Notifications
Clear all
உயிரை மீட்குமோ காதல்
Praveena-காதல் கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
975
Views
ஒரு வாரம் ஓடிப்போனது
அச்சண்டையின் பாதிப்பு
இருவரும் பேசாமடந்தையாக
உன் ஒவ்வொரு அசைவையும்
பார்த்துப் பார்த்து
எப்பொழுது பேசுவாயென
சிறு இதயம் ஏங்கியே தவித்து
நீண்ட மனப்போராட்டத்திற்கு பின்
உன் கம்பீரத்திற்கு குறைவு வந்திடாது
ஒரு வழியாய் மவுனத்திற்கு விடை கொடுத்து
உன்னிடமே கேட்டு விட்டேன்
எப்படி உன்னால் மட்டும்
என் பார்வையை புறக்கணித்து
என் மேனியை தழுவாது
என் மூச்சை சுவாசிக்காது
எப்படி இருக்க முடிகின்றதென்று
நீயோ
என் கண்களை ஆழமாகப் பார்த்து
சுவாதீனமாக கூறுகின்றாய்
உயிரற்ற உடலுக்கு என்ன தெரியும்
நீ பேசிய பின்பு தானே
உயிர் வந்தது என்கிறாய்...
பிரவீணா தங்கராஜ் .
Posted : May 16, 2024 4:41 pm
Leave a reply
Forum Information
- 61 Forums
- 1,687 Topics
- 2,265 Posts
- 9 Online
- 2,281 Members
Our newest member: Vishalvv
Latest Post: The leader-47
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
