Skip to content

ஏதோ நினைத்து

1 Posts
1 Users
0 Reactions
108 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 691
Topic starter  

ஏதோ நினைத்து தவிக்கின்றேன்
என்னில் உன்னை சிறை வைத்தேன்
கண்ணில் உன்னை காண்கின்றேன்
கவிதை இசைத்தே கதைக்கின்றேன்
கனவில் நீ வர துடிக்கின்றேன்
கவலைகள் உன்னில் மறக்கின்றேன்
காதல் இதுயென அறிகின்றேன்
எதையும் அறியா உன் மனதோ
என்னில் புன்னகைத்தே பேசிடுதே
நாளும் புன்னகைத்து பேசினாலும்
வாழும் எந்தன் மனசாட்சி
மண்ணில் புதைந்திடும் முன்னாலே
மனதை இருப்பதை சொல்லிடுவேன்
என்றே சூளுரைத்து தவிக்கிறதே
                       --  பிரவீணா தங்கராஜ் .


   
ReplyQuote