The leader-11
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 11)
இந்த ஷ்ரத்தாவுக்கு வேற வேலையே இல்லையா ?
ஒண்ணு இறந்து போன அப்பாவை நினைச்சு ஃபீல் பண்றது, இல்லையா சத்ரியன் கிட்ட கண்டபடி வாயை கொடுத்து வினையைத் தானாவே வாங்கி கட்டிக்குறது.
மெடிக்கல் ஸீட் கிடைக்கிறது எத்தனை பெரிய விஷயம், கிடைச்சதை பிடிச்சுக்கிட்டு அப்படியே மேலே ஏறி வரதை விட்டுட்டு, எதுக்கு சும்மா, சும்மா சத்ரியனை சீண்டிக்கிட்டே இருக்கணும். ஒண்ணு படிச்சு நல்ல டாக்டர் ஆகட்டும், இல்லையா சத்ரியன் சொல்ற மாதிரி அவன் படுக்கைக்கே போய் அவனை பழி வாங்கி தள்ளட்டும். அதை விட்டு சும்மா, சும்மா எங்கப்பாவை கொன்னுட்டான், கொன்னுட்டான்னு சொல்லி சொல்லியே இல்லாத வம்பை எல்லாம் விலைக்கு வாங்கிட்டிருக்காள். அவங்கப்பா நியாயமான வக்கிலா இருந்துட்டா மட்டும் பிழைச்சிருப்பாரா என்ன ?
எப்படியும் சத்ரியனுக்காக வாதாடலைன்னாலும் அப்பவும் போட்டுத் தள்ளியிருப்பான்.
இப்ப சத்ரியனோட எதிரி யாரோ போட்டுத் தள்ளிட்டாங்க. தன்னோட உயிரை கொடுத்து மெடிக்கல் ஸீட்டை வாங்கி கொடுத்திருக்கார் தானே திவாகர்...? அப்ப நல்லா படிச்சு டாக்டர் ஆகுறது தானே அவளோட லட்சியமா இருக்கணும், அதை விட்டு கண்ட இடத்துல ஊரை சுத்திட்டிருக்கிறா. நோஞ்சான் மாதிரி இருந்துக்கிட்டு எல்லார் மேலேயும் கையை நீட்டுறா, கடுப்பேத்துறா, கடுப்பேத்துறா, வாய் பேசுறா. கையாலாகதவங்கத் தான் இப்படி வாயை விடுவாங்க, இவளும் அப்படித்தான் இருக்கிறாள். இத்தனைக்கும் ஒரு தற்காப்பு கலை கூட கத்து வைச்சுக்கலை. அதுக்கே இந்த ஆட்டம் ஆடுறா, ஒருவேளை, எல்லாத்தையும் தெரிஞ்சு வைச்சிட்டிருந்தால்.. சத்ரியனை மிஞ்சிடுவா போல. போடி, போடி
புழைக்கத் தெரியாதவளே.
😴😴😴
CRVS (or) CRVS2797
Leave a reply
-
The leader-10
2 days ago
-
The leader-9
3 days ago
-
The leader-8
4 days ago
-
The leader-7
5 days ago
-
The leader-6
6 days ago
Recently viewed by users: Kavibharathi 50 minutes ago.
- 61 Forums
- 1,631 Topics
- 2,132 Posts
- 7 Online
- 2,252 Members
