமே. இப்ப என்ன?” என்று நொடிந்துக் கொண்டார்.
மோஸஸுக்கு பெண்கள் விஷயத்தில் தலையிட பிடிக்காமல் அறைக்குள் பதுங்கிக் கொண்டார்.
சாரா சார்லஸ் இருவரும் இணைந்து நடந்துவர, “ஏய் நில்லு. மேடம் என்ன ஏஞ்சல் மாதிரி வெள்ளை சுடிதார் போட்டு ஹாயா வீட்டுக்குள்ள படுத்து படுத்து தூங்கறதுக்கு வந்தியா? போய் லஞ்ச் ரெடிப்பண்ணு” என்றார்.
சாரா திடுக்கிட்டு மௌனமாய் சார்லஸை கண்டு கிச்சனுக்கு சென்றாள்.
“என்னம்மா மாமியாரா அவதாரம் எடுக்கறியா?” என்றான் சார்லஸ்.
“என்னடா.. எனக்கு தலைவலி எடுக்கு. அவளை சமைக்க சொன்னா தப்பா? ஏன் செய்யக்கூடாதா?” என்று கேட்டு சண்டை பிடிக்கும் நோக்கத்தில் வர, “அச்சோ… டாக்டர் சாரே… நிங்கள் ஏன் தப்பா நினைக்கு. நான் குக்கிங் பண்ணும். நிங்கள் உங்கள் ஜோலியை பாருங்கள். நம்ம வீட்டுக்கு நான் சமைச்சிடுவேன். குக்கிங் எல்லாம் எனிக்கு பெரிய விஷயமில்லா” என்று சாந்தப்படுத்த முயன்றாள்.
சார்லஸோ சாரா நல்லவிதமாக எடுத்துக் கொள்ளவும், அமைதியாக விட்டுவிட்டான்.
ஆனால் உள்ளுக்குள் அன்னை அதிகப்படியாக பேசுவது போல தோன்றியது. அதுவும் இன்று ஸ்டெல்லா டாக்டர் ரிச்சர்ட் இருவரையும் பார்த்ததால் ஏதேனும் சாராவை மனதை காயப்படுத்தும் விதமாக பேசிவிடுவாரோ என்று பாதுகாப்பாக நிற்க எண்ணினான். ஏற்கனவே அன்னை கிடைத்த கேப்பில் சாராவை காயப்படுத்தும் விதமாக துகிராவை இழுத்து பைத்தியம் என்று விளித்து பேசியதை அறியாது போனான்.
-தொடரும்.
மே தின சிறப்பை முன்னிட்டு தி லீடர் கதை பதிவிடறேன். இந்த கதை முடியவும் தான் அந்த கதை அப்டேட் வரும். இன்னிக்கு முதல் அத்தியாயம் வரும். ரெஜிஸ்டர் செய்து வாசிங்க.
