Notifications
Clear all
🐘 வாரணம் நாங்கள் எங்கே செல்ல…? 🐘
Praveena - தன்னம்பிக்கை, சமூகம்,இயற்கை கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
470
Views
இதோ இங்கு தான் இருந்தன
இவ்விடம் தான் என்பதும் யாம் அறிவேன்
இன்று ஏனோ எங்களை விரட்டுகின்றார்கள்
இது மனிதர்கள் இருக்குமிடம் என்றே
ஓங்கி வளர்ந்த என் தாயின் கிளைகளை
வெட்டி வீழ்த்தியே ஊனமாக்கினார்கள்
பச்சைபட்டாடை என்றே திகழந்த உடைகளை
வேரோடு அபகரித்து வன்முறை செய்தாயிற்று
காணும் இடமெல்லாம் பூத்த முல்லைப்பூ
காணாமல் போனது
நாங்கள் பிளிறிற்று
கூடி பருகிய ஆற்றோடை நீர்கள்
கண்ணனுக்கு எட்டிய வரை காணவில்லை
இதில் எங்களை அவர்கள் இருக்கும் இடத்தில்
வந்து அச்சுறுத்துகின்றோம் என்ற பெயர் வேறு
இதோ வாரணம் எல்லாம் ஒன்று திரட்டி
கூண்டுக்குள் ஏற்றி விட்டார்கள்
அவர்களை போலவே கை ஏந்தி
யாசகம் கேட்டிடும் இழிவு நிலைக்கு தள்ளி...
காடு இடுகாடு ஆனதேனோ?!
--பிரவீணா தங்கராஜ்.
வாரணம்-யானை
இடுகாடு-சுடுகாடு
Posted : June 26, 2025 2:18 pm
Topic Tags
Leave a reply
Forum Information
- 61 Forums
- 1,669 Topics
- 2,213 Posts
- 8 Online
- 2,265 Members
Our newest member: Madona
Latest Post: The leader-32
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
