The leader-27
தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 27)
இப்ப யோகேஷ் சொன்னதை யோசிச்சு அவ என்ன பண்ணப் போறாள் ? கிங்பின்னோட லைஃப் ஸ்டைல் தெரிஞ்சு வைச்சுக்கிட்டும் அவள் என்ன செய்யப் போறாள்...? ஷ்ரத்தா ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் பொண்ணு, அதுக்குள்ளத் தானே அவளோட வாழ்க்கை இருக்கணும்ன்னு நினைப்பாள், யோசிப்பாள். இப்ப சத்ரியனோட வாழ்க்கை வரலாறு தெரிஞ்சதால அவனோட வாழவாத் தோணும் ? அவனோட வாழ்க்கையே நித்ய கண்டம், பூர்ண ஆயுசு என்கிற மாதிரி இழுத்துக்கோ, பறிச்சுக்கோன்னு இருக்குது. எப்ப வந்து, எந்த நேரத்துல, எந்த மூலையிலிருந்து.. துப்பாக்கியை வைச்சு சுடுவானா, கத்தியை கொண்டு குத்துவானா, சாப்பாட்டுல பாய்சன் கலந்துடுவானான்னு
பயந்துக்கிட்டே வாழற வாழ்க்கை அவனோடது. பாத்ரூம்க்கு போனாலும் பாடி கார்ட்ஸ் இல்லாமல் போக முடியாத கச்சாட வாழ்க்கை. இதுல அவனைப்பத்தி எதுக்கு யோசிக்கணும்...?
அவளோட அப்பா மட்டும் அவனுக்காக வாதாடாமல் இருந்திருந்தாலே அவ வாழ்க்கை நிம்மதியா அமைஞ்சிருக்குமோ என்னவோ ? ஆனா, எப்படியும் அவர் உயிர் அப்ப சத்ரியனாலேயே போயிருக்கும். அப்படி போயிருந்தாலும் பிரச்சினை இவளுக்கு இருந்திருக்காது, இப்ப பாருங்க ஒரு கெட்டவனுக்கு துணைக்குப் போய், இன்னைக்கு அவரோட பொண்ணோட உயிரும் மானமும் ஊசாலாடிக்கிட்டிருக்கு... இந்த அவஸ்தை அவளுக்குத் தேவையா ? இல்ல கிங்பின்னுக்கு வாழ்க்கைப் பட்டுட்டா மட்டும் அவ நிம்மதியா வாழ்ந்துட முடியுமா..? எப்படியும் அவளுக்கும் அந்த தலைக்கு மேல கத்திங்கிற வாழ்வா, சாவா என்கிற வாழ்க்கைத்தான். இதுல என்னாத்தை யோசிச்சு முடிவெடுக்கிறதாம்...?
இனி எப்படியும் உயிர் பயத்தோடத்தான் வாழணும் போல.
😀😀😀
CRVS (or) CRVS2797
Leave a reply
-
The leader-50 (முடிவும் துவக்கமும்)
2 months ago
-
The leader-49
2 months ago
-
The leader-48
2 months ago
-
The leader-47
2 months ago
-
The leader-46
3 months ago
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 3 Online
- 2,306 Members
