Notifications
Clear all
நான் ஏட்டில் எழுதியதை
Praveena-காதல் கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
944
Views
முந்தைய நாட்குறிப்பை யெடுத்து
தூசு தட்டி நீயும் நானும் சந்தித்த
இனிய நினைவுகளை படித்து ரசித்து
உன் மீதுள்ள அதீத காதலில்
தனிமையில் சிரிக்கின்றேன்
அதே காதல் நம்மில் உள்ளதாயென்ற
மிக பெரிய கேள்வி வட்டம்
என்னுள் சூழ்ந்திட
அக்கணம் வந்திட்ட உன்னை
விழியிலே வினாக்கள் தொடுக்கின்றேன்
என் முன் நெற்றியில் வலிக்காது முட்டி
நாசியோடு நாசி உரசி
அன்று நடந்த நிகழ்வுகளை அப்படியே
கண் முன் அச்சு பிசகாது
நக பூச்சு உட்பட அனைத்தும்
ரசனையோடு விவரித்து சொல்லி
அசரடிக்க வைக்கின்றாய்...
நான் ஏட்டில் எழுதியதை
நீ மனதில் எழுதியதை வியந்து
அதே காதல் நம்மில் உள்ளதாயென்ற கேள்வி
புள்ளியாய் மறைந்து
உன் மீது உள்ள காதலை
இமயத்தை விட உயர வைத்திட செய்து விட்டாய் .
-- பிரவீணா தங்கராஜ் .
Posted : May 16, 2024 4:04 pm
Leave a reply
Forum Information
- 57 Forums
- 1,687 Topics
- 2,268 Posts
- 0 Online
- 2,297 Members
Our newest member: Nivetha_1409
Latest Post: The leader-50 (முடிவும் துவக்கமும்)
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
